Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 115


கீதையில் சில சொற்றொடர்கள் - 115


इन्द्रियाणां मनश्चास्मि  ... (अध्याय १० - श्लोक २२)
இந்த்ரியாணாம் மனஶ்சாஸ்மி  ...  (அத்யாயம் 10 - ஶ்லோகம் 22)
Indriyaanaam Manaschaasmi  ... (Chapter 10 - Shlokam 22)

அர்தம் :  இந்த்ரியங்களில் நான் மனஸ்  ...

நமக்கு ஐந்து ஞானேந்த்ரியங்கள் .  தர்ஶனம் (பார்க்கும் ஆற்றல்) , ஶ்ரவணம் (கேட்கும் ஆற்றல்) , ஸ்பர்ஶனம் (தொட்டு உணரும் ஆற்றல்) , ஜிக்னன் (நுகரும் ஆற்றல்) மற்றும் அஶ்னன் (ருசித்து உணரும் ஆற்றல்) .  இந்த ஆற்றல்களுக்கான கருவிகள் முறையே கண் , காது , தோல் , நாஸி மற்றும் நாக்கு .

இந்தக் கருவிகள் அத்புதமானவை .  அவை செய்யும் கார்யங்களும் மஹத்தானவை .  நுட்பமானவை .  நமக்கு ஆனந்தம் அளிப்பவை .  உலகத்தின் நிறங்களையும் , ரூப லாவண்யங்களை நமக்குப் பரிமாறுவது கண் .  கண் மிகச் சிறந்த கருவி என்று தோன்றிடும் .  ஆனால் , கொஞ்ஜம் ஆராய்ந்தால் கண் ஒரு த்வாரம் மாத்ரமே என்பது விளங்கிடும் .  பழைய காலத்தில் இருந்த கேமராவின் ஷட்டர் போல .  வெளிக் காக்ஷிகளை உள்ளே நுழைய விடுவதுடன் அதன் வேலை முடிந்தது .  உள்ளே வந்திருக்கும் காக்ஷிகளை அலசி , ஆராய்ந்து நிர்ணயத்திற்கு வருவதெல்லாம் பின்னால் இருக்கும் மூளை மற்றும் நரம்புகளின் வேலை .  இவை எல்லாம் தத்தம் கார்யங்களைச் செய்து முடித்த பின் , அந்தக் காக்ஷியின் ஆனந்தத்தில் லயிப்பது மனஸ் .  அதில் ப்ரமித்து மயங்குவது மனஸ் .  இதே போலத்தான் மற்ற இந்த்ரியங்களும் அவற்றின் கருவிகளும் .  இவற்றுக்குப் பின்னால் ராஜாவைப் போல அமர்ந்திருப்பது மனஸ் .

மனஸ் இருக்கிறதா ?  இருக்கிறது ஆனால் இல்லை .  இல்லாமல் இருக்கிறது .  எங்கு இருக்கிறது ?  எங்கும் இருக்கிறது ..  எங்கும் இல்லை .  மனஸ் தான் இந்த இந்த்ரியங்களை இயங்குகிறதா ?  இல்லை .  ஆனால் , மனஸ் இல்லை என்றால் இந்த்ரியங்கள் செயலற்றுப் போய் விடுகின்றன .  மனஸ் கண்களுக்குப் பின்னால் இல்லை என்றால் , காக்ஷிகள் உள்ளே பதிய மறுக்கின்றன .  இவை அனைத்தும் பரமனின் லக்ஷணங்கள் .

இந்த்ரியங்களில் மனஸ் நான் ...  என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் .

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...