Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 201


கீதையில் சில சொற்றொடர்கள் - 201


असङ्ग शस्त्रेण दृढेन छित्वा ..  (अध्याय १५ - श्लोक ३)
அஸங்க ஶஸ்த்ரேண த்ருடேன சித்வா ..  (அத்யாயம் 15 - ஶ்லோகம் 3)
Asanga Shastrena Drushena Chittvaa ..  (Chapter 15 - Shlokam 3)

அர்தம் :  த்ருடமான பற்றின்மை என்ற ஶஸ்த்ரத்தால் இதை வெட்டு ..

ஸம்ஸாரம் என்பது என்ன ??  ஸம்ஸாரம் ஒன்றா ??  பலவா ??  படைக்கப் பட்டது ஒரு ஸம்ஸாரம் தான் ..  ஆனால் , லோகத்தில் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் லபிக்கும் ஸம்ஸாரம் வெவ்வேறு ..  அவரவருக்கு அவரவர் கர்மங்களுக்கு ஏற்ற ஸம்ஸாரமே கிடைக்கிறது ..  ஒருவனின் கர்ம வினைகளே அவனுக்குக் கிடைக்கும் ஸம்ஸாரம் ..  இந்தக் கூற்று நமக்கு விசித்ரமாகத் தோன்றலாம் ..  ஆனால் சிந்தித்தால் புரியும் ..

நாம் ஒவ்வொருவரும் பிறக்கும் இடம் , பிறந்து வளரும் குடும்பம் , நிலவும் ஸமூஹச் சூழ்நிலை , நாம் பயிலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் , அங்கு நிலவும் சூழ்நிலை , கிடைத்திடும் வாய்ப்புகள் , நட்பு வட்டம் , சென்று வரும் நகரங்கள் மற்றும் தேஶங்கள் , நமக்கு அறிமுகம் ஆகும் கலைகள் மற்றும் புஸ்தகங்கள் , நமக்குக் கிடைத்திடும் அநுபவங்கள் , நமக்குக் கிடைத்த அத்ருஷ்டத்தின் ஸஹாயம் , கண்ணுக்குப் புலப்படாத ஶக்தியின் காரணமாக நாம் இழந்த வாய்ப்புகள் , போன்று எத்தனை எத்தனை விஷயங்கள் ..  இவற்றுக்கு மேல் எத்தனை எத்தனை கோபங்கள் , வெறுப்புகள் , பொறாமைகள் , வாக்கு வாதங்கள் , அஹங்கார வெளிப்பாடுகள் , பழி வாங்கல் , மனத் தொய்வுகள் , ஆணவத் துள்ளல்கள் ..  நமக்கு அறிமுகம் ஆகும் உலகம் , நாம் பார்த்திடும் ஸம்ஸாரம் நமக்கு மாத்ரமே கிடைப்பது ..  இவை அனைத்தும் நம் கர்மத் தொகுப்பின் விளைவு ..  இவை ப்ரத்யேகமானவை ..  ஒவ்வொருவர் முன் விரிந்திடும் உலகமும் வெவ்வேறு ..  உலகத்தை விவரிக்கச் சொல்லுங்கள் ..  அவர் தன் வாழ்க்கையைதான் விவரிப்பார் ..  எனவே , படைக்கப் பட்டது ஒரே ஸம்ஸாரம் தான் என்றாலும் அவரவருக்கு அவரவர் கர்மவினைகள் தான் ஸம்ஸாரம் ..  

இந்த உலகம் கவர்ச்சிகரமானது ..  கசந்தால் வெறுப்பு , கோபம் , பழி வாங்கும் உணர்வு ஆகியவை மூலம் கவர்கிறது ..  இனித்தால் விருப்பம் , பெருமை , பேராஶை , போன்றவையால் கவர்கிறது ..  இந்தக் கவர்ச்சியை , இந்த பந்தத்தை வெட்ட வேண்டும் என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ..  வைராக்யம் தான் கர்ம பந்தத்தை அறுத்திடும் ..  வைராக்யம் என்ற வாளால் ஸம்ஸாரத்தை வெட்டி விடு ..

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...