Skip to main content

ஸ்ரீ குரு பௌர்ணமீ ..

நேற்று


ஸ்ரீ குரு பௌர்ணமீ ... அல்லது ஸ்ரீ வ்யாஸ பௌர்ணமீ .. ஆஷாட மாஸ பௌர்ணமீ ஸ்ரீ குருவிற்காக அர்பணம் .. குரு என்பவர் வெறும் டீசர் , கற்றுக் கொடுப்பவர் இல்லை .. குரு என்பவர் வெறும் லெக்சரர் .. உரை நிகழ்த்துபவர் இல்லை .. குரு ஒரு ஆற்றலைக் கற்றுக் கொடுக்கும் வெறும் பயிற்சியாளர் இல்லை .. ஆனால் இவர்களில் எவராலும் ஒரு குரு ஆக முடியும் ..
குரு என்ற வார்தை .. கு என்றால் இருள் .. ரு என்றால் அழிப்பவர் .. இருளை அழித்தொழிப்பவர் குரு .. நம்முள் நிறைந்திருக்கும் இருள் ..
குரூர்ப்ரஹ்மா குரூர்விஷ்ணுஹு குரூ தேவோ மஹேஶ்வரஹ குரூ ஒரு ஸ்ருஷ்டிகர்தா .. படைப்பாளி .. குரு பாதுகாப்பவர் .. குரு அழிப்பவர் .. குரூ எதையும் செய்யாத பரப்ரஹ்ம பரமாத்மா .. எதையும் செய்யாதவர் ஆனால் நடக்கும் அனைத்துச் செயல்களுக்கும் காரணமானவர் ..
இன்று நடந்த ஸெமினாரில் கருத்தரங்கில் சர்சைக்கு வந்த விஷயங்கள் ..
குரு ஶிஷ்ய ஸம்பந்தம் ஸ்நேஹம் மற்றும் பக்தி அடிப்படையில் அமைகிறது .. குருவின் மனஸில் ஶிஷ்யனைப் பற்றி ஸ்நேஹமும் .. ஶிஷ்யனின் மனஸில் குருவைப் பற்றி பக்தியும் ...
குரு விஶேஷமானவர் ஏனென்றால் ஶிஷ்யனுடன் ரக்த ஸம்பந்தம் ஏதும் இல்லாமலும் ஶிஷ்யன மீது அபார ப்ரேமை வைக்கிறார் .. எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாத ப்ரேமை .. தூய்மையான ப்ரேமை ..
தன்னிடம் உள்ள அனைத்தையும் ஶிஷ்யனுக்கு அளிக்கிறார் குரு .. ஶிஷ்யனைத் தனக்கு ஸமமாக உருவாக்குகிறார் .. ஶிஷ்யன் தன்னை விட உயர்ந்தவனாகும் போது குரு மனஸில் ஆனந்தம் ஏற்படுகிறது .. பொறாமை அல்ல ..
உபதேஶம் உப -- தேஶம் .. உப என்றால் ஸமீபத்தில் .. அருகில் .. தேஶம் என்பது சொல்லுதல் .. காட்டுதல் .. புரிய வைத்தல் .. அதாவது அருகில் இருந்து சொல்லுதல் .. குரு ஶிஷ்யனுக்கு அருகில் இருப்பதால் அவருடைய ஒழுக்கம் ஶிஷ்யனுக்குத் தெளிவுறத் தெரிகிறது ..
ஸ்ரீமத் பகவத் கீதையில் ஸ்ரீ க்ருஷ்ணன் ஶிஷ்யனிடம் மூன்று எதிர்ப்பார்ப்புகள் வைக்கிறார் .. ப்ரணிபாத .. நமஸ்காரம் அல்லது விநயம் .. பரிப்ரஶ்ன அதாவது கேள்விகள் கேட்டு ஸந்தேஹம் தெளிவது .. ஸேவா ..
குருவிற்கு ஸேவை பணிவிடை ..
இன்று நம் ஸ்ரீ காஞ்சி ஶங்கர வித்யாலயத்தில் ஸ்ரீ குரு பௌர்ணமீயை முன்னிட்டு , மூன்று நிகழ்வுகள் நடந்தன .. காலையில் குழந்தைகள் ஸ்ரீ குரு பூஜை செய்தனர் .. வேத வ்யாஸர் , ஸ்ரீ ஆதி ஶங்கரர் , மற்றும் காஞ்சி பீடத்தின் ஆசார்யர்கள் ஆகியோரின் படங்களுக்கு புஷ்பங்கள் அர்பணித்து நமஸ்காரம் செய்தனர் ..பின்னர் , வித்யாலயத்தின் புஸ்தகாலயம் (Library) திறந்து வைக்கப் பட்டது .. ஸ்ரீ கே வீ பாலக்ருஷ்ணன் (Retd Manager State Bank Of India ) மிக அழகாக , நம் வாழ்வில் புஸ்தகங்கள் என்ற விஷயத்தை விளக்கினார் .. ஸாயங்காஸம் ஆசிரியர்களுக்கான ஒரு கருத்தரங்கு , ஸ்ரீ குருவைப் பற்றிய கருத்தரங்கு நடந்தது .. இதில் மேல் வகுப்பு மாணவர்கள் , நம் வித்யாலய ஆசிரியர்களும் அருகில் உள்ள வித்யாலயத்து ஆசிரியர்கள் அழைக்கப் பட்டனர் .. அனைவரும் தத்தம் விஷயங்களை சிறப்பாக முன் வைத்தனர் .. குறிப்பாக , ரங்கா மெட்ரிகுலேஷன் ஆசிரியர் ஸ்ரீ முத்துக்ருஷ்ணன் , ஶங்கர மட வேத பாடஶாலை வாத்யார் ஸ்ரீ ஸுப்ரஹ்மணியன் , மற்றும் நம் வித்யாலயத்து மாணவிகளின் தாயார் ஸ்ரீமதி யோகாம்பாள் இம்மூவரும் மிக அழகாகப் பேசினர் .. பெரும்பாலான மாணவர்களுக்கு , ஏன் ஸில ஆசிரியர்களுக்கும் ஸ்ரீ குரு பூஜையின் இந்த அநுபவம் முதல் அநுபவம் .. உண்மையில் இந்த தினம் அதாவது ஸ்ரீ வ்யாஸ பௌர்ணமீ தான் நம் தேஶத்தில் ஆசிரியர் தினமாக அறிவிக்கப் பட்டிருக்க வேண்டும் ..

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...