Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 189


கீதையில் சில சொற்றொடர்கள் - 189


सत्त्वं रजस्तम इति गुणाः प्रकृति सम्भवाः ..  (अध्याय १४ - श्लोक ५)
ஸத்வம் ரஜஸ்தம இதி குணாஹ ப்ரக்ருதி ஸம்பவாஹ .. (அத்யாயம் 14 - ஶ்லோகம் 5)
Sattvam RajasTama Iti Gunaah Prakruti Sambhavaah .. (Chapter 14 - Shloka 5)

அர்தம் :  ஸத்வம் , ரஜஸ் மற்றும் தமஸ் என்ற மூன்று குணங்கள் ப்ரக்ருதியில் இருந்து உத்பத்தி ஆனவை ..

ஸத்வம் , ரஜஸ் மற்றும் தமஸ் இவை முக்குணங்கள் ..ப்ரக்ருதியில் தோன்றிய இவை மூன்றும் ஸ்ருஷ்டியில் அனைத்திலும் காணப் படுகின்றன ..  இம்மூன்று குணங்களின் பல்லாயிரக்கணக்கான விதக் கலவைகள் படைப்பில் உள்ள ஆயிரம் ஆயிரம் வகைகளுக்குக் காரணம் என்று சொல்லலாம் ..  ஸ்தாவரங்கள் , பஶு பக்ஷீகள் , பூச்சி வகைகள் , மநுஷ்ய இனம் என்று அனைத்துமே முக்குணங்களின் கலவை ..  ஜீவன்களின் ஸ்தூல ஶரீரங்கள் ப்ரக்ருதியில் தோன்றிய பஞ்ச பூதங்களின் கலவை என்றால் ஸூக்ஷ்ம ஶரீரங்கள் வெளிப்படுத்தும் குணங்கள் அல்லது தன்மைகள் முக்குணங்களின் கலவை எனலாம் ..  முக்குணங்களின் எத்தனை கோடி கலவைகள் (Combinations) இருக்க முடியுமோ , அத்தனை கோடி மனப்பான்மைகளைக் காண முடியும் ..

முக்குணங்கள் என்பது ஹிந்துக்கள் உலகத்திற்கு அளித்த மஹத்தானதொரு பங்காற்றல் ..  குறிப்பாக மனோ விக்ஞானத்தில் இந்த விவரம் புரக்ஷிகர மாற்றம் - முன்னேற்றத்தை ஏற்படுத்தி உள்ளது எனலாம் ..

அனைத்து உயிர்களிலும் இவை மூன்றும் கலந்தே உள்ளன ..  ஒன்று அதிகமாகவும் மற்ற ரெண்டும் குறைவாகவும் இருக்கலாம் ..

முக்குணங்கள் மற்றும் இம்மூன்றின் கலவைகள் வகைகளே அன்றி பேதங்கள் அல்ல ..  இம்மூன்றினுள் உயர்வு தாழ்வு என்ற பேதங்கள் கிடையா ..  குணங்கள் ப்ரக்ருதியின் அம்ஶம் ஆனதால் பரமனை அறிவதில் இவை பயன் அற்றவை ..  ஆத்யாத்மீக ஸாதகர்கள் இம்மூன்று குணங்களையும் தாண்டி உயர வேண்டும் ..  குணாதீதன் ஆக வேண்டும் ..

முக்குணங்களைப் படித்தவுடன் ஸுற்றி உள்ளவர்களின் குணங்களை ஆராய்ந்து , மதிப்பெண் அளிக்கும் முயற்சியில் இறங்கக் கூடாது ..  தன்னை ஆராய்ந்து அறிவதற்கு மாத்ரமே பயன்படுத்த வேண்டும் .. 


Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...