Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 119


கீதையில் சில சொற்றொடர்கள் - 119


स्थावराणां हिमालयः ...  (अध्याय १० - श्लोक २५)
ஸ்தாவராணாம் ஹிமாலயஹ ...  (அத்யாயம் 10 - ஶ்லோகம் 25)
Sthaavaraanaam Himaalayah ...  (Chapter 10 - Shlokam 25)

அர்தம் :  ஸ்தாவரங்களில் , அஸைவற்றவைகளில் , நான் ஹிமாலயம் ...

பாரதம் ஒரு புண்ய பூமி , ஒரு தேவ பூமி என்று சொல்வதற்கு பளிச்சென்று உள்ள சான்று ஹிமாலயம் .  ஹிம அல்லது ஹேம என்றால் பனி .  பனியின் உறைவிடம் .  பனி மலை .

பாரதத்தின் வடமேற்கு ஆஃப்கானிஸ்தான் எல்லையில் இருந்து வடகிழக்கு சீன - பர்மீய எல்லை வரை ஒரு பாதுகாப்புக் குடையைப் போல , ஓர் உயர்ந்த கோட்டைச் சுவரைப் போல நிற்கிறது ஹிமாலயம் .  வடக்கில் இருந்து வீஸிடும் குளிர்க் காற்றைத் தடுத்து , பாரத தேஶத்தைக் கடும் குளிரில் இருந்து காப்பது ஹிமாலயம் .  தென் மேற்கில் இருந்து வீஸிடும் பர்வ மழைக் காற்றைத் தடுத்து , மீண்டும் பாரதத்தின் கிழக்கு ப்ரதேஶங்களுக்கு திருப்பி அநுப்புவது ஹிமாலயம் .  இதன் மூலம் , பாரதத்தின் பெரும்பாலான ப்ரதேஶங்களில் வர்ஷந்தோறும் நல்ல மழைக்கு ஏற்பாடு செய்வது ஹிமாலயம் .  பாரதத்தின் ஜீவ நதிகளின் உத்கம ஸ்தானமாக இருந்து , பாரதத்தின் அபாரமான நீர் வளத்திற்கும் மண் வளத்திற்கும் காரணமாக அமைந்தது ஹிமாலயம் .  ஆக , பாரதத்தின் பாதுகாப்பு , மிதமான ஶீதோஷ்ணம் , பரவலான மழை , வளமான பொருளாதாரம் இவற்றில் ஹிமாலயத்தின் பங்கு பெரும் பங்கு .

குன்று தோறும் கோயில் என்ற நம்பிக்கைக்கும் , இந்த நம்பிக்கைக்கு பாரத தேஶம் முழுவதும் செயல் வடிவம் கிடைத்ததும் ஹிமாலயத்தினாலே .

ஹிமாலயம் ஸ்ரீ ஶிவனின் வாஸஸ்தலம் .  அதற்கும் மேல் , ஹிமாலய மலையே ப்ரத்யக்ஷ ஶிவ ஸ்ரூபம் .  ஸ்ரீ விஷ்ணுவின் திவ்ய க்ஷேத்ரங்களும் அம்பாளின் ஶக்தி பீடங்களும் தீர்தங்களும் நிறைந்த மலை ஹிமாலயம் .  பாரதம் முழுவதும் ஒவ்வொரு மலையையும் பரமனின் ஸ்வரூபமாகக் கருதி , உச்சியில் ஆலயம் எழுப்பி , கிரி ப்ரதக்ஷிணங்கள் நடக்கின்றன என்றால் அதற்கு நம் ஆழ் மனஸில் கம்பீரமாக நிற்கும் ஹிமாலயம் தான் காரணம் .

காடு வா வா என்று அழைக்கிறது என்பார்கள் .  காடு என்பது சுடுகாடு இல்லை .  காடு என்பது ஆரண்யம் .  வனம் .  உலக பந்த பாஷங்களில் இருந்து விடுபட்டு , ராக த்வேஷங்களைத் துறந்து வைராக்யம் அடைய வேண்டும் , ஹிமாலயத்திற்குப் போய் விட வேண்டும் என்ற பேரவா தான் இந்த சொல்லிற்கு மூலம் .  ஹிந்துக்களின் மனஸில் த்ருடமாகப் புதைந்து இருக்கிறது இந்த ஸுப்த ஆஶை அல்லது கனவு .  இதை ஆயிரம் பல்லாயிரம் வர்ஷங்களாக உயிருடன் வைத்திருப்பது ஹிமாலய மலை .  இதைச் செயல் படுத்த முடியாமல் போகலாம் .  ஆனால் , கனவு மாத்ரம் உயிருடன் இருக்கிறது என்பது ஸத்யம் .  போகிறவர்கள் அனைவருக்கும் ஹிமாலயம் தான் லக்ஷ்யம் .  அன்று ஆதி ஶங்கரன் முதல் இன்று ஸ்வாமி சின்மயானந்த , ஸ்வாமி தயானந்த வரை .  ஹிமாலயத்தை அடைய முடியாதவர்க்கு உள்ளூரில் கொல்லி மலை, திருவண்ணாமலை , பொதிகை மலை , குடகு மலை , அஹோபிலம் , பேடாகாட் என்று அநேக மலைகள் இருக்கின்றன என்பதும் ஸத்யம் .  எனினும் , இவை அனைத்தும் ஹிமாலயத்தின் சிறு வடிவங்களாகவே கருதப் படுகின்றன .  இவ்வகையில் , ஹிந்துவின் வாழ்க்கையில் ஆன்மீகத்திற்கு உறுதியான ஆதாரம் அமைத்தது ஹிமாலயம் .

ஒரு முறையேனும் ஹிமாலயத்தை அநுபவித்தவரால் தான் , ஹிமாலயத்தின் பேரமைதி , ஆன்மீகத் தூண்டுதல் , தெய்வீக வாஸம் நிறைந்த பாவனையைப் புரிந்து கொள்ள முடியும் .

ஸ்தாவராணாம் ஹிமாலயஹ  ...  ஸ்தாவரங்களில் நான் ஹிமாலயம் என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ... 

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...