Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 223


கீதையில் சில சொற்றொடர்கள் - 223


दम्भ मान मदान्विताः  ..  (अध्याय १६ - श्लोक १०)
தம்ப மான மதான்விதாஹ ..  (அத்யாயம் 16 - ஶ்லோகம் 10)
Dambha Maana Madaanvitaah ..  (Chapter 16 - Shlokam 10)

அர்தம் :  அஸுரன் தம்பம் (டாம்பீகம்) , மான (அபிமானம்) மற்றும் மதம் (ஆணவம்) நிறைந்தவன் ..


தம்பம் இன்றைய உலகில் மிகப் பெரும் அளவில் காணப்படும் நோய் ..  பேச்சு வழக்கில் ஆடம்பரம் , டாம்பீகம் என்கிறார்கள் ..  இல்லாததை இருப்பதாகக் காட்டிக் கொள்வதும் இருப்பதை மிகைப் படுத்திக் காட்டிக் கொள்வதும் தம்பம் ..  ஏன் ?  இதன் மூலம் அல்பப் பரிஸுகளும் , பொய்யான பாராட்டுதலும் , மர்யாதையும் பெறுவதற்காக ..  தம்பம் எந்தெந்த வகையில் வெளிப்படுகிறது ??  கடனை வாங்கியாவது விவாஹம் போன்ற ஸ்வந்த வைபவங்களை ஆடம்பரமாக நடத்துதல் ..  ஆடம்பரமான வஸ்திரங்கள் , ஷூக்கள் , கறுப்புக் கண்ணாடி , வாஸனை ஸ்ப்ரேக்கள் அணிதல் ..  (இவை அனைத்தும் வெளியே காட்டுவதற்காக ..  இவ்வாறு பகட்டு செய்யும் பெரும்பாலோர் ஶரீரத்துடன் ஒட்டி இருக்கும் உள்ளாடைகளை அழுக்காக அணிந்திருப்பர் ..)  கடன் புரை ஓடிக் கொண்டிருக்கும் ..  ஆனால் , பகட்டான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பர் ..  உள்ளே அறியாமை மண்டிக் கிடக்கும் ..  மேடையில் இருந்து அலங்காரச் சொற்கள் நிறைந்த உரை நிகழ்த்துவர் ..  தன்னுடைய ஸ்வந்த ப்ரஶ்னைகளைத் தீர்த்துக் கொள்ள த்ராணி இல்லாத , தன்னம்பிக்கை இல்லாதவன் நடத்திடும் motivation வகுப்புகள் ..  உள்ளே வெற்று மனஸ் , ஆனால் , வெளியே ஆன்மீகச் சின்னங்கள் ..

மானம் அல்லது அபிமானம் என்பது தற்பெருமை ..  தன்னிடம் உள்ளவை உலகில் மற்ற எவரிடமும் இல்லாமல் , தன்னிடம் மாத்ரம் விஶேஷமாக உள்ளவை என்று கருதிக் கொள்ளுதல் அபிமானம் ..  இன்று பொது இடங்களில் வயஸானவர்கள் ஸந்தித்தால் , தத்தம் பேரன் பேத்திகள் எத்தகை 'super - intelligent , super - skilled' என்ற அபிமானப் பேச்சுக்கள் தான் பொழுதுபோக்கு ..  அபிமானம் மிகையானால் அது மதம் ஆகிறது ..  பேச்சு வழக்கில் ஆணவம் எனப் படுகிறது ..  தற்பெருமை ஏற்படுத்தும் மயக்கம் அல்லது போதையின் வேகத்தில் மற்றவரை அபமானப் படுத்துதல் , புண் படுத்துதல் மதத்தின் ப்ரதானக் கார்யம் ..  மதம் கொண்ட அஸுரன் நலன் நாடும் நபர்களைப் பகைத்துக் கொள்வான் ..  புண்படுத்தி தூரத் தள்ளுவான் ..  தனியாள் ஆகி விடுவான் ..  அவனை ஸுற்றி வெறும் ஜால்ராக்களும் , வெற்றுக்களும் , கூழ் கும்பிடு போடுபவர்களும் அப்பட்டமான ஸ்வயநலமிகளும் குழுமி விடுவர் ..  அவர்களும் மூழ்கும் கப்பலில் இருந்து தப்பி ஓடும் எலிகளைப் போல , மூழ்கப் போவதை எதிர்ப் பார்த்து இருப்பர் ..  அஸுரனால் தனக்கு இணையானவருடனும் , தன்னை விட உயர்ந்தவர்களுடனும் சேர்ந்து பணி செய்ய முடியாது ..  இதுவே அஸுரன் விழப்போவதற்குக் காத்திருக்கும் மிகப் பெரிய பள்ளம் ..

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...