Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 141


கீதையில் சில சொற்றொடர்கள் - 141


प्रव्यथितान्तरात्मा धृतिं न विन्दामि शमं च  ... (अध्याय ११ - श्लोक २४)
ப்ரவ்யதிதாந்தராத்மா த்ருதிம் ந விந்தாமி ஶமம் ச ... (அத்யாயம் 11 - ஶ்லோகம் 24)
Pravyathitaantaraatmaa Dhrutim Na Vindaami Shamam Cha  ... (Chapter 11 - Shlokam 24)

அர்தம் :  என்னுடைய பயந்த உள் மனஸ் தைர்யம் மற்றும் ஶாந்தி அடையவில்லை ..

இங்கு அர்ஜுனன் அடிப்படையான ஒரு ஸத்யத்தைப் பகர்கிறான் ..  ஒரு காக்ஷி பயங்கரமாக இருப்பதால் நாம் பயம் கொள்வதில்லை ..  ஒரு ஶப்தம் பயங்கரமாக இருப்பதால் நாம் பயம் கொள்வதில்லை ..  நம் மனஸ் பயந்த ஸ்வபாவம் கொண்டதாக இருப்பதால் , நாம் பயம் கொள்கிறோம் ..  அதனால்தான் காக்ஷி இல்லவே இல்லை என்றாலும் , ஶப்தம் இல்லவே இல்லை என்றாலும் , வெறும் ப்ரமை அடிப்படையில் கூட பயம் கொள்கிறோம் ..

காக்ஷி பயங்கரமானது என்பது universal இல்லை ..  அவ்வாறு இருந்தால் அதைப் பார்க்கும் அனைவரும் பயம் கொள்ள வேண்டும் ..  உண்மை நிலை அவ்வாறு இல்லை ..  ஒரு காக்ஷி அல்லது வேறு எந்த அநுபவமும் அனைவருக்கும் பயம் ஏற்படுத்துவதில்லை ..  பயம் கொள்வோரும் ஸம அளவில் பயம் கொள்வதில்லை ..  ஒரு காக்ஷி அல்லது வேறு ஒரு அநுபவம் ஒவ்வொருவர் மீதும் வெவ்வேறு  தாக்கம் ஏற்படுத்துகிறது ..  அவரவர் ஸ்வபாவம் , நம்பிக்கைகள் , மனஸின் தன்மை ஆகியவற்றைப் பொருத்து இந்தத் தாக்கம் இருக்கிறது ..  இதையே அர்ஜுனன் சொல்கிறான் ..  என்னுடைய பயந்த மனஸ் தைர்யம் அடையவில்லை என்கிறான் ..

பயந்த மனஸை வளர்ப்பது ஸரியா ?  தவறு செய்ய பயம் (ஹ்ரீ) ஒரு தெய்வத் தன்மை என்கிறது கீதை பதினாறாம் அத்யாயத்தில்  ..  ஆனாலும் பயத்திற்கு ஒரு எல்லை உண்டு ..  ஒரு நிலைக்குப் பிறகு பயம் வற்றி விடும் ..  பயமுறுத்தி ஒரு தவறைத் தடுத்து விட முடியாது ..  ஸிகரெட் பாக்கெட் மீது மண்டை ஓடு வரைந்து விட்டால் , ஸிகரெட் பிடிப்பதைத் தடுத்து விட முடியுமா ?  டீ வியில் மது பானக் காக்ஷி வரும் போது , "மது பானம் ஆரோக்யத்தைக் கெடுக்கும் என்ற எச்சரிக்கை எழுதி விட்டால் குடிப்பதைத் தடுத்து விட முடியுமா ?  பயம் ஓரளவிற்கு வேலை செய்யும் ..  புரிய வைக்கும் முயற்சி வேண்டும் ..  தவறிழைத்தால் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் ...  அத்துடன் பயம் காட்டுதலும் வேண்டும் ..

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...