Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 188


கீதையில் சில சொற்றொடர்கள் - 188


तासां ब्रह्म महाद्योनिः अहं बीजप्रदः पिता .. (अध्याय १४ - श्लोक ४)
தாஸாம் ப்ரஹ்ம மஹத் யோனிஹி அஹம் பீஜஹ ப்ரதஹ பிதா ..  (அத்யாயம் 14 - ஶ்லோகம் 4)
Taasaam Brahma MahadYonihi Aham BeejaPradah Pitaa ..  (Chapter 14 - Shlokam 4)

அர்தம் :  உத்பத்தி ஆகும் அனைத்து ஶரீரங்களுக்கும் கர்பம் அளிக்கும் மாதா ப்ரக்ருதி ..  கர்பத்திற்கு பீஜம் (விதை) அளிக்கும் பிதா நானே ..

இந்த ஸம்ஸாரத்தில் நம் ஜன்மம் எவ்வாறு நடக்கிறது ??  தாயின் கர்பத்தில் பத்து மாஸங்கள் நாம் இருக்கிறோம் ..  அங்கு நம் ஶரீரம் உருவாகி , வளர்கிறது ..  கர்பம் அளித்தவள் தாய் ..  நம் ஶரீரம் உருவாவதற்கு , வளர்வதற்கு வழி வகுப்பவள் தாய் ..  அவள் அருந்திடும் போஜனம் அவஶ்யமான போஷாக்குகள் அளித்து , அவளுடைய ஶரீரத்தையும் போற்றி , உள்ளே கர்பத்தில் இருக்கும் ஶிஶுவின் ஶரீரத்தையும் வளர்த்து விடுகிறது ..  ஆனால் , இதற்கெல்லாம் மூல காரணமாக இருப்பது தந்தை அளித்திடும் வீர்யம் எனும் பீஜம் ..

இங்கு ஸ்ரீ க்ருஷ்ணன் அதி அத்புதமான ஒரு விஷயத்தைச் சொல்கிறார் ..  நம் அனைவருக்கும் ஸ்ரீ பரமேஶ்வரனே பிதா ..  நம் ஶரீரங்கள் ப்ரக்ருதியின் பஞ்ச பூதக் கலவையால் உருவாகின்றன ..  அதனால் ப்ரக்ருதியே நமக்குத் தாய் ..  ஶரீரங்களுக்கு சைதன்யம் அளிப்பது புருஷனின் அம்ஶமான ஜீவன் ..  (ஆத்மா வாஸனைகளுடன் ஓட்டும் போது ஜீவன் எனப்படுகிறது .. ஸ்ரீ பரமாத்மாவிற்கும் புருஷனுக்கும் இருக்கும் வித்யாஸமும் இதுவே ..  பரப்ரஹ்மமாக இருக்கும் ஸ்ரீ பரமாத்மன் உருவாக்கி விளையாட வேண்டும் என்று விரும்பி , தன்னை புருஷனாக வெளிப்படுத்திக் கொள்கிறார் ..  ப்ரக்ருதி அல்லது மாயையை ஸ்ருஷ்டி செய்கிறார் ..   மாயையுடன் இணைந்து ஸம்ஸாரத்தை ஸ்ருஷ்டி செய்கிறார் ..)  இவ்வகையில் புருஷனே , பரமனே நமக்குத் தந்தை ஆகிறார் ..  மநுஷ்ய குலத்திற்கு மாத்ரம் அல்ல ..  அனைத்து ஜீவன்களுக்கும் பிதா அவனே ..

ஸ்வாமி விவேகானந்தர் க்றிஸ்தவப் பாதிரிகளைப் பார்த்துச் சொல்வார் ..  "மநுஷ்யன் அம்ருதத்திற்க்குப் பிறந்தவன் ..  ஸ்ரீ பரமாத்மாவிற்குப் பிறந்தவன் ..  அவனது அம்ஶமே ஜீவன்கள் அனைத்தும் ..  அவனை பாபத்திற்குப் பிறந்தவன் என்று சொல்வதே பாபம் ..  ஹே பாபிகளே என்று மநுஷ்யனை அழைப்பது மிகப் பெரும் பாபம்" ..  அதன் ஆதாரம் ஸ்ரீ க்ருஷ்ணன் கீதையில் இங்கு கூறும் இந்த வார்தைகளே ..  வேதத்திலும் மநுஷ்யனை அம்ருத புத்ரன் என்று சொல்லப் பட்டுள்ளது .. "அம்ருதஸ்ய புத்ரோஹம் .."

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...