Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 114


கீதையில் சில சொற்றொடர்கள் - 114


अहम् आत्मा सर्व भूताशय स्थितः  ...  (अध्याय १० - श्लोक २०)
அஹம் ஆத்மா ஸர்வ பூதாஶய ஸ்திதஹ ...  (அத்யாயம் 10 - ஶ்லோகம் 20)
Aham Aatmaa Sarva Bhootaashaya Sthitah ... (Chapter 10 - Shlokam 20)

அர்தம் :  அனைத்து ஜீவன்களிலும் உறைந்திடும் ஆத்மா நானே ...

ருத்ரர்களில் ஶங்கரன் நான் (சொற்றொடர் 116) என்ற சொற்றொடரைப் பற்றி எழுதி விட்டு இதை எழுதுகிறேன் .  கீதை அத்வைதத்தின் ஸாரம் என்பதை ஸந்தேஹமற ப்ரகடனம் செய்யும் மற்றொரு கோஷம் இது .

அனைத்து ஜீவன்களுள் நிலையாக வீற்றிருக்கும் ஆத்மா நான் .  இது உண்மை இல்லை , வெறும் கல்பனை என்று வைத்துக் கொள்வோம் .  அவ்வாறு நினைத்தாலும் இது ஒரு அழகான கல்பனை .  அத்புதமான பார்வை அளித்திடும் ஒரு கல்பனை .  உலகம் வெவ்வேறாகத் தெரிகிறது .  வகை வகையான ஜீவன்கள் ..  ஸ்தாவரங்கள் ...  மரம் , செடி , கொடி , புல் , பூண்டு என்று லக்ஷக் கணக்கான ஜீவன்கள் ..  ப்ராணிகள் ...  நீர் வாழ் , நிலம் வாழ் , பக்ஷிகள் , ஊர்வன , காட்டு வாழ் , நகர வாழ் என்று லக்ஷக் கணக்கான ப்ராணிகள் ...  மநுஷ்ய இனத்திலும் எத்தனை வகைகள் ...  கறுப்பன் , சிவப்பன் , சப்பை மூக்கன் , கூர் மூக்கன் , உயரம் குள்ளம் என்று லக்ஷக் கணக்கான வகைகள் ...  இவ்வகைகள் அனைத்தும் வெவ்வேறு என்று கருதுவதால் தான் யுத்தங்கள் , பகை உணர்வுகள் , சுரண்டல்கள் , அடிமைப் படுத்தல் , அழித்தல் , ஆகிய நாஶகார செயல்கள் அனைத்தும் .

அனைத்தும் ஒன்றே என்ற ஶ்ரத்தை மாத்ரமே , என்னில் உள்ளதே இவை அனைத்திலும் உள்ளது என்ற ஶ்ரத்தை மாத்ரமே என்னை மற்ற ஜீவன்களுடன் பிணைத்திடும் .  என் மனஸில் மற்ற ஜீவன்களைப் பற்றி அன்பு , அக்கறை , கருணை ஏற்படுத்திடும் .

வேறுபாடுகளைப் பார்த்தால் ஒன்று என்ற பாவனை ஏற்பட மறுக்கிறது .  வேறுபாடுகளைத் தாண்டிய ஏதோ ஒன்று அனைத்திலும் உறைகிறது என்ற கருத்தே , அது கல்பனையாக இருந்தாலும் , ஒருங்கிணைக்கும் பார்வையை ஏற்படுத்தும் .

இன்று விக்ஞானமும் இதே கருத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது .  வேறுபாடுகளைப் பார்த்தது .  நுட்பமான பார்வையை வளர்த்து , அணுவைப் பார்த்தது .  அணுவைப் பிளந்து மின்னணுவைப் பார்த்தது .  அதையும் தாண்டி ஆற்றலைப் பார்த்தது .  ஆற்றலுக்கும் அப்பால் உள்ளதைத் தேடிக் கொண்டிருக்கிறது .

நம் ஹிந்து முன்னோர்கள் வேறுபாடுகளைக் கண்டனர் .  வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்றைத் தேடினர் .  பரமனைக் கண்டனர் .  பரமனின் ஒரு அம்ஶமே அனைத்து ஜீவன்களிலும் இருப்பதைக் கண்டனர் .  பல இல்லவே இல்லை .  ரெண்டும் இல்லை .  ஒன்றுதான் . என்று அறிவித்தனர் .  அதனால்தான் , "வஸுதைவ குடும்பகம்" (உலகம் ஒரு குடும்பம்) ; "ஸ்வதேஶோ புவன த்ரயம்" (மூன்று உலகங்களும் ஸ்வதேஶமே .  என்னுடையதே) ; "யத் பிண்டே .  தத் ப்ரஹ்மாண்டே" (பிண்டத்தில் உள்ளதுதான் ப்ரஹ்மாண்டத்தில் உள்ளது) ; "ஸர்வம் கல்விதம் ப்ரஹ்மம்" (அனைத்தும் ப்ரஹ்மமே) ; "அஹம் ப்ரஹ்மாஸ்மி" (நான் ப்ரஹ்மம்) ;  "தத் த்வம் அஸி" (அது நீயே) ; என்றெல்லாம் ஹிந்துக்களால் முழக்க முடிந்தது . இம்முழக்கத்திற்கு ஏற்ற வாழ்க்கை முறையை இங்கு பாரதத்தில் நிறுவ முடிந்தது .  வெறும் கோஷமாக இல்லாமல் , ஆழ்ந்த ஶ்ரத்தையுடன் இந்தக் கருத்தை ஏந்தி , உலகெங்கும் சென்று , ஆங்காங்கு வாழும் ஜனங்கள் உயர்ந்த வாழ்க்கை வாழ்வதற்கு வழி பகரக் கூடிய ர்ஷிகளைப் படைக்க முடிந்தது .  அனைவரும் "நான் தனி , நான் வேறு , நீ வேறு" என்று கூறி , பிரிந்து செல்வதற்கு முயன்றிடும் உலகத்தில் ... "இல்லை .  நாம் அனைவரும் ஒன்று .  நம் அனைவருள்ளும் ஒரே பரமன் உறைகிறான் .  பல்வேறாகத் தோன்றும் நம் அனைவரின் / அனைத்தின் அனைத்து அஸைவுகளுக்கும் , அனைத்து செயல்களுக்கும் , அனைத்து ஆற்றல்களுக்கும் காரணமானவன் ஒருவனே .  பல அல்ல .  ரெண்டு கூட இல்லை . ஒன்றுதான் ." என்ற அத்வைதக் கருத்தை த்ருடமாக , தொடர்ந்து , மீண்டும் மீண்டும் சிந்தித்து வருகிறோம் .  கூறி வருகிறோம் .  வாழ்ந்து வருகிறோம் .

இங்கு பகவான் ஸ்ரீ க்ருஷ்ணனும் அத்வைத ஸாரமான கீதையில் அதே அறிவிப்பைச் செய்கிறான் .  "அனைத்து ஜீவன்களில் நிலைத்திடும் ஆத்மா நானே" ....

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...