Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 177


கீதையில் சில சொற்றொடர்கள் - 177


अध्यात्मज्ञाननित्यत्त्वम् ...  (अध्याय १३ - श्लोक ११)
அத்யாத்ம க்ஞான நித்யத்வம் ..  (அத்யாயம் 13 - ஶ்லோகம் 11)
Adhyaatma Gyaana Nityattvam ..  (Chapter 13 - Shlokam 11)

அர்தம் :  அத்யாத்ம சிந்தனையில் எந்நேரமும் திளைத்து இருப்பது ..

எந்நேரமும் அத்யாத்ம சிந்தனையில் திளைத்து இருந்தால் , உலக சிந்தனை எவ்வாறு செய்வது , எப்பொழுது செய்வது ??  உலக சிந்தனை இல்லாமல் உலகக் கார்யங்களைச் செய்வது எங்ஙனம் ??  அத்யாத்ம (ஆன்மீக) சிந்தனையில் இருந்த படி , உலகீய கார்யங்கள் செய்தல் இயலுமா ??

ஸ்ரீ நாரத பக்தி ஸூத்ரத்தில் பக்தியை விளக்குகிறார் ஸ்ரீ நாரதர் ..  கதை கேட்டல் பக்தியா ?  ஆலயத்திற்குச் செல்லுதல் பக்தியா ?  இல்லை இல்லை ..  கோகுலத்து கோபிகளைப் போல வாழ்வது பக்தி என்கிறார் ..  வெளிப்படையான காக்ஷியில் , தோற்றத்தில் மாறுதல் இல்லை ..  கோபிகளும் நம் அனைவரைப் போல , ஸாதாரண கார்யங்களில் ஈடுபட்டனர் ..  ஆனால் , கார்யங்களை ஸ்ரீ க்ருஷ்ணனுக்காகவே செய்தனர் ..

கார்யங்களைத் தனக்காகச் செய்தல் , தானே செய்வதாகக் கருதிச் செய்தல் லௌகீகம் ..  அதே கார்யங்களை அவனுக்காகச் செய்தால் அது ஆன்மீகம் ..  லௌகீகம் அலுப்பு ஏற்படுத்த வல்லது ..  களைத்துப் போகச் செய்வது ..  ஆன்மீகம் அல்லது அத்யாத்மம் ஆனந்த மயமானது ..

அத்யாத்ம சிந்தனையில் இருந்த படி உலகக் கார்யங்களைச் செய்தால் , அனைத்து கார்யங்களும் அத்யாத்ம ஸாதனை ஆகி விடும் ..  ப்ரத்யேகமாக ஆன்மீக முயற்சிகள் அவஶ்யம் இல்லை ..  செய்தாலும் மனஸ் வெகு ஸஹஜமாக அம்முயற்சிகளில் லயித்து விடும் ..  உலக சிந்தனை குறுக்கிடாது ..  அம்முயற்சிகளைக் கெடுத்திடாது ..  நேர்மாறாக , உலக சிந்தனையில் திளைத்தவாறு உலகக் கார்யங்களைச் செய்து விட்டு , ப்ரத்யேகமான ஆன்மீக ஸாதனைகள் அவனுக்காகச் செய்ய முயன்றிடும் போது , உலக சிந்தனை அம்முயற்சிகளில் குறுக்கிட்டுக் கெடுத்திடும் ..

உலகக் கார்யங்களை முடித்து விட்டு , உலக வாழ்க்கையை வாழ்ந்து முடித்து விட்டு , வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் அத்யாத்ம விசாரத்திலும் அத்யாத்ம முயற்சிகளிலும் ஈடுபடலாம் என்று பலரும் நினைப்பதற்கு உலக சிந்தனையை விலக்கி வைக்க முடியாததே காரணம் ..  உலகக் கார்யங்களில் இருந்து விடுபட்டு விட்டாலும் , இவர்களால் உலக சிந்தனைகளில் இருந்து விடுபட முடிவதில்லை ..  வாழ்க்கையின் அந்திம க்ஷணம் வரை உலக சிந்தனையில் மூழ்கி , பிணைக்கப்பட்ட நிலையில் வாழ்கின்றனர் இவர்கள் ..

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...