Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 202


கீதையில் சில சொற்றொடர்கள் - 202


तमेव प्रपद्ये  ..  (अध्याय १५ - श्लोक ४)
தமேவ ப்ரபத்யே ;..  (அத்யாயம் 15 - ஶ்லோகம் 4) 
Tameva Prapadye ..  (Chapter 15 - Shlokam 4)

அர்தம் :  தங்களையே ஶரண் அடைகிறேன் ..

ஶரணம் அஹம் ப்ரபத்யே ..  நான் உன்னை ஶரணடைகிறேன் ..  ஶரணடைதல் ஹிந்து தர்மத்தில் மாத்ரமே உள்ள விஶேஷம் ..  ஶரண்  அடைந்தவனுக்கும் அடிமைக்கும் வித்யாஸம் உண்டு ..  வலுக்கட்டாயமாக அடிமை ஆக்கப் படுகிறான் ..  ஸ்வயமாக ஶரணடைகிறான் ..  பலஹீனன் அடிமை ஆகிறான் ..  அபாரமான மனோபலம் கொண்டவன் ஶரண் அடைகிறான் ..  யஜமானின் பண பலத்திற்கும் அதிகாரத்திற்கும் அடிமை ஆகிறான் ..  யஜமானால் விட்டெறியப் படும் பணமும் , யஜமான் கையால் உயர்த்தப் படும் சாட்டையும் அடிமைக்குத் தளைகள் ..  அவனைக் கட்டிப் போடுபவை ..  அவனது அடிமை ஶாஸனத்தை வலுப்படுத்துபவை ..  ஶரணடைபவனுக்கு இத்தகைய தளைகள் எதுவும் கிடையாது ..  ஶரணடைந்து விட்டாலும் அவன் முழு ஸ்வதந்த்ரமானவன் ..  அவனுடைய அவஶ்யங்கள் அனைத்தும் யஜமானால் பூர்தி செய்யப் படுகின்றன ..  ஆனால் , அதைப் பற்றி எந்தக் கவலையும் ஶரண் அடைந்தவனுக்குக் கிடையாது ..  அத்தகைய எதிர்ப்பார்ப்பும் கிடையாது ..  அடிமை ஆதல் ஒரு வ்யாபார ஒப்பந்தம் ..  ஶரணடைதல் அன்பின் வெளிப்பாடு ..  பக்தியின் வெளிப்பாடு ..  அடிமைக்கும் யஜமானனுக்கும் உணர்வு பூர்வமான உறவோ பந்தமோ இருந்திடாது ..  இருந்தால் கோபமும் வெறுப்பும் இருந்திடலாம் ..  ஶரணடைந்தவனுக்கு யஜமானைப் பற்றி அன்பு மாத்ரமே இருந்திடும் ..  அடிமை தனது நிலையை (அடிமைத் தனத்தை) உணர்ந்தால் அதிலிருந்து வெளியேற முற்படுவான் ..  ஶரணடைந்தவன் அந்நிலையில் நிரந்தரமாக இருக்க விரும்பிடுவான் ..  அடிமையின் மனஸ் ஶோகம் நிறைந்து இருக்கும் ..  அடிமைத்தனம் ஒரு ஶோகநிலை ..  ஶரணடைந்தவன் மனஸ் ஆனந்தம் நிறைந்து இருக்கும் ..  ப்ரபத்ய நிலை ஒரு ஆனந்த நிலை ..

ஶரணாகதி எப்பொழுதும் ஒரு தூய நபரிடமே , உன்னத அமைப்பிடமே இருக்க முடியும் ..  பகவான் , ஒரு மஹோன்னத லக்ஷ்யம் , அல்லது ஒரு மஹோன்னத லக்ஷ்யத்திற்கு கார்யம் செய்யும் அமைப்பு ..  வெகு அரிதாக , ஶரணாகதி ஒரு மநுஷ்யனிடம் , சிறந்த , உயர்ந்த மநுஷ்யனிடம் , லவ லேஶமும் ஸ்வய நலம் இல்லாத மநுஷ்யனிடம் , உன்னத லக்ஷ்யத்திற்கு ஸமர்பணம் ஆன மநுஷ்யனிடம் ஆக முடியும் ..  மநுஷ்யனுக்கே அடிமை ஆக முடியும் ..  அப்பட்டமான ஸ்வயநலம் கொண்ட மநுஷ்யன் , கொடூர மனஸ் கொண்ட மநுஷ்யன் , மற்றவரின் பலஹீனத்தை , மற்றவரின் உழைப்பை , மற்றவரின் இயலாமையை ஸுரண்டும் மனப்பான்மை கொண்ட மநுஷ்யன் அல்லது இத்தகைய மநுஷ்யர்களின் ஸமூஹத்திடமே அடிமை ஆக முடியும் ..

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...