Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 186


கீதையில் சில சொற்றொடர்கள் - 186


यदा भूतपृथग्भावं एकस्थं .. तत एव विस्तारम् च अनुपश्यति .. (अध्याय १३ - श्लोक ३०)
யதா பூத ப்ருதக்பாவம் ஏகஸ்தம் .. தத ஏவ விஸ்தாரம் ச அநுபஶ்யதி  ...  (அத்யாயம் 13 - ஶ்லோகம் 30)
Yadaa Bhoota PruthagBhaavam Ekastham Tata Eva Vistaaram cha Anupashyati ... (Chapter 13 - Shlokam 30)

அர்தம் :  பற்பல ரூபங்களில் பரிணமித்துள்ள பல ஜீவன்களில் ஒரே ப்ரக்ருதியைக் காணும் ஸாதகன் ..  ஒரே ப்ரக்ருதியின் விஸ்தாரமாக வகை வகையான ஜீவன்களைக் காணும் ஸாதகன் ...

பலப்பல வர்ணங்களாகவும் பலப்பல ரூபங்களாகவும் காணப்படும் ஜீவ ஶரீரங்கள் அனைத்தும் ஒரே ப்ரக்ருதியின் , மஹத்தின் வெளிப்பாடு ..  ஒரு ப்ரக்ருதியே பலப்பலவாக மிளிர்ந்துள்ளது ..  அடுத்த அத்யாயத்தில் விளக்குகிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ..  அனைத்து ஜீவன்களுக்கும் யோனி அல்லது கர்பம் ப்ரக்ருதியினுடையது ..  பீஜம் அல்லது விதையை நான் அருள்கிறேன் என்கிறார் ..

ப்ரக்ருதியே மஹாபூதங்களாக , ப்ருத்வீ , ஜலம் , வாயு , அக்னீ மற்றும் ஆகாஶமாக வெளிப்படுகிறாள் ..  மஹாபூதங்களின் அம்ஶங்களே ஜீவன்களின் ஶரீரங்களாக பரிணமிக்கின்றன ,,  நம் ஶரீரங்கள் பஞ்சபூதங்களால் ஆனது ..  ப்ருத்வீ (மண்) , ஆப (நீர்) , வாயு , அக்னீ மற்றும் ஆகாஶ் ..  மரணத்தின் போது , ஶரீரத்தின் பூதங்கள் விஸர்ஜனம் ஆகி , ப்ரக்ருதியின் மஹாபூதங்களில் கரைந்து விடுகின்றன ..

ஏறக்குறைய 20 லக்ஷ ஸ்தாவர வகைகள் , 20 லக்ஷ ப்ராணிகள் , 20 லக்ஷ பக்ஷி வகைகள் மற்றும் 20 லக்ஷ பூச்சி வகைகள் என்று ஸுமார் 82 லக்ஷ ஜீவன்கள் ..  ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு வர்ணங்களில் , வெவ்வேறு ரூபங்களில் ஶரீரங்கள் , ஒரே வகை ஜீவனில் பல்லாயிர , பல லக்ஷ பல கோடி உயிர்கள் , அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ஶரீரம் ..  இந்த பலப்பல கோடி ஶரீரங்களும் அநுதினம் , நித்யம் , ஒவ்வொரு க்ஷணமும் தேய்ந்து அழிந்து கொண்டிருக்கின்றன ..  புதுஸாக உருவாகிக் கொண்டும் இருக்கின்றன ..  (விக்ஞான பாஷையில் metabolism ..)  தொடர்ந்து இந்த ஶரீரங்களில் இருந்து பஞ்ச பூதங்கள் வெளியேறி , மஹாபூதத்தில் கரைந்து கொண்டு இருக்கின்றன ..  ஒவ்வொரு க்ஷணமும் மஹாபூதத்தில் இருந்து பஞ்ச பூதங்கள் ஶரீரங்களுக்குள் நுழைந்து , ஶரீரங்களைப் புதுப்பித்துக் கொண்டும் இருக்கின்றன ..  என்ன மஹத்தான கார்யம் ..

ஸாதகன் இதைப் பார்க்க வேண்டும் ..  உணர வேண்டும் என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ..  மேலெழுந்த வாரியாகத் தெரிந்திடும் விதங்களில் , வர்ணங்களில் , ரூப பேதங்களில் மயங்கி விடக் கூடாது என்கிறார் ..  பலப்பலவாகத் தெரிவதனைத்தும் ஒன்றின் விரிதலே என்பதைப் பார்க்க வேண்டும் என்கிறார் ..  இருப்பதில் இல்லாததையும் இல்லாததில் இருப்பதையும் பார்ப்பதே ஸாதகனின் கண்கள் ..

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...