Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 148


கீதையில் சில சொற்றொடர்கள் - 148


संवृत्तः सचेताः प्रकृतिम गतः  ...  (अध्याय ११ - श्लोक ५१)
ஸம்வ்ருத்தஹ ஸசேதாஹ ப்ரக்ருதிம் கதஹ ... (அத்யாயம் 11 - ஶ்லோகம் 51)
Samvruttah Sachetaah Prakrutim Gatah ...  (Chapter 11 - Shlokam 51)

அர்தம் :  நான் என்னுடைய விழிப்படைந்த மனஸை , ஸ்வபாவமான நிலையை , ஸஹஜ நிலையை அடைந்தேன் ..

"தங்களது ஸௌம்யமான மநுஷ்ய ரூபத்தைக் கண்டவுடன் , நான் என் ஸஹஜ நிலைக்குத் திரும்பினேன் ..  ஸ்வபாவமான நிலைக்குத் திரும்பினேன்" என்கிறான் அர்ஜுனன் ..  அர்ஜுனன் எங்கு சென்று இருந்தான் ??  எங்கிருந்து திரும்பினான் ??

அவன் எங்கும் செல்லவில்லை ..  யுத்த க்ஷேத்ரத்தில் தான் இருந்தான் ..  ஒரு அஸாதாரண சூழ்நிலையில் தன் மனஸின் நிலை அவனுக்குப் பழக்கம் இல்லாததாக , புதியதாக , அவன் இது வரை காணாத ஒன்றாக இருந்தது ..  அதில் இருந்து மீண்டும் தனக்குப் பழக்கமான மன நிலைக்குத் திரும்பியதையே 'ஸஹஜ நிலைக்குத் திரும்பினேன்'  என்கிறான் ..

ஸஹஜ நிலை என்பது அன்றாட வாழ்க்கையில் நாம் காணும் நம் மனநிலை ..  ஸாதாரண சூழ்நிலையில் நிலவும் நம் மனநிலை ..  அதையே நாம் ஸஹஜ நிலை என்கிறோம் ..  அதுவே நமக்குப் பழக்கமான நம் ஸ்வந்த நிலை ..  அதையே நம் ஸ்வபாவமாக நாம் கருதுகிறோம் .. நம்மை ஏமாற்றிக் கொள்கிறோம் ..  ஆனால் , அது நம் ஸ்வபாவ நிலை இல்லை ..  ஒரு அஸாதாரணச் சூழ்நிலையில் தான் நம் நிஜ ஸ்வபாவம் வெளிப்படுகிறது ..

"ஸாதாரணமாக நான் கோபப் படுவதில்லை ..  ஶாந்த ஸ்வரூபியாக அறியப் படுகிறேன் ..  ஆனால் , கடும் ஶோதனை வரும் போது சிடு சிடுவென்று மாறுகிறேன் ..  என் நிஜ ஸ்வபாவம் வெளிப்படுகிறது" .. "ஸாதாரணமாக அவர் அனைவருக்கும் உதவி செய்வார் .. வாழ்வில்  ப்ரஶ்னைகள் காரணமாக மன உளைச்சலில் இருந்திருப்பார் ..  அதனால்தான் மறுத்து விட்டார்" ..  "என் மனைவி அகிலா பயந்தவளாகக் காணப் பட்டாள் .. பயந்த ஸ்வபாவம் என்று என்னை நினைக்க வைத்தது ..  ஆனால் , கடுமையான ஶரீர உபாதை வந்த போது , மிகக் கடுமையான வலியையும் வேதனையையும் அமைதியாகப் பொறுத்துக் கொண்டாள் ..  அழுகை இல்லை ..  சிடுசிடுப்பு இல்லை ..  பயம் இல்லை ..  வெகு ஆஶ்சர்யம் ..  நேர்மாறாக , ஒரு ப்ரபல ஆன்மீக ப்ரஸங்கி , துறவி , மனஸின் ஸமநிலைப் பற்றி பேசுபவர் ..  கிட்னீ கெட்டது , இனி டயாலிஸிஸ் தான் என்று மருத்துவர் அறிவித்த போது தேம்பித் தேம்பி அழுதார்".

ஸஹஜ , அன்றாட மன நிலை வேறு .  ஸ்வபாவம் வேறு .    அஸாதாரண சூழ்நிலையில் நம் ஸ்வபாவம் வெடித்துக் கிளம்பும் ..  "அவரா இவர் !!" என்று பிறரை ஆஶ்சர்யப் பட வைக்கும் ..  "நான் ஏன் அவ்வாறு நடந்து கொண்டேன் ?" என்று நம்மையே திகைக்க வைக்கும் ..

அர்ஜுனன் மற்றொரு விஷயத்தையும் குறிப்பிடுகிறான் ..  ஸசேதஸ் அதாவது விழிப்பான மனஸினை அடைந்தேன் என்கிறான் ..  மனஸில் பயம் , கவலை , படபடப்பு , ஶோகம் , கோபம் ஆகிய பாவனைகள் ஓங்கும் போது மனஸின் விழிப்பு நிலை தடுமாறுகிறது ..  விழிப்பு நிலையில் நாம் நடந்து கொள்ளும் விதமும் விழிப்பு நிலை மாறிய போது நாம் நடந்து கொள்ளும் விதமும் ஒன்றாக இருப்பதில்லை ..  மனஸின் விழிப்பு நிலை மாறாது இருந்திட , ஆழ்ந்த க்ஞானம் வேண்டும் ..  ஶ்ரத்தை , அஸைக்க முடியாத ஶ்ரத்தை வேண்டும் ..  த்ருட மனஸ் வேண்டும் ..  நேர்மை வேண்டும் ..  வைராக்யம் வேண்டும் ..  தன்னைத் தானே படித்திடும் பயிற்சி வேண்டும் ..அதாவது ஸ்வாத்யாயம் வேண்டும் ..  தரையில் கிடைக்கும் ஒரு அடி அகலப் பலகையின் மேல் நடப்பது மிக ஸுலபம் ..  மூன்று மாடிக் கட்டிடங்கள் ரெண்டை இணைத்துப் போடப் பட்டிருக்கும் பலகையின் மேல் நடந்திட தேவைப்படும் மனஸே விழிப்பான மனஸ் , அதிக விழிப்பான மனஸ் ..

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...