Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 139


கீதையில் சில சொற்றொடர்கள் - 139


सुरसंगा केचितभीताः प्राञ्जलयो ... (अध्याय ११ - श्लोक २१)
ஸுர ஸங்கா கேசித் பீதாஹ் ப்ராஞ்ஜலயோ ... (அத்யாயம் 11 - ஶ்லோகம் 21)
SuraSangaa Kechit Bheetaah Praanjalayo ... (Chapter 11 - Shlokam 21)

அர்தம் :  தேவர்களில் ஸிலர் பயந்து இரு கைகளைக் கூப்பி வணங்குகின்றனர் ..

பரமாத்மாவின் உக்ர ஸ்வரூபத்தை அர்ஜுனன் வர்ணிக்கிறான் ..    மநுஷ்யன் பயம் கொள்ளலாம் ..  மரணத்தின் தர்ஶனம் பெற்று நடுங்கலாம் ..  அதில் ஆஶ்சர்யம் ஏதும் இல்லை ..  தேவர்கள் ஏன் பயப்பட வேண்டும் ?

தேவர்கள் ஸ்வர்க வாஸிகள் ..  ஸ்வர்கம் என்பது ஸுகங்களின் பெட்டகம் ..  ஸுகம் என்றால் வெறும் ஸுகம் இல்லை ..  ஸுகத்தின் உச்சம் ..  ஸுகத்தின் எல்லை ..  து:கத்தின் கலப்பு இல்லாத ஸுகம் ..  இதைத் தாண்டி வேறு ஸுகம் ஏதும் இருக்க முடியாது என்ற நிலை ..  தேவர்கள் இத்தகைய ஸுகத்தில் திளைத்திருப்பவர்கள் ...

ஸுகம் வந்தாலே அதனுடன் பயமும் இணைந்து வரும் ..  ஸுகமும் பயமும் ஒட்டியே இருப்பவை ..  ஸுகம் வற்றி விடும் என்ற பயம் ..  ஸுகம் அநுபவிப்பதற்கான ஆற்றல் மங்கி விடும் என்ற பயம் ..  ஸுகம் அநுபவிப்பதற்கான அர்ஹதை , அதிகாரம் , பதவி பறிக்கப் படும் என்ற பயம் ..  ஸுகம் அநுபவிக்க போட்டி தோன்றிடும் என்ற பயம் .. ஸுகத்தை அநுபவிக்கக் கூட வேண்டாம் .. ஸுக நாட்டம் வந்து விட்டாலே போதும் .. ஸுகம் வேண்டும் என்ற ஆஶை வந்து விட்டாலே போதும் .. பயம் பிறந்து விடும் ..

தேவர்கள் பயந்து , கை கூப்பி , பரமனை வணங்குகின்றனர் என்கிறான் அர்ஜுனன் ..  பரமனே அனைத்து ஸுகங்களுக்கும் ஊற்று என்று கருதுவதால் ..  அவனது அருள் இருந்தால் மாத்ரமே ஸுகம் அநுபவிக்கும் தங்கள் அதிகாரமும் அர்ஹத்தையும் தொடரும் என்று கருதுவதால் ..  பயந்து கை கூப்பி வணங்குகின்றனர் ..  நம் மநுஷ்ய பாஷையில் சொல்ல வேண்டும் என்றால் .. "லஞ்ஜ ஊழலுக்கும் , லஞ்ஜப் பணத்தில் ஸுக போக வாழ்க்கைக்கும் பழகி விட்ட ராஜாங்க ஊழியர் அதிகாரிகளுக்குக் கூழ் கும்பிடு போடுவதைப் போல" என்று சொல்லலாம் .. ... 

தேவர்கள் என்றால் நிஶ்சயமாக , உறுதியாக  தர்மத்தின் பக்ஷம் ஸாய்ந்து இருப்பர் என்று இல்லை ..  ஸ்ரீ ராம - ராவண யுத்தத்தில் எண்பது தினங்கள் வரை தேவர்கள் எந்த பக்கமும் ஸாயாமல் , வானத்தில் இருந்து பொதுவாக .. ஜய ஹோ ..  வெற்றி உண்டாகட்டும் என்று கோஷம் இட்டுக் கொண்டு இருந்தனர் ..  ஸ்ரீ ராமனின் வெற்றி நிஶ்சயம் ,  அவனது பந்துக்களும் மைந்தர்களும் முக்யமான வீரர்கள் அனைவரும் இறந்து விட்டதால் இனி ராவணன் ஜயிப்பதற்கான வாய்ப்பே இல்லை   ராவணனின் தோல்வி நிஶ்சயம் என்ற நிலை வந்த பிறகு தான் , ஸ்ரீ ராமன் பூமியில் நின்று யுத்தம் புரிவது அவர்கள் கண்களுக்குத் தெரிகிறது ..  அவருக்கு ஒரு ரதத்தை அநுப்பி வைக்கின்றனர் ..

இதே ஸுக நாட்டம் காரணமாக தேவர்கள் தவறுகள் செய்ய முற்படுகின்றனர் ..  பிடிபட்டு ஶாபங்களுக்கு ஆளாகின்றனர் ..   

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...