Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 149


கீதையில் சில சொற்றொடர்கள் - 149


नाहं वेदैर्न तपसा न दानेन न चेज्यया शक्य दृष्टवान असि माम् ।  (अध्याय ११ - श्लोक ५३)
நாஹம் வேதைர்ந தபஸா ந தானேன ந சேஜ்யயா ஶக்ய த்ருஷ்டவான் அஸி மாம் ..  (அத்யாயம் 11 - ஶ்லோகம் 53)  
Naaham Vedairna Tapasaa Na Daanena Na Chejyayaa Shakya Drushtavaan Asi Maam ..  (Chapter 11 - Shlokam 53)

அர்தம் :  என்னை வேதங்கள் மூலமோ , தபஸ் அல்லது தானம் மூலமோ , யக்ஞங்கள் மூலமோ காண முடியாது .. 

"படிப்பெல்லாம் வீண் .." என்கிறான் படிக்காமல் சோம்பித் திரியும் ஒருவன் ..  பள்ளிப் படிப்பு , கல்லூரிப் படிப்பு , மேல் படிப்பு , ரெண்டு PhD . வாங்கிய ஒருவர் , "புஸ்தகப் படிப்பு ஓரளவிற்குத் தான் ..  வாழ்க்கையைப் புரிந்து கொள்ள இது உதவாது." என்கிறார் .. இதைக் கேட்ட உடனே முதலாமவன் , "நான் அதைத்தான் சொன்னேன்" என்று கொக்கரிக்கிறான் ..  ரெண்டு நபர்கள் சொல்வதும் ஒன்றா ?  இவர் புஸ்தகங்கள் மத்தியில் வாழ்க்கையைக் கழித்தவர் ..  அவன் புஸ்தகத்தை கையால் தொடாதவன் ..  இவர் ஆழமாகப் படித்தவர் ..  அவரது உயர்ப் படிப்பின் காரணமாக அவருக்கு மர்யாதையோ பாராட்டோ கிடைக்கும் போது , "படிப்பு மாத்ரம் போதாது" என்கிறார் ..  அநுபவம் மற்றும் சிந்தனையின் விளைவாக பிறந்த வார்தைகள் அவை ..இவனோ சோம்பல் மற்றும் அலக்ஷ்யத்தின் விளைவாகப் படிக்கவில்லை ..  இது சுட்டிக் காட்டப் படும் போது , குற்ற உணர்வு , தாழ்வு மனப்பான்மை காரணமாக இவ்வாறு பேசுகிறான் ..  அநுபவம் இல்லாததைப் பற்றி அறியாமையில் பிறந்த வார்தைகள் இவனுடையவை .. ரெண்டும் ஒன்றாகாது ..

"கல்லின் மேல் பாலைக் கொட்டுவதும் புஷ்பங்களைப் போடுவதும் வீண் ..  கோவிலுக்குச் செல்வதே வீண் ..  இல்லாத ஒருவனுக்காக பூஜை என்ற பெயரில் மணிக் கணக்காக நேரம் செலவழிப்பது வீண் ." என்கிறான் த்ராவிடக் கழகத்தில் உள்ள ஒருவன் ..  காளி பூஜையில் வாழ்க்கையைக் கழித்த ஸ்ரீ ராமக்ருஷ்ண பரம ஹம்ஸ நிர்விகல்ப ஸமாதியின் அநுபவம் வேண்டுகிறார் ..  ,பூரணமான ப்ரஹ்ம க்ஞானத்திற்கு விக்ரஹ ஆராதனை மாத்ரம் போதாது என்பதை உணர்த்துகிறார் ..  ரெண்டும் ஒன்றா ?  இவன் மற்றவர்களின் வார்தைகளை வாந்தி எடுப்பவன் ..  ஸ்வந்த அநுபவம் எதுவும் இல்லாமல் , பொறாமை , வெறுப்பு , தாழ்வு மனப்பான்மை அடிப்படையில் பேசுபவன் ..  ஸ்ரீ ராமக்ருஷ்ண பரம ஹம்ஸரோ அதில் ஆழ்ந்து விட்டு , இதையும் தாண்டி வேறு ஏதோ ஒன்று உள்ளது என்று உணர்ந்ததால் அந்த மற்றொன்றைத் தேடினார் .. ரெண்டு பேர் கூற்றும் ஸமமாகாது ..

இங்கு ஸ்ரீ க்ருஷ்ணன் சொல்வது வேதங்களுக்கு எதிரான , யக்ஞ தானங்களுக்கு எதிரான வார்தைகள் இல்லை . வேதங்களின் பகுதியான உபநிஷதங்களும் இதே விஷயத்தைச் சொல்லி உள்ளன . பரமாத்மனை அறிவதற்கு இவை போதா என்பதுதான் தாத்பர்யம் ..    பரமாத்மனை அறிவது எங்ஙனம் ??  அடுத்த சொற்றொடரில் ..

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...