Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 175


கீதையில் சில சொற்றொடர்கள் - 175


विविक्त देश सेवित्त्वम ।।  (अध्याय १३ - श्लोक १०)
விவிக்த தேஶ ஸேவித்வம் ..  (அத்யாயம் 13 - ஶ்லோகம் 10)
Vivikta Desha Sevithvam ..  (Chapter 13 - Shloka 10)

அர்தம் :  ஏகாந்தத்தில் இருந்திடும் வழக்கம் ..

தனிமையை நாடுதல் ..  தனிமை என்பது யாரும் இல்லாத இடம் என்பது உண்மை ..  ஆரண்யம் , மலை உச்சி , குஹை , நதிக்கரை ..  போன்ற இடங்கள் ..  ஆனால் இதை விட முக்யம் மனஸில் தனிமையை உணர்வது ..  யாரும் இல்லாத ஒரு இடத்தைக் கண்டு பிடித்து விடுதல் ஸுலபம் ..  அவ்விடத்திற்குச் சென்று விடுவதும் ஸுலபம் ..  இந்த அவஶ்யத்திற்குத் தீனி போட்டு பெரும் பணம் பண்ணும் முயற்சியில் நவீன ஸாமியார்கள் பலர் நதிக்கரைகளிலும் மலை உச்சிகளிலும் ஆரண்யங்களிலும் ஆஶ்ரமங்கள் கட்டி வைத்துள்ளனர் ..  ஏகாந்தத்தை நாடுபவர்கள் ஆயிரங்களில் கட்டணம் கட்டி , அந்த ஆஶ்ரமங்களில் ஸில தினங்கள் தங்கி , ஸாமியாரின் உரைகளைக் கேட்டு , ஆன்மீக உயர்வு அடைந்து விட்டதாக ஒரு பொய்யான உணர்வுடன் திரும்புகின்றனர் ..

எவரும் இல்லாத தனிமையை விட மனஸின் உள்ளே தனிமை உணர்வை அநுபவிப்பதே உண்மையான ஏகாந்தம் ..  பரபரப்பான சூழ்நிலை நிலவும் இடத்தில் , ஜன நெருக்கடி உள்ள இடத்தில் இருந்தாலும் , தன்னுள் பரபரப்பு இறங்க அநுமதிக்காததே ஏகாந்தம் ..  ஸுற்றி உலகத்தின் நிகழ்வுகளை அறிந்திட ஆர்வம் , அடுத்தவர் உலகத்த்தில் நுழைந்து , அதில் உள்ள குறை நிறைகளை ஸ்வாரஸ்யமாக அநுபவிக்கும் ஆர்வம் , பிறர் உலகின் நிகழ்வுகள் தன்னை பாதிக்க அநுமதித்தல் , இவை எல்லாம் உள்ளே நிலவும் தனிமையை , உண்மையான ஏகாந்தத்தை பாதிக்கும் ..

உள்ளே ஏகாந்தம் இல்லாமல் புறத் தனிமையை நாடுதல் உள்ளே புயலை வைத்துக் கொண்டு வெளியே அமைதியைத் தேடுவது போலாகும் .. .நான் எட்டாம் வகுப்பில் இருந்த போது , தீபாவளி விடுமுறையில் ஜபல்பூர் சென்று கொண்டிருக்கும் போது வழியில் இத்தகைய தனிமையை உணர்ந்தேன் ..  உள்ளே ஏகாந்தத்தை அநுபவித்தால் , புறச் சூழ்நிலைகள் நம்மை பாதித்திடாது ...

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...