Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 160


கீதையில் சில சொற்றொடர்கள் - 160


निर्ममो निरहङ्कारः  ...  (अध्याय १२ - श्लोक १३)
நிர்மமோ நிரஹங்காரஹ ...  (அத்யாயம் 12 - ஶ்லோகம் 13)
Nirmamo Nirahankaarah   ...  (Chapter 12 - Shlokam 13)

அர்தம் :  நான் எனது என்ற பாவனை இல்லாதவன் ...

இது உலக வாழ்க்கையில் நடைமுறைக்கு வரவே முடியாத ஒரு யுடோபியன் கருத்தா ?  ஒரு ஜீவனுக்கு ஶரீரம் இருப்பது போலவே அஹங்காரமும் ..  இருக்கிறது ..  நான் 'இருக்கிறேன்  பரமாத்மாவின் ஸத் என்ற ஆதாரத் தன்மைக்கு ஸமமான ஒன்று ..

தேஹம் பஞ்சபூதங்களால் ஆனது ..  ப்ரக்ருதியின் வெளிப்பாடு .  மறுக்கப் பட முடியாத ஒன்று ..  ஆனால் , தேஹத்தைப் பற்றிய ஆஸக்தியும் (பற்றுதல்) தேஹ அபிமானமும் தேஹ உணர்வும் தவிர்க்கப் பட வேண்டியவை ..  அதே போல , அஹங்காரம் மறுக்கப் பட முடியாத ஒரு ஸத்யம் ..  அஹங்கார உணர்வு தவிர்க்கப் பட வேண்டியது ..  நான் அஸத்யமானவற்றுடன் தன்னைப் பிணைத்துக் கொள்வதால் ஏற்படும் பொய்யான "நான்" அபிமானங்கள் தவிர்க்கப் பட வேண்டியவை ..  (தேஹமே நான் ;  நான் புத்திஶாலி ; போன்று)  இது ஸாமான்ய "நிரஹங்கார" நிலை ..

ஆனால் , பக்தியில் இது போதாது ..  நம் உடன் வந்த நான் அல்லது அஹங்காரமும் இல்லாமல் போக வேண்டும் ..  உணர்வற்றுப் போக வேண்டும் ..  ஸமர்பணம் ஆக வேண்டும் ..  உனக்காக வாழ்ந்து , 'நீ' மாத்ரம்தான் என்று வாழ்ந்து அதன் விளைவாக நான் மறந்து போக வேண்டும் ..  நான் மறைந்து போக வேண்டும் ..  நிரஹங்கார என்று பறையும் போது , இதுவே ஸ்ரீ க்ருஷ்ணனின் அபிப்ராயம் ..  இத்தகையவனைத் தனது பரம பக்தன் , ப்ரிய பக்தன் என்கிறான் ஸ்ரீ க்ருஷ்ணன் ..

ஜீவன் ஶரீரம் , மனஸ் , புத்தி ஆகியவற்றுடன் உலகத்தில் பிறக்கிறது ..  இவை உடன் வருபவை ..  இங்கு வாழ்ந்திடும் போது , பணம் , பதவி , ஸொத்து , வீடு , வண்டி , மனைவி , மக்கள் என்று பலவற்றை சேகரிக்கிறான் மநுஷ்யன் ..  இவை தவிர்க்க முடியாதவை ..  குறைவாகவோ , அதிகமாகவோ ஸம்ஸார வாழ்க்கையில் இவை அவஶ்யமானவை ..  இவை இல்லாமல் வாழ்வதல்ல நிர்மம ..  இவற்றைத் தனது என்று கருதி , இவற்றை ஸ்வந்தம் கொண்டாடி , இவற்றின் மீது அதிகாரம் செலுத்துவதைத் தவிர்ப்பதே நிர்மம ..  இதையும் பக்திக்கு லக்ஷணமாக , தன் ப்ரிய பக்தனின் அடையாளமாகக் கூறுகிறான் ஸ்ரீ க்ருஷ்ணன் ..  

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...