Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 205


கீதையில் சில சொற்றொடர்கள் - 205


वायुर्गन्धान इवाशयात ..  (अध्याय १५ - श्लोक ८)
வாயுர் கந்தான் இவாஶயத் ..  (அத்யாயம் 15 - ஶ்லோகம் 8)
Vaayur Gandhaan Ivaashayat ..  (Chapter 15 - Shlokam 8)

அர்தம் :  வாயு கந்தத்தை எவ்வாறு ஏந்திச் செல்கிறதோ ..

பஞ்ச பூதங்கள் ..  ஐந்து பூதங்கள் ..  ப்ரக்ருதியில் ஐந்து ஆதாரமான தத்வங்கள் ..  நிலம் (ப்ருத்வீ) , நீர் (ஆப்) , காற்று (வாயு) , அக்னி , ஆகாஶம் (நப) ...

நமக்கு ஐந்து க்ஞானேந்த்ரியங்கள் ..  கண் (சக்ஷு) , காது (கர்ண) , நாஸி , நாக்கு (ஜிஹ்வா) , தோல் (த்வசா) ..

இந்த உறுப்புக்கள் இந்த்ரியங்கள் இல்லை ..  அவற்றின் ஆற்றல்கள் தான் இந்த்ரியங்கள் ..  தர்ஶனம் (பார்த்தல்) , ஶ்ரவணம் (கேட்டல்) , ஜிக்ரன் (நுகர்தல்) , அஶ்னன் (ருசித்தல்) , ஸ்பர்ஶனம் (தொடுதல்) இவை ஆற்றல்கள் ..

ஐந்து விஷயங்கள் ..  த்ருஶ்யம் (காக்ஷி) ..  ஶப்தம் , கந்தம் , ருசி மற்றும் ஸ்பர்ஶம் (தொடு உணர்வு) ..  இவை இந்த்ரியங்களுக்கான விஷயங்கள் அல்லது தீனி ..

ஒவ்வொரு இந்த்ரியத்திற்கும் பஞ்ச பூதத்தில் ஒன்று தான் ப்ரதானம் ..  கண் - அக்னி ;  காது - ஆகாஶம் ;  நாஸி - வாயு ;  நாக்கு - ஜலம் ;  தோல் - ப்ருத்வீ அல்லது மண் ..

கந்தத்தை , வாஸனையை எடுத்துச் செல்வது வாயு ..  காற்று வீசவில்லை என்றால் நம்மால் வாஸனையை நுகர முடியாது ..  வாயு வாஸனையை வெளிப்படுத்தும் அந்தப் பொருளைத் தொட வேண்டும் ..  அந்தக் காற்று நம்மை நோக்கி வீச வேண்டும் ..  நாம் நாஸி நுகர் மொட்டுக்களைத் தொட வேண்டும் ..  காற்றில் மிதந்து வரும் வாசனையை நம் நாஸியின் நுகர் மொட்டுக்கள் ஏற்று , மின் காந்த அலைகளாக (Electro - magnetic waves) மாற்றி , nasal chord வழியாக புத்திக்கு அநுப்பி வைக்கும் ..  புத்தி இந்த அலைகளை ஆராய்ந்து , சித்தத்தில் பதிவாகி உள்ள பழைய அநுபவ நினைவுகளுடன் ஒப்பிட்டு , கந்தத்தை அடையாளம் காண்கிறது ..

கந்தத்தை ஏந்தி வரும் வாயுவைப் போல ...  இந்த உபமானம் இங்கு ஜீவனுக்கு உபயோகப் படுத்தப் பட்டுள்ளது ..  இந்த்ரியங்கள் மற்றும் மனஸுடன் ஒன்றிய ஆத்மா (ஸூக்ஷ்ம ஶரீரங்களுடன் பிணைந்த ஆத்மா ஜீவன் எனப்படுகிறது ..)  ப்ரக்ருதியின் கவர்ச்சியில் மயங்கி , அவற்றில் லயித்து , சிக்கி விடுகிறது ..  ஒரு ஶரீரத்தை விட்டுப் பிரியும் போது , தன்னுடன் விஷய வாஸனைகளை ஏந்திச் செல்கிறது ..  உலக விஷயங்களுடன் இணைப்பு என்ற இந்த்ரியங்களின் அநுபவங்களின் ஸாரமே வாஸனை ..  ஜீவன் இந்த வாஸனைகளை ஏந்தி , ஸ்தூல ஶரீரத்தைப் பிரிகிறது ..  அந்த வாஸனைகளுடன் அடுத்த தேஹத்தைப் பெறுகிறது ..  பூர்வ ஜன்ம வாஸனைகள் எனப்படும் இவையே நமக்குள் குணங்களில் , ஆற்றல்களில் , தன்மைகளில் காணப்படும் வித்யாஸங்களுக்குக் காரணம் ..  குழந்தைப் பர்வத்தில் சில குழந்தைகள் அபாரமான திறமைகள் பெற்று விளங்குவது அந்த ஜீவனின் பூர்வ ஜன்ம வாஸனைகளின் வெளிப்பாடு ..

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...