Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 147


கீதையில் சில சொற்றொடர்கள் - 147


तत् क्षामये .. पितेव पुत्रस्य सखेव सख्युः प्रियः प्रियायाः ..  (अध्याय ११ - श्लोक ४२ , ४४)
தத் க்ஷாமயே அஹம் ... பிதேவ புத்ரஸ்ய ஸகேவ ஸக்யுஹு ப்ரியஹ பிரியாயாஹ ... (அத்யாயம் 11 - ஶ்லோகம் 42 , 44)
TatKshaamaye Aham ..  Piteva Putrasya Sakheva Sakhyuh Priyah Priyaayah ... (Chapter 11 - Shlokam 42 , 44)

அர்தம் :  பிதா புதல்வனை , ஸகா தன் நண்பனை , ப்ரியன் தன் ப்ரேமியை எவ்வாறு மன்னித்து விடுகிறானோ ...  அவ்வாறு என்னை மன்னித்து விட வேண்டும் ..

க்ஷமா . மன்னிப்பு . கேட்பதும் விஶேஷம் . கொடுப்பதும் விஶேஷம் ..  இங்கு அர்ஜுனன் ஸ்ரீ க்ருஷ்ணனிடம் கேட்கிறான் ..  அர்ஜுனனும் ஸ்ரீ க்ருஷ்ணனும் பால்ய ஸ்நேஹிதர்கள் . அத்தை மகன் - மாமன் மகன்  என்ற உறவு வேறு .. சிறு வயஸில் சேர்ந்து சுற்றியவர்கள் ..  விளையாடியவர்கள் .. பகிர்ந்து உண்டவர்கள் ..  இங்கு யுத்த க்ஷேத்ரத்தில் அர்ஜுனன் கேட்டுக் கொண்டதால் அவனது ரதத்தின் ஸாரதியாக இருக்கிறான் ..  அதாவது அர்ஜுனன் யஜமான் ..  ஸ்ரீ க்ருஷ்ணன் வேலைக்காரன் ..  இந்தப் பின்னணியில் அர்ஜுனன் ஸ்ரீ க்ருஷ்ணனிடம் மன்னிப்பு கேட்பது விஶேஷம் .  கீதை கேட்கக் கேட்க , அர்ஜுனன் ஸ்ரீ க்ருஷ்ணனின் பரமாத்ம ஸ்வரூபத்தை உணர்கிறான் ..  "நான் இவனது மஹிமையை உணராமல் , டேய் , வாடா , போடா என்று மர்யாதை இல்லாமல் பேசி இருக்கிறேன் ..  விளையாடி இருக்கிறேன் ..  தோள் மேல் கை போட்டிருக்கிறேன் ..  கிண்டல் செய்திருக்கிறேன் .."  ஸ்ரீ க்ருஷ்ணனின் நிஜ ஸ்வரூபம் அறியாத போது செய்திருந்தாலும் அர்ஜுனன் பஶ்சாதாபம் அடைகிறான் ..  க்ஷமா யாசனை செய்கிறான் ..  ஒரு பெரியவர் தன் அன்பிற்குப் பாத்ரம் ஆனவனின் குழந்தைத் தனமான தவறுகளை மன்னித்து விடுவதைப் போல என்னை மன்னித்து விடு என்று வேண்டுகிறான் ..

தன்னை விட வயஸிலோ , தகுதியிலோ , படிப்பிலோ , குணத்திலோ , மஹிமையிலோ பெரியவரிடம் மன்னிப்பு கேட்பதில் ஆஶ்சர்யம் ஏதும் இல்லை ..  இங்கு ஸ்ரீ க்ருஷ்ணன் தன் ஸ்நேஹிதன் என்பதை மறந்து , தன் உறவினன் என்பதை மறந்து , இன்று தன் ஆக்ஞைக்குப் பணியும் சேவகன் என்பதை மறந்து மன்னிப்பு கேட்கிறான் அர்ஜுனன் ..  அவன் பரமாத்ம ஸ்வரூபம் என்பதை உளமார உணர்ந்து விட்டதால் பணிந்து மன்னிப்பு கேட்க முடிகிறது அர்ஜுனனால் ..  இது விஶேஷம் தான் என்றாலும் தன்னை விட  மஹிமையிலோ தகுதியிலோ படிப்பிலோ குணத்திலோ வயஸிலோ  சிறியவனிடம் மன்னிப்பு கேட்பது ஒரு மஹாத்மாவால் மாத்ரமே முடியும் ..

மன்னித்து விடுதலும் அவ்வாறே ..  ஒரு பெரியவரால் சிறியவனை மன்னித்து விட முடியும் ..  அன்பின் அடிப்படையில் மன்னித்து விட முடியும் ..  தன்னை விட மூத்தவரை , தன்னை விட உயர்ந்தவரை மன்னிப்பது கடினம் ..

மன்னிப்புக் கோருதல் , மன்னித்தல் ஆகிய ரெண்டிற்கும் தடையாக இருப்பது அஹங்காரம் ..  அஹங்காரம் அழித்தவரால் தான் மன்னிப்பு கேட்கவும் முடியும் ..  மன்னித்து விடவும் முடியும் ..

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...