Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 120


கீதையில் சில சொற்றொடர்கள் - 120


अश्वत्थः सर्व वृक्षाणाम्  ...  (अध्याय १० - श्लोक २६)
அஶ்வத்தஹ ஸர்வ வ்ருக்ஷாணாம்  ...  (அத்யாயம் 10 - ஶ்லோகம் 26)
Ashvatthah Sarva Vrukshaanaam  ... (Chapter 10 - Shlokam 26)

அர்தம் :  வ்ருக்ஷங்களில் நான் அஶ்வத்த மரம் ...

வ்ருக்ஷங்களில் , மரங்களில் நான் அஶ்வத்த மரம் ...  கடோபநிஷத் அஶ்வத்த மரத்தை ஸம்ஸாரத்திற்கு ஒப்பிடுகிறது .  கீதையின் 15 வது அத்யாயத்தில் அஶ்வத்த மரத்தின் வேர் ஸ்ரீ பரமாத்மனாகவும் மரம் மற்றும் கிளைகளை ஸம்ஸாரமாகவும் வர்ணிக்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் .  இங்கு அஶ்வத்த மரத்தில் என்னைக் காணலாம் என்கிறார் .

நமக்கு ஏதாவது வகையில் ஃபலன் தரும் மரம் அல்லது செடி பயிர் செய்யப் படுகிறது .  அதனால் அந்த ஸ்தாவரம் (Specie) ரக்ஷிக்கப் படுகிறது .  பஸிக்குக் காயும் பழமும் வேரும் கொடுக்கும் மரங்களும் மருந்திற்குப் பூவும் பட்டையும் கொடுக்கும் மரங்களும் வாஸனைக்காக உணவில் சேர்க்கப் படும் இலைகளைக் கொடுக்கும் மரங்களும் கூரைக்காகவோ உணவுத் தட்டுக்காகவோ இலையைக் கொடுக்கும் மரங்களும் பூஜைக்காகவும் அலங்காரத்திற்காகவும் புஷ்பங்களைக் கொடுக்கும் மரங்களும் விஶேஷ ப்ரயாஸை இன்றி ரக்ஷிக்கப் படுகின்றன .  அஶ்வத்த மரத்தின் புஷ்பமோ இலையோ காயோ பழமோ பட்டையோ மநுஷ்யனுக்கு எந்த வகையிலும் நேரடியான ஃபலன் தராதவை .  ஆனால் , இயற்கைக்கு பல வகைகளிலும் உபயோகமான மரம் .  வாயு மண்டலத்திற்கு அதிக அளவில் ப்ராண வாயுவை அளிக்கக் கூடிய மரம் .  விஶாலமாக வளர்வதால் நூற்றுக்கணக்கான பறவைகளுக்கும் வண்டினங்களுக்கும் உறைவிடம் அளிக்கக் கூடிய மரம் .  அஶ்வத்த மரத்தின் (அரஸ மரத்தின்) பழங்கள் சிறியவை .  விஶேஷமான ருசி இல்லாததால் மநுஷ்யன் போட்டிக்கு வராததால் பறவைகளுக்கும் அணில் வகை ப்ராணிகளுக்கும் ஆஹாரம் .  அஶ்வத்த மரம் உயரமாக வளர்வதால் மழையை ஆகர்ஷிக்கும் ஆற்றல் படைத்தது .

ஹிந்துவின் பார்வை அலாதியானது .  பொதுவாக மநுஷ்யன் தனக்கு நேரடியாக ஃபலன் தராத ஒன்றைப் பராமரிக்க மாட்டான் .  ஆனால் , அரஸ மரமோ இயற்கைக்கு மிக அதிக ஃபலன்களை அளிக்கக் கூடியது .  எனவே , பாதுகாக்கப் பட வேண்டியது .  அஶ்வத்த மரம் தெய்வ ஸ்வரூபமாக போற்றப் படுகிறது .  இம்மரத்தின் ஸருகுகள் வைதீக ஹோமத்திற்கு த்ரவ்யம் ஆகிறது .  அஶ்வத்த மர ப்ரதக்ஷிணம் வெகு விஶேஷமாகக் கருதப் படுகிறது .  அஶ்வத்த மரத்தின் அருகாமை கர்பத்தைக் காத்திடும் .  போஷித்திடும் .  அஶ்வத்த மரத்தின் அடி பாகம் ப்ரஹ்மனாகவும் மத்யம் மஹாவிஷ்ணுவாகவும் ஊர்த்வ பாகம் (மேல் பகுதி) ஶிவனாகவும் போற்றப் படுகிறது .  மூன்றின் ஐக்ய தெய்வமான தத்தாத்ரேயனாக அஶ்வத்த மரம் பூஜிக்கப் படுகிறது .

இயற்கையைப் போஷித்திடும் அஶ்வத்த மரம் மநுஷ்ய முயற்சியால் அல்லாமல் இயற்கையாகவே வேர் பிடித்து வளர்கிறது .  அரஸ மரத்தின் விதை ஸுவற்றிலோ கூரையிலோ கோபுரத்திலோ எங்கு விழுந்தாலும் அங்கு துளிர்த்து விடும் .  திரு ஆனைக்கோயில் ஸ்ரீ ஶங்கர மடத்தில் வேப்ப மரத்தின் அடிமரத்தின் மேல் வேப்ப மரத்திற்கு இணையாக வளர்ந்துள்ள அஶ்வத்த மரத்தைக் காணலாம் .

இயற்கையைப் படு வேகமாக அழித்து விட்டு , ஸமீப காலத்தில் மேற்கத்திய தேஶங்களில் , "Save the Earth" , "Conserve Nature" , "Save Bio - Diversity" என்றெல்லாம் பேஸத் தொடங்கி உள்ளனர் .  நாம் ஹிந்துக்கள் இயற்கையை அன்னையாக , படைப்பில் உள்ள ஒவ்வொரு ஜீவனையும் பரமனின் ஸ்வரூபமாக வேத காலத்தில் இருந்து கருதி வருகிறோம் .

பைபிளைப் பின் பற்றிய மேற்கத்திய தேஶங்களில் பெண்ணையே ஒரு ஜீவனாக நூறு வர்ஷங்கள் முன்பே ஏற்றுக் கொண்டுள்ளனர் .  அவர்களைப் பொருத்த வரையில் பெண் ஆணை ஸந்தோஷப் படுத்த , ஆணின் விலா எலும்பில் இருந்து உருவாக்கப் பட்ட ஒரு ஜடம்தான் .  இன்றும் மேற்கத்திய ஸமூஹம் பெண்ணை ஒரு போகப் பொருளாகத்தான் கருதுகிறது .  போகப் பொருளாகப் பயன் படுத்துகிறது .  அவளும் அதற்கு உடன் படுகிறாள் .  நாம் ஹிந்துக்கள் பெண்ணை அர்த நாரியாக படைப்பில் ஸமப் பங்கு உள்ளவளாகக் கருதி வந்திருக்கிறோம் .  அதையும் தாண்டி , மேற்கத்திய விக்ஞானிகள் கூட ஸமீப காலம் வரை ஜடம் என்று கருதிய மரங்களையும் தெய்வ ஸ்வரூபங்களாகவே கருதி வணங்கி , போஷித்து வந்திருக்கிறோம் .

அஶ்வத்தஹ ஸர்வ வ்ருக்ஷாணாம்  ...  வ்ருக்ஷங்களில் நான் அஶ்வத்த மரம் ...

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...