Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 145


கீதையில் சில சொற்றொடர்கள் - 145


कालोSस्मि लोकक्षयकृत प्रवृद्धो ... (अध्याय ११ - श्लोक ३२)
காலோ(அ)ஸ்மி லோகக்ஷயக்ருத் ப்ரவ்ருததோ ... (அத்யாயம் 11 - ஶ்லோகம் 32)
Kaalo(a)mi LokaKshayaKrut Pravruddho ...  (Chapter 11 - Shloka 32)

அர்தம் :  அனைவரையும் அழிக்க வந்திருக்கும் காலன் நான் ...

தமிழில் காலம் ..  காலன் என்று ரெண்டாக எழுதினாலும் , மூல ஸம்ஸ்க்ருத வார்தை ஒன்றுதான் ..  கால ... கால - மஹாகால ..  கடந்த காலம் , நிகழ் காலம் , எதிர்க்காலம் நானே .  என்றார் ..  விபூதி யோகத்தில் (பத்தாம் அத்யாயத்தில்)  கணிக்கும் காலம் (ஸமயம்) நான் என்றார் ..  பின்னர் அனைவரையும் கட்டுப் படுத்தும் யமன் நானே என்றார் .  மரணத்தின் அதிபதியான யமன் வேறு என்று நாம் நினைக்க வாய்ப்பு இருப்பதால் இவ்வாறு சொல்கிறார் .  காலம் , காலன் இவற்றில் வேறுபாடு எதுவும் இல்லை .  ரெண்டும் ஒன்றே ..    அதாவது , அழிவு நிஶ்சயம் ..  காலம் அழித்து விடும் .  காலப் போக்கில் அழிவு தன்னால் நிகழ்ந்து விடும் ..  தேவைப்படும் காலம் குறைவாகவோ அதிகமாகவோ இருக்கலாம் ..  ஆனால் , கால ப்ரவாஹமே அழித்து விடும் ..

இங்கு மேலும் தெளிவாக , "அனைவரையும் அழிக்க வந்திருக்கும் காலம் (ன்) நான்" என்கிறார் ..  இந்த வீரர்களை நீ போரிட்டுக் கொல்ல மறுத்தாலும் ..  அவர்களின் அழிவு ஏற்கெனவே நிஶ்சயம் ஆனது ..  என்கிறார் ..  இவ்வாறு கூறி விட்டு ..  அவர்கள் அழியும் காக்ஷியைக் காட்டி விட்டு ..  "நீ நிமித்தம் மாத்ரமே" ..  உன் கையால் நிகழப் போவது எதுவும் இல்லை ..  என் கார்யத்தில் நல்லதொரு கருவி ஆகி விடு என்று கூறுகிறார் ..  அடுத்த சொற்றொடரில் பார்ப்போம் ..

ஒரு அமெரிக மனோ விக்ஞானி பாரதத்தைப் பற்றி எழுதிய கட்டுரையை ஸமீபத்தில் படித்தேன் ..  "உலகத்திலேயே மிகக் குறைந்த வலி கொடுப்பதாக மரணம் இருப்பது பாரதத்தில் தான்"  என்று எழுதுகிறாள் ..  நிஶ்சயம் ஆனது ..  தவிர்க்க முடியாதது ..  காலப் போக்கில் நடந்தே தீரும் ..  இதுவும் பரமனின் கார்யமே .. ஹிந்துக்கள் தம் ஆழ் மனஸில் இந்த ஸத்யத்தை உணர்ந்திருப்பதால் மரணம் இங்கு ஸஹஜமான விஷயமாகி விட்டதோ ??

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...