Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 199


கீதையில் சில சொற்றொடர்கள் - 199


अव्यभिचारेण भक्ति योगेन ..  (अध्याय १४ - श्लोक २६)
அவ்யபிசாரேண பக்தி யோகேன ..  (அத்யாயம் 14 - ஶ்லோகம் 26)
Avyabhichaarena BhakthiYogena ..  (Chapter 14 - Shlokam 26)

அர்தம் :  அசையாத பக்தியினால் ..

அஸையாத பக்தியினால் ..  நிலையான பக்தியால் ..  இதற்கு ஸ்ரீ க்ருஷ்ணன் உபயோகப் படுத்தும் வார்தை ..  அவ்யபிசாரேண பக்தி ..  வ்யபிசாரியைப் போல் அல்லாமல் ..  கடுமையான உபமானம் .. 

வ்யபிசாரி (வேஶி) ஒரு ஆணுடன் உறவு வைத்துக் கொள்ளக் காரணம் என்ன ??  அவன் கொடுக்கப் போகும் பணம் ..  தன் மனஸில் உள்ள ஆஶைகள் , கனவுகளை பூர்தி செய்யப் போகும் அந்தப் பணம் ..  மற்றபடி , அவனைப் பற்றிய எந்த சிந்தனையும் அக்கறையும் அவளுக்குக் கிடையாது ..  'நீ இல்லை என்றால் வேறொருவன்' என்ற கருத்தே ..

பக்தி என்ற பெயரில் நாம் பகவானுடன் கொள்ளும் உறவைப் பாருங்கள் ..  அவனிடம் செல்கிறோம் ..  நம் மனஸு முழுவதும் நம்முடைய தேவைகள் , நம்முடைய கோரிக்கைகள் , நம்முடைய கவலைகள் தான் நிரம்பி உள்ளன ..  அவன் இல்லை ..  அவனது பெருமைகளோ அவனது மஹிமைகளோ இல்லை ..  நம் தேவைகளை அவன் அநுப்பி வைப்பான் , நம் கோரிக்கைகளை அவன் பூர்தி செய்து வைப்பான் , நம் கவலைகளை அவன் தீர்த்து வைப்பான் என்ற எதிர்ப்பார்ப்புடன் அவன் ஸந்நதிக்குச் செல்கிறோம் ..  பிரார்தனை என்ற பெயரில் அவனிடம் கெஞ்ஜுகிறோம் ..  மன்றாடுகிறோம் ..  மிரட்டி நிர்பந்தப் படுத்தவும் முயல்கிறோம் ..  ஆனால் , மனஸின் அடியாழத்தில் , "நீ இல்லை என்றால் வேறொருவன்" என்ற கருத்தே இருக்கிறது ..

பக்தி என்றால் உறுதியான ஶ்ரத்தை வேண்டும் ..  அவன் இருக்கிறான் என்ற ஶ்ரத்தை ..  அவன் அறிவான் என்ற ஶ்ரத்தை ..  அவஶ்யமானதை , அவஶ்யம் என்று அவன் நினைத்தால் , அருள்வான் என்ற ஶ்ரத்தை ..  என் சிந்தனையில் எந்நேரமும் மூழ்கி இருப்பவனின் யோக - க்ஷேமத்தை நான் பூர்தி செய்கிறேன் என்ற வாக்குறுதி செய்தவன் அல்லவா அவன் !!  எல்லாவற்றையும் விட்டு என்னை ஶரண் அடைந்தால் , உன்னுடைய ஸர்வ பாபங்களையும் அழித்து மோக்ஷம் அருள்கிறேன் என்ற திவ்ய வாக்குறுதியை அளித்தவன் அல்லவா அவன்  ஶ்ரத்தையுடன் கூடிய , மற்ற எதைப் பற்றியும் கவலைப் படாத இத்தகைய பக்தியையே அவ்யபிசாரேண பக்தி என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ..

Comments

  1. Arumai arumai ji. அருமையாக விளக்கியுள்ளீர். இப்படித்தான் பலர் என் பெயரை rakavan என்று சொல்வார்கள். Raghavan என்று எப்படி புரிய வைப்பது?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...