Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 171


கீதையில் சில சொற்றொடர்கள் - 171


मतं मम  ..  (अध्याय १३ - श्लोक २)
மதம் மம  ..  (அத்யாயம் 13 - ஶ்லோகம் 2)
Matam Mama  .. (Chapter 13 - Shlokam 2)

அர்தம் :  என்னுடைய கருத்தில்  ..

மீண்டும் ஒரு முறை ..  ஸ்ரீ க்ருஷ்ணனின் வாணியில் இவ்வார்தைகள் வெளிவருகின்றன ..  "என்னுடைய அபிப்ராயம் இது .."  அவனுக்குத் தகுதி இருக்கிறது ..  அதிகாரம் இருக்கிறது ..  இறுதியான ஒரு அறிவிப்பை வெளியிட முடியும் ..  அவ்வாறு வெளியிட்டால் அவனை எதிர்ப்பவர்களோ , அவனுடன் வாக்குவாதம் புரிபவர்களோ பாண்டவர்களில் இல்லை ..  இருந்தாலும் அவன் எப்பொழுதும் , 'இது என்னுடைய கருத்து' என்றே கூறுவான் ..  கீதையை அவன் நிறைவு செய்யும் போது , "ஹே அர்ஜுனா !  நீ எனக்கு ப்ரியமானவன் என்பதால் உனக்கு விவரமாக விளக்கினேன் ..  இனி யதேச்சஸி .. ததா குரு ..  உன் இஷ்டம் போல நீ செய்திடு .." என்கிறான் ..  இது அவனுடைய உயர்ந்த ஆளுமையை வெளிப்படுத்துகிறது ..  இத்தகைய ஆளுமை வெகு ஸஹஜமாக 'தலைவன்' ஆக பரிணமிக்கும் ..

இன்றைய நவீன உலகில் 'ஜனநாயகம்' 'ஜனநாயகம்' என்று உரத்த குரலில் பேசப் படுகிறது ..  ஆனால் , மேற்கில் தோன்றிய இந்த ஜனநாயகம் எல்லா விஷயங்களிலும் ராஜாவின் தலையீட்டை எதிர்த்து உருவானது ..  இது எதிர்மறையானது ..  உண்மையில் ஜனங்களின் மனப்பான்மையே ஜனநாயகம் ..  "நான் சொல்வதே இறுதி ஸத்யம் .." ;  "இதை எதிர்த்துக் கேள்வி கேட்க உரிமை கிடையாது .." ;  "என் பாதை மாத்ரமே ஸரியானது .." ;  "நான் வழிபடுபவம் தெய்வம் மாத்ரமே ஒரே தெய்வம் .." ; (யா இலாஹா இல்லல்லா .. அல்லது யேஶு ஒருவனே தெய்வம் .. போன்ற) ..  ஒரு தேஶத்தில் இத்தகைய மனப்பான்மை ஓங்கினாள் , அங்கு ஜனநாயகம் மலர முடியாது ..  அரஸாங்கத்தைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடக்கலாம் ..  ஜனங்கள் வாக்களிக்கலாம் ..  எனினும் , அங்கு ஜனநாயகம் செழிக்க முடியாது ..

"இதுவும் ஸரியாக இருக்கலாம் .." ;  "நீ சொல்வதும் ஸத்யமே .." ;  "கேள்வி கேட்பதும் ஸந்தேஹம் தீர்த்துக் கொள்வதும் க்ஞானத் தேடலின் ஆதாரம் .." ; "நீ தேர்ந்தெடுக்கும் பாதையில் செல்ல உனக்கு உரிமை உண்டு .." ;  "தெய்வம் ஒருவனே ..  அவனை வெவ்வேறு ஜனங்கள் வெவ்வேறு ரூபத்தில் வழிபடுகிறார்கள் .."  இத்தகைய மனப்பான்மையே ஜனநாயகம் ..  ராஜாங்க முறை எப்படியும் இருக்கலாம் ..  ராஜா ஆளும் முறை இருந்தாலும் இந்த மனப்பான்மை இருந்தால் அது ஜனநாயகமே ...  ஸ்ரீ க்ருஷ்ணன் உண்மையான ஜனநாயக வாதி ..

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...