Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 183


கீதையில் சில சொற்றொடர்கள் - 183


श्रुतिपरायणाः  ..  (अध्याय १३ - श्लोक २५)
ஶ்ருதி பராயணாஹ ..  (அத்யாயம் 13 - ஶ்லோகம் 25)
Shruthi Paraayanaah ..  (Chapter 13 - Shlokam 25)

அர்தம் :  கேட்டதற்கு ஏற்ப ஒழுகும் மநுஷ்யன் ..

ஶ்ருதி என்றால் கேட்கப் படுவது ..  பராயணாஹா என்றால் அதற்கு ஏற்ப ..  அதே சிந்தனையில் ..  அதைப் பதிய வைத்தல் ..  கேட்டதற்கு ஏற்ப நடத்தல் ..  கேட்டதை மனஸில் பதிய வைத்தல் ..  கேட்டதை வாழ்க்கையில் கடைப் பிடித்தல் இன்று அர்தம் கொள்ளலாம் ..

நாம் ஸம்ஸாரத்தில் இருக்கும் போது நம் காதுகள் திறந்தே இருக்கின்றன ..  நம்மை ஸுற்றி எழும் ஶப்தங்கள் நம் காதுகளில் நுழைந்தவாறு இருக்கின்றன ..  இவற்றைத் தவிர்க்க இயலாது ..  காதுகளுக்குப் பூட்டு போட முடியாது ..  ஸம்ஸாரத்தில் ருசி இல்லாமல் இருத்தல் , காதுகளுக்குப் பின்னால் நம் மனஸை நிறுத்தாமல் இருத்தல் என்பதுதான் ஸம்ஸார ஶப்தங்கள் காதுக்குள் நுழையாமல் தடுத்திட நமக்கிருக்கும் ஒரே வழி ..

ஶ்ருதி பராயணாஹா ..  கேட்டதைச் சிந்திக்க வேண்டும் ..  கேட்டதற்கு ஏற்ப ஒழுக வேண்டும் ..  என்றால் கண்டவர்ப் பேச்சையும் கேட்டு , அதை சிந்தையில் போட்டு அரைப்பதல்ல அர்தம் ..  கேட்டல் என்பது ஒரு கார்யம் ..  அதற்குப் பின்னால் ஒரு நிர்ணயம் உண்டு ..  என்ன கேட்க வேண்டும் ..  யாரிடம் கேட்க வேண்டும் என்ற நிர்ணயம் அதை விட உகந்தது ..  நம் மனஸில் உள்ள ஸந்தேஹங்கள் , நம் ஸ்வபாவம் , நம் வாழ்க்கை அநுபவங்கள் இவற்றுக்கு ஏற்ற ஒரு குருவைத் தேடி , அவருக்கு ஸேவை செய்து , அவர் காலடியில் அமர்ந்து , அவர் சொல்வதைக் கேட்டலே கேட்டல் ஆகும் ..  கேட்டு , அதைச் சிந்தித்து , அதை வாழ்க்கையில் கடைப் பிடிக்க முயலுதல் ஶ்ருதி பராயணாஹா ..

சிந்தனைத் தெளிவு இருந்தால் , தேடல் உறுதியாக இருந்தால் , எந்த வார்தையும் , எவருடைய வார்தையும் , ஏன் !! பக்ஷிகளின் ப்ராணிகளின் புரியாத ஶப்தங்களும் பராயணத்திற்கு ஏற்றவை ஆக முடியும் ..  இவை இல்லாத நிலையில் கண்டவர் பேச்சையும் கேட்டு , அதன் படி ஒழுக முயன்றால் மனஸில் குழப்பமே ஓங்கும் ..  வாழ்க்கை திஶையற்றுப் போகும் ..

ஶ்ருதி என்றால் வேதம் ..  (வேதம் கேட்கப் பட்டது .. எவராலும் எழுதப் பட்டதல்ல .. என்பதால் இந்தப் பெயர் உண்டு ..)  ஶ்ருதி பராயணாஹா என்றால் வேதம் சொல்வது போல் வாழ்தல் ..  வேதத்தை அநுஸரித்து வாழ்தல் என்றும் அர்தம் ஆகும் ..  ஶ்ருதி பராயணம் என்பதையும் ஸ்ரீ பரமாத்மனை நோக்கி அழைத்துச் செல்லும் ஒரு மார்கமாக , ஸ்ரீ பரமனுடன் இணைய வைக்கும் ஒரு உபாயமாக ,  ஸ்ரீ க்ருஷ்ணன் இங்கு கூறுகிறார் ..

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...