Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 121


கீதையில் சில சொற்றொடர்கள் - 121


रामः शस्त्र भृतामहम्  ...  (अध्याय १० - श्लोक ३१)
ராமஹ ஶஸ்த்ர ப்ருதாமஹம்  ...  (அத்யாயம் 10 - ஶ்லோகம் 31)
Ramah ShastraBhrutaamaham  ... (Chapter 10 - Shlokam 31)

அர்தம் :  ஆயுதம் ஏந்தியவர்களில் நான் ராமன் ..

ஆயுதம் ஏந்தியவர்களில் ராமன் ...  ராமன் , வெறும் ராமன் இல்லை ..  எப்பொழுதும் கோதண்ட ராமனே ..  கோதண்டம் இல்லாமல் ராமன் கிடையாது .  ராமன் என்றால் அமைதியே உருவானவன் ... அன்பு மயமானவன் ...  உண்மை தான் .  அவன் கையில் தான் ஆயுதம் ஶோபிக்கிறது .  பணிவு நிறைந்தவனிடம் கல்வி ...  அஹங்காரம் / மதம் இல்லாதவனிடம் பதவி மற்றும் அதிகாரம் ...ஸேவை பாவம் நிறைந்தவனிடம் செல்வம் ...அதுதான் அழகு .

ஆயுதம் வேண்டாம் , யுத்தம் வேண்டாம் என்று ப்ரசாரம் செய்பவன் யார் என்று பாருங்கள் ...  ஜபானில் அணு குண்டு வீஸியவன் ...  வியட்நாமிலும் ஈராகிலும் தனது ஆதிக்ய வெறியை நிலை நாட்ட , தனது ஸேனையை அநுப்பி , பல வர்ஷங்கள் அந்த தேஶங்களை ஆக்ரமித்து , பல்லாயிர உயிர்களைக் கொன்று குவித்தவன் ...  பல தேஶங்களிலும் எண்ணற்ற அரஸியல் கொலைகளைச் செய்யத் தூண்டியவன் , பொருளாதார ரீதியாக ஏழை தேஶங்களின் இயற்கை வளங்களை ஸுரண்டி , தனது தேஶத்தின் பொருளாதாரத்தை வளமாக்க முயல்பவன் ...  வகை வகையான ஆயுதங்களைத் தயார் செய்து , ஆயுத மார்கெட் உருவாக்கி , உலகத்தில் பல்வேறு தேஶங்களில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கும் பாகிஸ்தான் போன்ற பயங்கரவாத  தேஶங்களுக்கும் விற்றுப் பணம் பண்ணுபவன் ...  அந்த அமெரிகன் சொல்கிறான் ஆயுதம் வேண்டாம் என்று ...

ரெண்டாயிரம் மைல் வரை ஒரு எதிரியும் இல்லாத அமெரிகனின் ஶரீரம் எங்கும் ஆயுதங்கள் , தன்னை ஸுற்றி நான்கு திஶைகளிலும் எதிரிகளே உள்ள பாரதீயனிடம் ஆயுதம் ..  ஆயுதம் எங்கு பொருந்துகிறது ?  ஜனித்த நாள் முதல் (15 ஆகஸ்ட் 1947) பயங்கரவாதம் ஒன்றையே ஜபித்து , நம் தேஶத்தில் பயங்கரவாதிகளை அநுப்பி வைத்து , அநுதினமும் குண்டு வெடிப்பும் ரக்தக் கிளறியும் செய்து வரும் பாகிஸ்தானி கையில் ஆயுதம் , சென்ற பத்தாயிர வர்ஷ வரலாற்றில் எந்த தேஶத்தின் மீதும் படை எடுக்காத , எந்த தேஶத்து வளங்களையும் ஸுரண்டாத , எந்த தேஶத்தையும் அடிமைப் படுத்தாத ஹிந்துவில் கையில் ஆயுதம் ...  ஆயுதம் எங்கு பொருந்துகிறது ?

நம் தேஶத்திலும் பௌத்த மதத்தின் தாக்கம் மற்றும் காந்தியின் கருத்தின் தாக்கம் காரணமாக , "பாரதம் ஸேனை வைத்துக் கொள்ளக் கூடாது , ஆயுதங்கள்  வாங்கக் கூடாது , ஆயுத ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பில் இறங்கக் கூடாது" போன்ற சிந்தனை பேசப் .படுகிறது   இது அபத்தமான சிந்தனை .  ஆபத்தான சிந்தனை .  ஜனங்கள் பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் வாழ வேண்டும் .  அதற்கேற்ற வகையில் தேஶ சூழ்நிலை ஏற்படுத்துவது தான் ராஜ்யத்தின் கடமை .  இதற்குத் தடங்கலாக வரும் எந்தக் கொள்கையையும் ஆள்பவர் மற்றும் ஆக்ஷி நிராகரிக்க வேண்டும் .

ஆயுதம் ஏந்தியோரில் ஸ்ரீ ராமன் நானே ஸ்ரீ க்ருஷ்ணன் .  ஆயுதங்கள் பற்றிய எவ்வித  தயக்கமும் ஸந்தேஹமும் அவனுக்குக் கிடையாது .  ஆயுதானாம் அஹம் வஜ்ரம் என்றான் .  இங்கு ராமஹ் ஶஸ்த்ர ப்ருதாமஹம்  ...  என்கிறான் . 

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...