Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 179


கீதையில் சில சொற்றொடர்கள் - 179


बहिरन्तश्च भूतानाम् अचरं चरमेव च दूरस्थं चान्तिके च तत् .. (अध्याय १३ - श्लोक १५)
பஹிரந்தஶ்ச பூதானாம் அசரம் சரம் ஏவ ச தூரஸ்தம் சாந்திகேச தத் ..  (அத்யாயம் 13 - ஶ்லோகம் 15)
Bahiranthashcha Bootaanaam Acharam Charameva cha Doorastham Chaantike Cha Tat ..  (Chapter 13 - Shlokam 15)

அர்தம் :  அனைத்து உயிர்களின் உள்ளும் வெளியும் இருப்பவர் ..  வெகு அருகில் இருந்தாலும் வெகு தூரத்தில் இருப்பவர் ..

சரம் என்பவை ஒரு இடத்தில் இருந்து மற்ற இடத்திற்கு மாறக் கூடிய ஜீவன்கள் ..  ப்ராணிகள் , பக்ஷிகள் , மநுஷ்யர்கள் ..  அசரம் என்பவை அசைய முடியாத ஜீவன்கள் ..  மரம் , செடி கொடிகள் ..  ஸ்ரீ பரமாத்மன் இவ்வனைத்து ஜீவன்களிலும் இருக்கிறான் ..  க்றிஸ்தவ மதம் நேர் எதிரான கருத்தை ப்ரஸ்தாபிக்கிறது ..  ப்ராணிகள் மற்றும் மரங்களை தெய்வீகமாக ஏற்றுக் கொள்வதில்லை ..  பாமர ஹிந்துக்களை மதம் மாற்றும் முயற்சியில் இந்தக் கருத்தையே வலியுறுத்துகின்றனர் க்றிஸ்தவ மத ப்ரசாரகர்கள் ..  "மரங்களிலும் ப்ராணிகளிலும் தெய்வம் இருக்க முடியுமா ?" என்று கேள்வி கேட்டு ஹிந்துக்களைக் குழப்ப முயல்கின்றனர் ..  மநுஷ்யர்களிலும் பெண்களை தெய்வீகப் படைப்பு என்று ஏற்றுக் கொள்ளாத ஒரு மதத்தில் வேறு எவ்வாறு எதிர்ப்பார்க்கலாம் ..  ஹிந்து தர்மத்தை க்றிஸ்தவத்துடன் ஒப்பிடவில்லை ..  ஒப்பிடவும் முடியாது ..  ஹிந்து தர்மம் மிக உயரத்தில் வீற்றிருக்கிறது ..  க்றிஸ்தவம் குழந்தைத்தனமான ப்ரகடனங்களுடன் மிகக் கீழ் நிலையில் உள்ளது ..

ஸ்ரீ பரமாத்மன் அனைத்து ஜீவன்களிலும் வீற்றிருக்கிறான் என்பதே ஸத்யம் ..  அனைத்து ஜீவன்களும் தெய்வீகமானவை ..  ஜீவன்கள் உயிர் வாழ்வதும் பல்வேறு ஆற்றல்களை வெளிப்படுத்துவதும் அவன் இருப்பதாலே ..  அதே ஸமயம் , ஜீவன்களுக்கு வெளியிலும் அவன் இருக்கிறான் ..  இந்தப் படைப்பில் அணு அணுவிலும் அவன் இருக்கிறான் ..  நதி , மலை , ஸூர்ய சந்த்ரன் ..  அனைத்திலும் அவன் இருக்கிறான் ..  இவை ஜடம் , அல்லது உயிரற்றவை என்று தோன்றினாலும் .. அணு அளவில் அவன் இருக்கிறான் ..

ஸ்ரீ பரமாத்மன் வெகு ஸமீபத்தில் இருக்கிறான் ..  வெகு தூரத்திலும் இருக்கிறான் ..  தூர தூரத்து க்ரஹங்கள் நக்ஷத்ரங்களிலும் எல்லையில்லா இப்படைப்பு முழுவதும் அவன் இருக்கிறான் .. நாம் அழைத்த தத் க்ஷணம் நம்மிடம் வந்து விடுவதால் அவன் நமக்கு வெகு அருகில் இருக்கிறான் என்பது புரிகிறது ..  நாம் உலகக் கவர்ச்சியில் மூழ்கி இருக்கும் போது அவன் வெகு தூரத்தில் , அடையப் பட முடியாதவன் ஆகிறான் ..

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...