Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 136


கீதையில் சில சொற்றொடர்கள் - 136


प्रणम्य शिरसा ..  कृताञ्जलिः  .. (अध्याय ११ - श्लोक १४)
ப்ரணம்ய ஶிரஸா க்ருதாஞ்ஜலி .. (அத்யாயம் 11 - ஶ்லோகம் 14)
Pranamya Shirasaa  ...  Kruthaanjali  ... (Chapter 11 - Shlokam 14)

அர்தம் :  ஶிரஸைத் தாழ்த்தி ... கைகளைக் குவித்து ...

பணிவின் ரெண்டு புற அடையாளங்கள்  ...  நமஸ்காரத்தின் ரெண்டு வெளிப்படையான சின்னங்கள் ..  ஶிரம் தாழ்த்துதல் ...  கைகளை இணைத்துக் குவித்தல் ...  உலகத்திற்கு ஹிந்துக்கள் அளித்த மிக அரிய பொக்கிஷம் ..

ஶிரஸ்  ...  நிமிர்ந்து நிற்கும் மநுஷ்ய ஶரீரத்தின் உச்சியில் இருப்பது ..  ஶிரஸ் ..  மநுஷ்யனின் அறிந்திடும் ஆற்றலான புத்தியும் அதற்கான கருவியான மூளையும் இருக்கும் இடம் ..  ஶிரஸ் ..  நான் என்று உணர்த்திடும் அஹங்காரமும் அதன் விளைவாக முளைத்திடும் மதம் அல்லது ஆணவமும் உறையும் இடம் ..

விறைப்பு அந்யருக்கும் தனக்கும் வலி ஏற்படுத்துகிறது ..  விறைப்பு வீழ்ச்சிக்குக் காரணமாகிறது ..  விறைப்பு நட்புக்களையும் பந்தங்களையும் தூர விலக்குகிறது ..  விறைப்பு அந்யர் மேல் அந்யாயங்கள் , அக்ரமங்கள் , அநீதிகள் செய்யத் தூண்டுகிறது ..  கீதை ஶரீரத்தின் விறைப்பை ஸ்தப்த என்று பெயரிட்டு அதை  தாமஸத்தின் அடையாளம் என்கிறது ..  புத்தியின் விறைப்பையும் "மூட க்ராஹேணாத்மனா" அல்லது விறைப்புடன் முட்டாள் தனமாக ஏதோ ஒரு கருத்தை விடாப்பிடியாகப் பற்றிக் கொண்டு" .. தனக்கும் பிறர்க்கும் கஷ்டம் கொடுத்திடும் என்று வர்ணிக்கிறது ..  அஹங்காரத்தின் விறைப்பான மதம் (dha) என்பது மநுஷ்ய மனஸின் ஆறு எதிரிகளில் ஒன்று என்பது நாம் அறிந்ததே ..

விறைப்பு மறைய வேண்டும் என்றால் விநயம் மலர வேண்டும் ..  ஶரீரத்தில் விறைப்பு மாற , ஶரீரம் வளைய வேண்டும் ..  குனிய வேண்டும் ..  புத்தி மற்றும் அஹங்காரத்தின் விறைப்பு மாறிட , அவை ஸமர்பணமாகிட வேண்டும் ..  ஶிரஸைத் தாழ்த்துவது இந்த திஶையில் அத்புதமான ஒரு முயற்சி ..  காலால் உதைப்பது , ஶிரஸைத் தாழ்த்துவது ..  இவ்விரண்டு செய்கைகள் எதிர்மறையான பாவனைகளை வெளிப்படுத்துகின்றன ..  ஒன்று விறைப்பைக் காட்டுகிறது ..  திமிர் நிறைந்த மனஸை வெளிப் படுத்துகிறது ..  பிந்தையது பணிவை , ஸமர்பணத்தை வெளிப் படுத்துகிறது ..

ரெண்டு கைகளையும் சேர்த்துக் குவித்தல் ..  ஸமத்வத்தைக் குறிக்கும் சின்னம் .., உணர்ச்சிக்கும் பகுத்தறிவுக்கும் இடையில் உள்ள ஸமத்வம் ..  சிந்தனைக்கும் செயலுக்கும் இடையே ஸமத்வம் ..  (இன்றைய விக்ஞான மொழியில் சொல்ல வேண்டும் என்றால் வலது மூளை , இடது மூளைக்கு இடையே ஸமத்வம் ..)  ஸித்தமாக உள்ளதை வெளிப்படுத்தும் சின்னம் இது .. ஒத்தைக் கையால் நமஸ்காரம் செய்வதை மறுக்கின்றன நம் ஶாஸ்த்ரங்கள் .. கை குலுக்குவதற்காக முன்னே நீட்டுதல் , "நான் உனக்கு ஸரிஸமம்" என்று உரக்கச் சொல்கிறது என்றால் ..  கைகளைக் குவிப்பது , "நான் பணிகிறேன்" என்ற அழகான செய்தியைச் சொல்கிறது ..

கைகளைக் குவித்தால் போதாது ..  ஶிரஸும் தாழ வேண்டும் ..  ஶிரஸ் தாழ்ந்தால் போதாது ..  மனஸில் "விநயம்" "அஹங்காரம் இன்மை" "ஸமர்பண பாவம்" மலர வேண்டும் ..  முதல் ரெண்டு செய்கைகளும் வெளியில் தெரிந்திடும் செயல்கள் ..  மற்றவர் மனங்களில் நம்மைப் பற்றிய கருத்தை ஏற்படுத்தும் ..  மூன்றாவது , அதாவது மனஸில் மலர்ந்திடும் விநயம் நமக்கு மாத்ரமே தெரிந்திடும் ..  நம்மைப் பற்றி , நாம் மாத்ரமே அறிந்த நிஜ ஸ்வய ரூபம் ..  மற்றவர் நம்மைப் பற்றிக் கொண்டிருக்கும் கருத்து நமக்கு பரிஸுகளையும் பாராட்டுக்களையும் வாங்கித் தரலாம் ..  ஆனால் , நம் நிஜ ஸ்வய ரூபம் நம்மை உயர்த்திடும் ..  இறைவனுக்கு அருகில் அழைத்துச் செல்லும் ...

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...