Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 203


கீதையில் சில சொற்றொடர்கள் - 203


ममैवांशः जीवभूतः जीवलोके ..  (अध्याय १५ - श्लोक ७)
மமைவாம்ஶஹ ஜீவபூதஹ ஜீவலோகே ..  (அத்யாயம் 15 - ஶ்லோகம் 7) 
Mamaivaamshah Jeeva Bhootah Jeevaloke ..  (Chapter 15 - Shlokam 7)

அர்தம் :  லோகத்தில் உள்ள ஜீவன்கள் அனைத்தும் எனது அம்ஶமே ..

படைப்பு மற்றும் பரிணாம வளர்ச்சியைப் பற்றி பல்வேறு கருத்துக்கள் உண்டு ..  ஒரு மஹா ப்ரகாஶம் இருந்தது ..  அதில் இருந்து மஹா - பூதங்கள் உருவாகின ..  அவற்றில் இருந்து காலப் போக்கில் க்ரஹங்களும் அவற்றில் உயிர்களும் உருவாகின என்கிறது ஒரு கருத்து ..  வெறும் ஆகாஶம் அல்லது அண்ட வெளி இருந்தது ..  அதில் ஶப்தம் உருவானது ..  ஹிந்து புஸ்தகங்கள் அந்த ஶப்தத்தை ஓம் என்று சொல்கின்றன ..  அந்த ஶப்தத்தில் இருந்து அனைத்தும் உருவாகின ..  என்கிறது ஒரு கருத்து ..  ஹிந்து க்ரந்தங்கள் இதற்கு அப்பால் நோக்குகின்றன ..  ஸ்ரீ பரமாத்மன் அந்த ஒளி அல்லது ஒலிக்குக் காரணமாக இருக்கிறார் ..  அவரே அந்த ஒளியாக , ஶப்தமாக வெளிப்படுகிறார் ..  எனவே , அனைத்தும் அந்த ஒன்றின் அம்ஶங்களே ..  அதை ஒளியாகக் கருதினால் அந்தப் பேரொளியின் ஒரு அம்ஶம் (கீறல்) ..  அதை ஒலியாக , ஶப்தமாகக் கருதினால் அதன் ஒரு அலை ..  அதை ஆற்றலாகக் கருதினால் அந்த மஹா ஆற்றலின் ஒரு துளி ..  இதுவே ஸ்ரீ க்ருஷ்ணன் சொல்வது ..  அனைத்து ஜீவன்களும் எனது அம்ஶங்களே ..

வெறுமையாக ஶூந்யமாக இருந்த ஒன்று இருந்தது ..  அது விரிந்தது ..  வெடித்துச் சிதறியது ..  அந்த சிதறல்களே படைப்பில் உள்ள அனைத்தும் என்கிறது ஒரு கருத்து ..  அச்சிதறல்கள் எவ்வளவு பெரியவை ??  அல்லது எவ்வளவு சிறியவை ??  பல பத்திகள் கிடைக்கக் கூடிய கேள்வி ..  ஒரு பால் - வழி (MilkyWay) அதை விட பெரியதின் சிதறல் ..  ஒவ்வொரு ஸூர்ய குடும்பமும் அதைவிடப் பெரிய பால் - வழியின் சிதறல் ..  ஒரு க்ரஹமும் அதை விடப் பெரிய ஸூர்ய குடும்பத்தின் அம்ஶம் ..  பூமியில் உள்ள ஒவ்வொரு உயிரும் ஒரு மஹா - ப்ராணனின் அம்ஶம் ..  உயிரினில் இயங்கும் ஒவ்வொரு அணுவும் அந்த உயிரின் அம்ஶம் ..  அந்த அணுவிற்குள் காணப்படும் ஸூக்ஷ்ம அங்கங்கள் அந்த அணுவின் அம்ஶங்கள் ..  அவற்றைப் பிளக்க முடிந்தால் அங்கு காணப்படக்கூடிய ஶூந்யம் அல்லது வெறுமை அதனுடைய அம்ஶம் ..  ஶூந்யத்தில் இருந்து ஶூந்யம் வரை ..  ப்ருஹதின் அம்ஶம் ..  அம்ஶமாகத்தான் இருக்க முடியும் ..

ஒரு பெரிய யந்த்ரத்தில் , ஒவ்வொரு உறுப்பும் அந்த யந்திரத்தின் அம்ஶம் ஆகும் ..  தனியாக , அந்த உறுப்புக்கு எவ்வித அர்தமும் கிடையாது ..  அதற்கு எவ்வித ஆற்றலோ நோக்கமோ கிடையாது ..  உயிரற்றதாகி விடுகிறது ..  ஆனால் , யந்த்ரத்துடன் இணைந்து இருந்தால் , அது தனக்கான ஆற்றைலை ஒட்டு மொத்த ஆற்றலில் இருந்து எடுத்துக் கொள்ளும் ..  ஒட்டு மொத்த யந்திரத்தின் நோக்கத்துடன் ஒன்றி , தானும் செயலாற்றும் ..  உயிருள்ள அங்கம் ஆகி விடும் ..  அதே போல , நாம் தனித்தனியாகத் தெரிகிறோம் ..  தனித்தனி உயிர்கள் என்பதே கண் பார்வைக்குத் தெரிந்திடும் காக்ஷி ..  ஆனால் , நாம் இணைந்திருக்கிறோம் .. இணைந்த அதை இறைவன் என்று அழையுங்கள் ..  பரமாத்மன் என்று அழையுங்கள் ..  ஶக்தி , பரா ஶக்தி என்று அழையுங்கள் ..  அதனுடைய அம்ஶமே நாம் ஒவ்வொருவரும் ..  அதனில் உள்ள ஒட்டு மொத்த ஆற்றலே நம் இயக்கத்திற்குக் காரணம் ..

இந்த அறிவிப்பைச் செய்தவன் ப்ரஹ்மத்தை உணர்ந்து , ப்ரஹ்மத்துடன் ஐக்யம் ஆன ஒருவன் ..  இது ப்ரஹ்ம வாக்கு ..  ஸ்ரீ பரமாத்மனே சொல்கிறான் ..  "அனைத்து ஜீவன்களும் எனது ஒரு துளி அம்ஶமே" ..

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...