Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 150


கீதையில் சில சொற்றொடர்கள் - 150


भक्त्या तु अनन्यया शक्य ।  (अध्याय ११ - श्लोक ५)
பக்த்யா து அநந்யயா ஶக்ய ..  (அத்யாயம் 11 - ஶ்லோகம் 54)  
Bhaktyaa Tu Ananyayaa Shakya ..  (Chapter 11 - Shlokam 54)

அர்தம் :  அனந்ய பக்தி மூலம் மாத்ரமே என்னைக் காணலாம் ..

அந்ய - அனந்ய ..  அன்ய என்றால் மற்ற ..  வேறு ..  அனந்ய என்றால் மற்றது எதுவும் இல்லாமல் ..  வேறு எதுவும் இல்லாது ..  இது ஒன்று தான் , இவன் ஒருவன் தான் ..

பக்திக்கு அவரவர் ஒரு லக்ஷணம் வைத்து இருக்கிறோம் ..  நெற்றியில் சின்னங்கள் தரித்துக் கொள்வது ..  கழுத்தில் மாலைகள் அணிந்து கொள்வது ..  நித்ய பூஜை செய்வது ..    ஆலயத்திற்குச் செல்வது ..  தீர்த யாத்ரை செல்வது ..  ஸமய , ஸம்ப்ரதாய நிகழ்ச்சிகளில் பங்கு எடுப்பது ..  ஆன்மீக தெய்வ ஸம்பந்தமான புஸ்தகங்களைப் படிப்பது ..  ஆன்மீக ப்ர்வசனங்களைக் கேட்பது ..  நாம் ஸ்வயமாக பக்தியின் லக்ஷணங்களை நிர்ணயிக்கிறோம் ..  அதன் அடிப்படையில் நம்மை நாமே பக்திமான் என்று கருதிக் கொள்கிறோம் ..  தோஸையில் ஸாதா - ஸ்பெஷல் என்பது போல பக்தியிலும் ஸாதா , உயர்ந்த பக்தி , மிக மிக உயர்ந்த பக்தி என்றும் பக்தனையும் ஸாதா , சிறந்த பக்தன் , மிகச் சிறந்த பக்தன் என்று ஸ்தரம் பிரித்துக் கொள்கிறோம் ..  நெற்றியில் சிறிதாக சின்னம் இருந்தால் ஸாதா பக்தன் ..  நெற்றி நிறைய .. ஶரீரம் முழுவதும் சின்னங்கள் தரித்தால் மிகச் சிறந்த பக்தன் ..  சிறிது நேரம் பூஜை செய்பவன் ஸாதா பக்தன் ..  மணிக்கணக்காக செய்பவன் மிகச் சிறந்த பக்தன் ..

ஸ்ரீ க்ருஷ்ணன் பக்திக்கான ஒரே லக்ஷணம் சொல்கிறான் ..  கீதையில் அடிக்கடி சொல்கிறான் ..  அனந்ய பக்தி ..  அன்ய அல்லாத பக்தி ..  வேறெதுவும் இல்லாத பக்தி ..  நாம் தெய்வத்திடம் ஶரண் அடைந்து விட்டதாகச் சொல்வோம் ..  அரஸியல்வாதியிடம் கார்யத்தை முடித்துக் கொடுக்கக் கெஞ்ஜுவோம் ..  தெய்வ ஸந்நிதியில் , "எல்லாம் உன் இஷ்டம்" என்போம் ..  வெளியே வந்து நம் இஷ்டப் படி நடக்க வேண்டும் என்று ஜ்யோதிஷக் காரனை ஸந்திப்போம் ..  அவன் கூறும் பரிஹாரங்களைச் செய்வோம் ..  ஓம் ஸத்ய ஸ்வரூபாய நமஹ என்று அர்சிப்போம் ..  தொழிலில் தவிர்க்க முடியாது என்று பொய் பித்தலாட்டம் செய்வோம் ..  'பாலயமாம்' "என்னை ரக்ஷிப்பாய்" என்று பஜனை பாடுவோம் ..  இன்ஷ்யூரன்ஸ் , மெடிக்ளெய்ம் , ஃபுல் பாடி செக் அப் ..  என்று ஓடுவோம் ..  "நீயே கதி ஈஶ்வரீ" என்போம் ..  எதற்கும் இருக்கட்டும் என்று ராஹு கால பூஜையும் , நவக்ரஹ பூஜையும் செய்து வைப்போம் ..  ஸ்ரீ க்ருஷ்ணன் கூறும் பக்திக்கான ஒரே லக்ஷணம் அனந்ய பாவம் ..  வேறெதுவும் இல்லாத பக்தி .. 

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...