Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 182


கீதையில் சில சொற்றொடர்கள் - 182


ध्यानेन साङ्ख्येन योगेन कर्मयोगेन ...  (अध्याय १३ - श्लोक २४)
த்யானேன ஸாங்க்யேன யோகேன கர்மயோகேன . (அத்யாயம் 13 - ஶ்லோகம் 24)
Dhyaanena Saankhyena Yogena KarmaYogena ..  (Chapter 13 - Shlokam 24)

அர்தம் :  த்யான யோகம் மூலம் , ஸாங்க்ய யோகம் மூலம் , கர்மயோகம் மூலம் ..

இவை பல்வேறு பாதைகள் ..  யோகத்தை எய்துவதற்கான பாதைகள் ..  ஸ்ரீ பகவானுடன் இணைவதற்கான பாதைகள் ..  த்யானம் , ஸாங்க்யம் , கர்மயோகம் போன்ற வெவ்வேறு மார்கங்களில் பலரும் முயல்கின்றனர் என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ..

இப்பாதைகள் அனைத்தும் கீதையில் சர்சை செய்யப் பட்டுள்ளன ..  ஆறாம் அத்யாயத்தில் த்யான மார்கம் பேசப் பட்டுள்ளது ..  த்யானத்திற்கு அவஶ்யமான புறச் சூழ்நிலை , ஶரீர நிலை மற்றும் மனநிலை விளக்கப் பட்டுள்ளன ..  த்யானத்திற்கு அநுகூலமான உணவும் சர்சிக்கப் பட்டுள்ளது ..  மனஸை கட்டுப்படுத்தும் ரஹஸ்யத்தை விளக்குகிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ..  யோக முயற்சியில் தடுமாறி பாதை மாறி விடுபவனின் கதி என்ன என்பதையும் விளக்குகிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ..

பல இடங்களில் க்ஞானத்தின் மஹிமை பேசப் படுகிறது என்றாலும் ரெண்டாம் அத்யாயத்தில் விரிவாக பேசப் படுகிறது ..  தேஹம் , தேஹினன் அதாவது தேஹம் மற்றும் தேஹத்தை அணிந்தவன் என்ற அடிப்படையில் "நான்" , கருதப் படும் நான் , நிஜ நான் .. ஆகியவை ஸ்ரீ க்ருஷ்ணனால் விளக்கப் பட்டுள்ளன ..  க்ஞானத்தில் நிலைத்து நிற்பதற்கு அவஶ்யமான ஸ்திர புத்தி விரிவாகவே விளக்கப் பட்டுள்ளது ..  ஸ்ரீ ரமண மஹர்ஷீ இதே மார்கத்தை அநுஸரித்தார் ..  "நான் யார்" என்ற கேள்வியில் ப்ரயாணத்தை ஆரம்பிக்க வலியுறுத்துகிறார் ..

கர்மயோகம் ப்ரதானமாக மூன்றாம் அத்யாயத்தில் பேசப் படுகிறது ..  கர்மங்களில் திளைப்பதே கர்மயோகம் இல்லை ..  கர்மஃபலன் மற்றும் கர்மத்தின் மீது பற்று விலக்குவதே கர்மயோகம் ..  மேலும் , கர்மம் என்பது ஸ்தூல கர்மம் , அதாவது வெளிப்படையாகச் செய்யப்படும் கர்மம் மாத்ரம் இல்லை ..  ஸூக்ஷ்ம அளவில் , மனஸளவில் செய்யப் படுவதும் கர்மமே என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ..  அத்யாயத்தின் இறுதியில் "நானின்" அமைப்பு ..  ஸ்தூல ஶீரீரம் மற்றும் ஸூக்ஷ்ம ஶரீரங்கள் விளக்கப் படுகின்றன ..

வெவ்வேறு பாதைகளை விளக்கினாலும் எந்த ஒரு பாதையையும் ஸ்ரீ க்ருஷ்ணன் 'sponsor' செய்யவில்லை ..  இதுவே உகந்தது , இதுவே சிறந்தது என்று எதையும் சுட்டிக் காட்டவில்லை ..  சிலர் இந்த பாதையில் வருகிறார் ..  வேறு சிலர் வேறு பாதையில் வருகிறார் என்கிறார் ..  பாதைகள் பல்வேறு உண்டு ..  அனைத்தும் ஸமமானவையே என்பதை மீண்டும் ஒரு முறை வலியுறுத்துகிறார் ..

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...