Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 176


கீதையில் சில சொற்றொடர்கள் - 176


अरतिः जन संसदि ।।  (अध्याय १३ - श्लोक १०)
அரதிஹ் ஜன ஸம்ஸதி ...  (அத்யாயம் 13 - ஶ்லோகம் 10)
Aratih Jana Samsadi ..  (Chapter 13 - Shloka 10)

அர்தம் :  ஜனக் கூட்டங்களில் ஆர்வம் இன்மை ..

வாஸலில் , தெருவில் ஒரு அரவம் கேட்டால் உடனே ஓடி வந்து என்னவென்று பார்ப்பது , ஒரு பிண ஊர்வலமோ , மாப்பிள்ளை ஊர்வலமோ வேறு ஏதோ ஒரு ஊர்வலமோ சென்றால் நின்று பார்ப்பது , தேவை ஏதும் இல்லாத போதும் 'shopping' என்ற பெயரில் கடை வீதிக்குச் செல்வது , ஜக ஜக வென்று விளக்கு அலங்காரம் ஆர்வம் காட்டி அது என்னவென்று அறிய முற்படுவது , தெருமுனையிலோ , அரஸ மரத்தடியிலோ , திண்ணையிலோ உட்கார்ந்து அர்தம் இல்லாத அரட்டையில் நேரத்தைக் கழிப்பது , வம்புப் பேச்சில் ருசி காட்டுவது , பரபரப்பாகக் கூவி விற்கப்படும் செய்திப் பத்ரிகையை வாங்கத் துடிப்பது , தெருவில் கூட்டம் கூடி நின்றால் எட்டிப் பார்ப்பது , டீவி சேனல்களில் நடக்கும் வெற்று விவாதங்களைப் பார்த்து விட்டு அதற்கு தேஶபக்தி , பொது அறிவு என்று முலாம் பூசுவது , காலையில் எழுந்து சுறுசுறுப்பாக , உத்ஸாஹமாக இருக்க வேண்டிய நேரத்தை Newspaper படிக்கிறேன் என்ற பெயரில் சோம்பலில் கழிப்பது ...  இவை போன்ற பலப்பலவும் ரதிஹி ஜன ஸம்ஸதீ ...  ஜனக் கூட்டங்களில் ஆர்வம் காட்டுதல் ஆகும் ..  இவற்றுக்கு நேர்மாறானவை "அரதிஹி" ..

ஸம்ஸத் என்றால் லோக ஸபா , விதான் ஸபா ..  அரட்டை அரங்கம் ..  பேசுவதே அங்குத் தொழில் ..  பேசுவதே அங்கு கடமை ..  ஊரைப் பற்றி , தேஶத்தைப் பற்றிப் பேசுவது ..  உரிய சட்டங்களை இயற்றுவது ..  இதுவே இந்த ஸபைகளின் கடமை ..  அர்தமுள்ளப் பேச்சு , ஜன நலனைப் பற்றிய பேச்சு , விவாதம் , அரட்டை , வெற்றுப் பேச்சு , தாக்கிப் பேச்சு , கூச்சல் , வசை மொழி ..  பேச்சு அவரவர் ஸ்வபாவப்படி இருந்திடும் ..  ஆனால் தொண்டை தான் அங்கு முதலீடு ..  அங்கு என்ன பேசப்பட்டது , யார் யார் என்னப் பேசினார் என்று அறிய ஆர்வம் தேவை அற்றது ..  நமக்கு எந்த வகையிலும் ப்ரயோஜனம் இல்லாதது ..

இந்த ஆர்வத்தைத் தூண்டி , கூட்டத்தைக் கூட்டி , பணம் பண்ணும் தொழில்கள் பல .  கீறிப் பாம்பு சண்டைக் காட்டுதல் முதல் டீவி சேனல் வரை .  கீறிப் பாம்புச் சண்டை காட்டியவன் தெருவில் சிறிய கூட்டத்தைக் கூட்டி , சில்லறைகளை ஸம்பாதித்தான் ..  அதற்காக பலவித வார்தை ஜாலங்கள் செய்தான் ..  பத்ரிகைகள் அரை நிர்வாணப் படங்கள் , திகில் செய்திகள் , ஊர்வம்பு , பரிசுகள் , போன்ற ஜாலங்களில் ஈடுபட்டு circulation பெருக்கி லக்ஷங்களில் ஸம்பாதிக்கின்றன ..  டீவி சேனல்கள் இதையே மேலும் கவர்ச்சிக் கூட்டி , வர்ணஜாலங்கள் குழைத்து , பரிசு மழை என்று ஜனங்களை ஜொள்ளு விட வைத்து , TRP வளர்த்து , கோடிகளில் ஸம்பாதிக்கின்றன ..  ஆன்மீக ஸாதகனுக்கு இந்த ஆர்வம் அனாவஶ்யமானது ..

பிற நலன் விழைதல் என்பதை மையமாக வைத்து , அதற்கு ஏற்ப பிறர் மீது அக்கறை கொள்ளுதல் , உறவு வளர்த்திட அவஶ்யமான அளவிற்கு உரையாடுதல் , பொது நலன் , ஸேவை யில் ஈடுபட்டால் அதற்கு ஏற்ற அளவில் ஊர் நிகழ்வுகளை அறிந்து கொள்ள முற்படுதல் , என்ன வாங்க வேண்டும் என்பதைத் தெளிவாக நிர்ணயம் செய்து விட்டு கடை வீதிக்குச் செல்லுதல் , யாரை எதற்காக ஸந்திக்க வேண்டும் என்ற தெளிவான முடிவுடன் வெளியே கிளம்புதல் , என்ன அறிய வேண்டும் என்பதை நிஶ்சயம் செய்து கொண்டு அதை அறிவதற்காக லைப்ரரிக்கோ , ப்ரவசனத்திற்கோ , மற்ற கூட்டத்திற்கோ செல்லுதல் ..  தெளிவான தேடுதலுடன் டீவி சேனல் , இன்டர்நெட் ஆகியவற்றை நாடுதல் , நேரத்தைப் பற்றிய ப்ரக்ஞை , 'சும்மா' என்று வார்தையை வாழ்க்கையை விட்டு வெளியேற்றி விடல் ..  இவை ஸாதகனுக்கு நன்மை தரும் ..

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...