Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 159


கீதையில் சில சொற்றொடர்கள் - 159


त्यागच्छान्तिरनन्तरम्  ...  (अध्याय १२ - श्लोक १२)
த்யாகாத் ஶாந்திரனந்தரம்  ...  (அத்யாயம் 12 - ஶ்லோகம் 12)
Tyaagacchaanthiranantharam  ...  (Chapter 12 - Shlokam 12)

அர்தம் :  த்யாகத்தில் இருந்து பரம ஶாந்தி பிறந்திடும் ...

போகத்தில் ஸுகம் பிறந்திடும் ..  த்யாகத்தில் ஶாந்தி பிறந்திடும் ..  ஸுகம் .. க்ஷண நேர ஸுகம் அநுபவிக்கலாம் போகத்தில் .. தத்க்ஷண ஸுகம் , போகத்தை அநுபவிக்கும் அந்த க்ஷணத்தில் ஸுகம்  தோன்றிடும் ..  ஸுகம் ஒரு அநுபவம் ..  ஶாந்தி ஒரு நிலை ..  மன நிலை ..  நிலைத்திடும் ..  கால ப்ரவாஹத்தில் தன்மையாக , ஸ்வபாவமாக மாறிடும் ..

போகத்தில் ஸுகம் இருக்கிறது என்ற எதிர்ப்பார்ப்பும் , அதை அநுபவிக்க வேண்டும் என்ற விருப்பமும் தான் இந்த க்ஷண நேர ஸுகத்திற்கும் காரணம் ..  ஸுகத்துடன் சேர்ந்து மனஸில் பரபரப்பும் பிறந்திடும் ..  போகத்தை அநுபவிக்க முடியவில்லை என்றாலோ அதிலிருந்து எதிர்ப்பார்த்த ஸுகம் கிடைக்கவில்லை என்றாலோ ஏமாற்றமும் பிறந்திடும் ..  எதிர்ப்பார்ப்பு இல்லாததால் , விருப்பம் இல்லாததால் , பரபரப்பும் கிடையாது ..  ஏமாற்றமும் கிடையாது ..  ஶாந்திக்கு அடித்தளம் இதுவே ..  அத்துடன் விட்டுக் கொடுப்பதாலும் , மற்றவர்க்குக் கிடைத்திட முயல்வதாலும் , மற்றவர் அநுபவிப்பதைக் காண்பதால் கிடைத்திடும் ஆனந்தமும் இணைந்து விடுவதால் மனஸில் நிலைத்த ஶாந்தி பிறக்கிறது ..

ரயிலில் ஜன்னல் அருகில் அமர்ந்து ப்ரயாணம் செய்வது ஸுகமாக இருக்கிறது ..  விவாஹம் செய்து கொண்டு மனைவியுடன் ப்ரயாணம் செய்யும் போது , ஜன்னல் அருகில் உள்ள இருக்கையின் மீது கொண்ட பற்றினை விட்டு விட்டால் , மனைவி அந்த ஸுகத்தை அநுபவிப்பதைக் காண்பதில் மனஸ் ஆனந்தம் அடைகிறது ..  குழந்தைப் பிறந்த பின்னர் , குழந்தைக்காக ஸ்வந்த விருப்பம் காணாமல் போகும் போது மனஸில் பிறந்திடும் ஶாந்தி அலாதியானது ..

மெதுவாக அனைத்து விஷயங்களிலும் இதே மன நிலை ஏற்படும் போது ...  எதிர்ப்பார்ப்பும் விருப்பமும் மறைந்து விட்டால் , மனஸில் நிரந்தர ஶாந்தி பிறந்திடும் ..  எடுப்பதில் ஸுகம் என்றால் கொடுப்பதில் ஆனந்தம் ..  கொடுக்கிறேன் என்ற உணர்வும் இல்லாமல் , த்யாகம் செய்கிறேன் என்ற பாவனையும் இல்லாது ..  எதிர்பார்ப்பினை தொலைத்து விட்டால் , விருப்பத்தை விட்டு ஒழித்தால் ..  ஶாந்தி .. நிரந்தர ஶாந்தி பிறந்திடும் ..  ஶாந்தியே ஸ்வபாவம் ஆகி விடும் ...

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...