Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 156


கீதையில் சில சொற்றொடர்கள் - 156


क्लेशोSधिकतरस्तेषां अव्यक्तासक्त चेतसाम्  ...  (अध्याय १२ - श्लोक ५)
Klesho(a)dhikatarasteshaam Avyaktaasakta Chetasaam  ... (Chapter 12 - Shlokam 5)
க்லேஶோSதிகதரஸ்தேஷாம் அவ்யக்தாஸக்த சேதஸாம்  ... (அத்யாயம் 12 - ஶ்லோகம் 5)

அர்தம் :  அவ்யக்த நிராகார பரப்ரஹ்ம பரமாத்மன் மீது பற்று கொண்டு , உபாஸனை செய்து , அவனை அடைவது மிகக் கஷ்டம்  ...

மிகக் கடினம் ..  என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ..  ஏற்கெனவே நாம் இவ்விஷயத்தை சர்சை செய்திருக்கிறோம் ..  நாம் பூ லோக வாழ்க்கையில் ஶரீரம் மற்றும் இந்த்ரியங்களுடன் இருப்பவர்கள் ..  வெளிப்பட்டதையே நம்மால் அறிய முடியும் ..  நம் கண்கள் ரூபங்களைப் பார்த்து அறிந்திடும் ..  காதுகள் ஶப்தங்களைக் கேட்டு அறிந்திடும் ..  நாஸி கந்தங்களையும் நாக்கு ருசிகளையும் தோல் ஸ்பர்ஶத்தையும் அறிந்திடும் ..  மனஸ் ஸூக்ஷ்மமான கல்பனைகளையும் பாவனைகளையும் அறிந்திடும் என்பது ஸத்யம் ..  ஆனால் , அவையும் வெளிப்பட்டவையே , ஸ்தூலமாக அல்லாமல் ஸூக்ஷ்மமாக ..  புத்தியும் ஸூக்ஷ்மமான சிந்தனைகளை அறிந்திடும் ..  அவையும் வெளிப்பட்டவையே ..  கல்பனைகளும் சிந்தனைகளும் உலகத்தில் இருப்பவற்றைப் பற்றியே ..  இந்த்ரியங்கள் மூலம் அநுபவித்தவற்றைப் பற்றியே ..  இவ்வனைத்திலும் புற உலகத்துடன் இணைப்பு அவஶ்யம் ..

பரமனோ எவ்வகையிலும் வெளிப்படாதவர் ஆனால் அனைத்திலும் உறைபவர் ..  அனைத்தின் இயக்கத்திற்கும் காரணமாக இருப்பவர் , ஆனால் , விலகி இருப்பவர் ..  உலகத்தின் அணு அணுவில் இருப்பவர் ஆனால் எதுவும் இல்லாத நிலையிலும் இருப்பவர் ..  அவரை கல்பனை செய்து ப்ரயோஜனம் இல்லை ..  அவரைப் பற்றி சிந்தனை செய்தும் ப்ரயோஜனம் இல்லை ..  அவரை , அதை உணர வேண்டும் ..  அறிய வேண்டும் ..  உலக பந்தம் இல்லாமல் நம் உள்ளே நோக்கி அறிந்திட வேண்டும் ..  அதற்கான கருவி நம்மிடம் இல்லை ..  உலகத்தில் வாழ்ந்து கொண்டு , உலகத்துடன் பந்தத்தைத் துண்டித்துக் கொள்வதே மிகக் கஷ்டம் ..  அதனால் தான் நிர்குண நிராகார பரப்ரஹ்மத்தை உபாஸனை செய்து , அவனை அறிவது , அவனை அடைவது மிகக் கஷ்டம் என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ..

அதனால் ஸகுண ஸாகார உபாஸனை ஸுலபம் என்று சொல்லவில்லை ..  விக்ரஹ உபாஸனை உயர்ந்தது என்றும் சொல்லவில்லை ..  அதிலும் பல இடர்கள் உண்டு ..  இந்த்ரியங்களின் அநுபவத்திலேயே தேங்கி விடும் வாய்ப்பு உண்டு ..  விக்ரஹத்தை உபாஸிக்கிறேன் என்ற பாவனை மாறி , பரமனை உபாஸிக்கிறேன் என்ற பாவனை ஏற்படுவதே மிகக் கடினம் ..  அந்த மார்கமும் கஷ்டமானது தான் ..  நிர்குண நிராகாரத்தின் உபாஸனையுடன் ஒப்பிடும் போது கொஞ்ஜம் ஸுலபமானது ..  அல்லது கொஞ்ஜம் குறைவான கஷ்டங்கள் கொண்டது என்று கூறலாம் ..

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...