Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 181


கீதையில் சில சொற்றொடர்கள் - 181


प्रभविष्णु च भूतभर्तृ च ग्रसिष्णु ..  (अध्याय १३ - श्लोक १६)
ப்ரபவிஷ்ணு ச பூதபர்த்ரு ச க்ரஸிஷ்ணு ..  (அத்யாயம் 13 - ஶ்லோகம் 16)
Prabhavishnu Cha BhootaBhartru Cha Grasishnu .. (Chapter 13 - Shlokam 16)

அர்தம் :  அனைத்து ஜீவன்களையும் உத்பத்தி செய்பவன் , அனைத்தையும் போஷித்து பரிபாலனம் செய்பவன் , அனைத்தையும் அழிப்பவன் ..

ஸ்ருஷ்டியில் நடந்திடும் மூன்று ப்ரதான கார்யங்கள் ..  படைத்தல் அல்லது உருவாக்குதல் , பாதுகாத்தல் அல்லது பராமரித்தல் ..  மற்றும் அழித்தல் ..  தொழில்துறையில் இதே மூன்று கார்யங்கள் நடக்கின்றன ..  தொழில்ஶாலை நிறுவப்படுகிறது ..  அங்கு உத்பத்தி செய்யப் படுகிறது ..  தொழில்ஶாலை பராமரிக்கப் படுகிறது ..  அங்குள்ள யந்த்ரங்கள் பராமரிக்கப் படுகின்றன ..  உத்பத்தி ஆனவை அவற்றை வாங்குபவர்களால் பராமரிக்கப் படுகின்றன ..  கழிவுகள் , குறை உள்ளவை , ஸ்க்ரேப் (Scrap) , குப்பை , பயனற்ற உடைந்து போன யந்த்ரங்கள் , தொழில் நுட்பம் காரணமாக காலாவதியான யந்த்ரங்கள் ஆகியவை அழிக்கப் படுகின்றன ..  நம் வீட்டிலும் இதே மூன்று கார்யங்கள் நடக்கின்றன ..  வீடு கட்டப் படுகிறது .  பராமரிக்கப் படுகிறது ..  அழித்து மீண்டும் புதிதாகக் கட்டப் படுகிறது ..  வீட்டில் உள்ள பொருட்களும் , அன்றாடம் தயாராகும் உணவும் , கடவுளுக்காக கோர்க்கப் படும் ஹாரங்களும் , மற்ற அனைத்துமே இம்மூன்று கார்யங்களுக்கு உட்படுத்தப் படுகின்றன ..  இயற்கையிலும் இம்மூன்று கார்யங்களும் நடை பெறுகின்றன ..  பெரும் நதிகளும் , ஸமுத்ரங்களும் , மலைகளும் , நகரங்களும் , தேஶங்களும் காணாமல் போய் இருக்கின்றன ..

இவை மூன்றுமே கடினமான கார்யங்கள் ..  படைத்தல் அல்லது உருவாக்குதல் கடினம் ..  மிக அதிக க்ஞானமும் , கடும் உழைப்பும் அவஶ்யம் ..  அதனால்தான் படைக்கும் ப்ரஹ்மாவிற்குத் துணையாக இருப்பவள் க்ஞான ஸ்வரூபியான ஸரஸ்வதீ ..  பராமரிப்பதும் (பாதுகாப்பது) கடினம் ..  இயற்கையில் அழிவு நிஶ்சயம் என்பதால் பாதுகாப்பது இயற்கைக்கு எதிரான போராட்டம் ..  பராமரிப்பதற்கு அவஶ்யமானது த்ரவ்யம் .  அதனால்தான் பராமரிக்கும் விஷ்ணுவிற்குத் துணையாக இருப்பவள் செல்வத்திற்கு அதிபதியான மஹாலக்ஷ்மீ ..  அழிப்பதும் மிகக் கடினம் ..  இன்று நவீன தொழில் நுட்பத்தில் படைக்கப்பட்ட கம்ப்யூடர் , மொபைல் ஃபோன் , ஸேடலைட் , ப்லாஸ்டிக் , போன்ற பலவற்றை அழிப்பது பெரும் ஸவாலாக வளர்ந்துள்ளது ..  அழிப்பதற்கு மிக அதிக ஆற்றல் , மஹா ஶக்தி அவஶ்யம் ஆகிறது ..  ஆதலால் அழிக்கும் ஸ்ரீ பரமஶிவனுக்கு ஶக்தியே துணை ..

இம்மூன்று கார்யங்களும் ஸ்ரீ பரமாத்மனின் கார்யமே என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ..

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...