Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 140


கீதையில் சில சொற்றொடர்கள் - 140


स्वस्तीस्त्यक्त्वा महर्षी:  ... (अध्याय ११ - श्लोक २१)
ஸ்வஸ்தீத்யுக்த்வா மஹர்ஷீஹி ... (அத்யாயம் 11 - ஶ்லோகம் 21)
Swasteestyuktvaa Maharsheeh ... (Chapter 11 - Shlokam 21)

அர்தம் :  மஹர்ஷீகள் மங்கலம் நேரட்டும் என்ற ஸ்வஸ்தி வசனத்தைக் கூறிய படி உள்ளனர் ..

அர்ஜுனனின் வர்ணனையை கவனியுங்கள் ...  மநுஷ்யர்கள் தம் இயலாமையை வெளிப்படுத்திய படி , ஸ்ரீ பரமனின் விராட ரூபத்தின் அகன்று திறந்த வாயில் ப்ரவேஶிக்கின்றனர் ...  அவரது கோரப் பற்களால் அரைக்கப் படுகின்றனர் ..  தேவர்கள் பயந்து கை கூப்பிய படி அவனை ஸ்துதி பாடுகின்றனர் ..  மஹர்ஷீக்கள் மங்கல வசனங்களைப் பாடி ஸ்ரீ பரமனை வாழ்த்துகின்றனர் .  (ஸ்வஸ்தி வசனங்கள்)

ர்ஷீ , மஹர்ஷீ என்பவர்கள் பாரத தேஶத்தின் விஶேஷம் ..  ஹிந்து ஸமுதாயத்தின் பெருமை மிகுந்த முன்னோர்கள் ..  மநுஷ்யருள் ஜ்வலித்திடும் மாணிக்யங்கள் ..  க்ஞானத்தில் ஶிகரங்கள் ..  தர்மத்தின் உறுதியான ஆதார ஸ்தம்பங்கள் .  தபஸில் வானளாவிய மேருக்கள் ..  குணங்களின் , பண்புகளின் உச்ச கோடி உதாஹரணங்கள் ..  ஸ்வய நலம் , அறியாமை , ஒழுக்கக்கேடு , இல்லாததால் ராஜா , மஹாராஜா , சக்ரவர்தி என்ற எவருக்கும் பயப் படாதவர்கள் ..  ராஜா மஹாராஜாக்களால் இவர்களும் மதிக்கப் பட்டனர் .. இவர்களது அபிப்ராயமும் மதிக்கப் பட்டது ..  இத்தகைய மிகையான அதிகாரம் இருந்தும் , ஒழுக்கம் ஓங்கி இருந்ததால் , அதிகாரத்தின் ஆணவம் தம் தலைக்கு ஏற அநுமதிக்காதோர் ர்ஷீ , மஹர்ஷீக்கள் .. 

மஹர்ஷீ ஸந்ந்யாஸீ இல்லை ..  குடும்பஸ்தர்கள் ..  இவர்கள் தத்தம் மனைவியின் பெயருடன் இணைந்தே அறியப் படுகின்றனர் ..  வஶிஷ்ட - அருந்ததி , அத்ரி - அநஸூயா , கவுதம - அஹல்யா , அகஸ்த்ய - லோபமுத்ரா , .. 

பாரதத்தின் தர்ம மய வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்தவர்கள் ர்ஷீக்கள் , மஹர்ஷீக்கள் ..  பாரத ஜனங்களில் காணப்படும்  க்ஞான  தாஹம் , அறுபடாத க்ஞான பாரம்பர்யம் இவற்றுக்கு இங்கு வாழ்ந்த லக்ஷோப லக்ஷ ர்ஷீ களே காரணம் ..

ர்ஷீக்கள் , மஹர்ஷீக்கள் என்றோ வாழ்ந்தவர்கள் ..  ஆயிரம் ஆயிரம் வர்ஷங்கள் முன்னர் வாழ்ந்தவர்கள் ..  அவர்களது ஈடிணையற்ற தேஜஸின் ஆதாரத்தில் இன்று வரை பாரதம் பாரதமாக இருக்கிறது ..  இஸ்லாமிய வெறித் தாக்குதல்கள் , க்றிஸ்தவ மத மாற்ற சதிகள் , போக வாதம் , கவர்ச்சியான மேற்கத்திய வாழ்க்கை முறை ஆகிய புயல்களில் சிக்கிச் சிதறி , பாரதம் சின்னா பின்னமாகவில்லை என்றால் அதற்கு ர்ஷீ மஹர்ஷீக்களின் மஹோன்னத வாழ்க்கையே காரணம் ..  (ஸ்ரீ பரமாசார்யர் சொல்வார் .. முன்னோர்கள் நிறைய பெடல் அழுத்தி விட்டனர் ..  இன்று நாம் பெடலை அழுத்தாமலே நம் ஸைகில் ஓடுகிறது ..  ஆனால் அதிக தூரம் ஓடாது ..  நாம் நம் பங்கிற்கு பெடல் போட வேண்டும் ..  அப்பொழுதுதான் அடுத்த தலைமுறைக்கு ஓடும் ஸைகிளை கொடுத்துச் செல்லலாம் ..  )  மீண்டும் பாரதத்தில் ஆயிரம் ஆயிரம் ர்ஷீக்களும் மஹர்ஷீக்களும் உருவாக வேண்டும் .. மீண்டும் க்ஞானமும் தர்மமும் ஒழுக்கமும் தபஸும்  ஜ்வலிக்க வேண்டும் ..  அந்த ஒளி உலகம் முழுவதும் பரவ வேண்டும்.   உலகத்தை இருளில் இருந்து விடுவிக்க வேண்டும் ..

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...