Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 144


கீதையில் சில சொற்றொடர்கள் - 144


लेलिह्यसे  ...  (अध्याय ११ - श्लोक २८)
லேலிஹ்யஸே  ... (அத்யாயம் 11 - ஶ்லோகம் 30)
Lelihyase  ...  (Chapter 11 - Shlokam 30)

அர்தம் :  சப்பு கொட்டிய படி நாக்கினால் நக்குகிறீர்கள் ...

நாக்கினால் நக்குவது உணவு சாப்பிடும் போது தவிர்க்க முடியாத ஒரு செயல் ..  சாப்பிடும் விரல்களை நக்குவது , கையை  - உள்ளங்கையை , புறங்கையை நக்குவது , உதட்டை நக்குவது ..  ருசித்து ஆனந்தமாய் சாப்பிடுவதன் அடையாளம் ..  கென்டக்கி கோழியின் விளம்பரத்தில்  , "Lick your fingers" என்று எழுதி இருக்கும் ..  அதாவது அவ்வளவு ருசியாக இருக்குமாம் அந்தக் கோழி ..  ஸமீபத்தில் ஒரு சாக்லேட் விளம்பரமும் இதே பாணியில் வடிவு அமைத்திருந்தார்கள் ..  நாம் எச்சில் என்பதைக் கடைப் பிடிக்கிறோம் .. எனினும் , நாம் மட்டுமே உபயோகப் படுத்தும் தட்டில் சாப்பிடும் போது , நக்கிச் சாப்பிடுவதில் ஒரு ஆனந்தம் இருக்கிறது என்பது ஸத்யம் ..

ப்ராணிகள் சாப்பிட்டு விட்டு உதட்டை நக்கிக் கொள்வது தூய்மைக்காக ..  "ஆஹா !  இது ருசியாக இருக்கிறது" ; "பேஷ் ! பேஷ் !  ரொம்ப நன்னா இருக்கு" என்று ரஸித்து , ருசித்து , அநுபவித்து சாப்பிடும் தன்மை ம்ருகங்களுக்குக் கிடையாதல்லவா !!  அவை நக்கிக் கொள்வது தூய்மைக்காக மாத்ரமே ..  ஆனால் , மநுஷ்யன் அவ்வாறல்ல ..  அவனால் ருசியை ரஸிக்க முடியும் ..  ஆனந்தமாக அநுபவிக்க முடியும் ..  போஜனம் அவனது ஶரீரத்தில் ஆற்றல் மற்றும் ஸத்துக்கள் பெறுவதற்காக ..  பற்களால் அரைப்பது ஜீர்ண கார்யத்தில் உதவுவதற்காக ..  நாக்கினால் நக்குவது ருசியின் ஸாரத்தை அநுபவித்திட ..  போஜனத்தில் பரமானந்த த்ருப்தி ஏற்பட ..  உணவிட்டவரை மனஸார வாழ்த்திட ..  நக்கிச் சாப்பிட வேண்டும் ..

நக்கிச் சாப்பிட வேண்டும் ..  ஆனால் .. இந்தப் பாழாய்ப் போன நாகரிகம் ..  அல்லது நாகரிகம் என்ற பெயரில் வளர்ந்திருக்கும் போலித்தனம் "என்னை நானாக"  "நம்மை நாமாக" இருக்க விடுவதில்லை ..  மற்றவர் என்னை கவனிக்கின்றனர் ..  மற்றவர் என்னைப் பற்றித் தவறாக நினைப்பர் ..  என்னுடைய அந்தஸ்துக்கு இது ஒத்து வராது .. போன்ற போலியான எண்ணங்கள் நம் செயல்களை , நமக்கு நன்மை பயக்கும் செயல்களை , நாம் ஆனந்தம் அநுபவிக்கும் செயல்களைத் தடுக்கின்றன ..  நமக்கு ஒவ்வாத செயல்களைச் செய்ய வைக்கின்றன ..  நம் பாரம்பர்யத்திற்கு எதிரான செயல்களைச் செய்ய வைக்கின்றன ..  (நக்கிச் சாப்பிடுவதில்லை .. இலையில் மிச்சம் வைத்து உணவை வீணாக்குகிறோம் ..  கையை நனைத்துச் சாப்பிடுவதில்லை ..  நன்றாக பிஸைந்து கொள்வதில்லை ..  உயிர் உள்ள , உணர்ச்சி உள்ள கையால் சாப்பிடாமல் ஸ்பூன் என்ற உயிரற்ற ஜடத்தின் உதவியுடன் சாப்பிடுகிறோம் ..)

இங்கு பரமன் தன் வாயில் வேகமாக ப்ரவேஶிக்கும் ஜீவன்களை பற்களால் அரைத்து சூர்ணம் ஆக்கி , ஸர்வ திஶைகளிலும் நாக்கால் நக்குகிறார் ..  அழிவையும்  ரஸித்துச் செய்கிறார் ..  ஆனந்தமாகச் செய்கிறார் ..  ஆக்குவதில் ஆனந்தம் ..  அழிப்பதிலும் ஆனந்தம் ..

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...