Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 224


கீதையில் சில சொற்றொடர்கள் - 224


अशुचि व्रताः ..  (अध्याय १६ - श्लोक १०)
அஶுசி வ்ரதாஹ ...  (அத்யாயம் 16 - ஶ்லோகம் 10)
Ashuchi Vrataah ..  (Chapter 16 - Shlokam 10)

அர்தம் :  தூய்மை அற்ற வ்ரதங்கள் அல்லது ஸங்கல்பங்கள் ..

அஸுரக் கூட்டங்களின் ஸங்கல்பங்கள் தூய்மை அற்றவை ..  (தூய்மை அற்ற ஸங்கல்பம் செய்பவரின் அடையாளம் அஸுரன் என்றும் புரிந்து கொள்ள முடியும் ..)

'அடைந்தால் த்ராவிட நாடு - இல்லையேல் சுடுகாடு'  என்ற ஸங்கல்பத்துடன் ப்ரயாணத்தைத் துவக்கிய த்ராவிடக் கழகம் தமிழகத்தில் செய்துள்ள நாஶம் அனைவரும் அறிந்ததே ..  (ஒரு வகையில் தம் ஸங்கல்பத்தின் ரெண்டாம் பகுதியைச் செயல் படுத்துகின்றனர் என்றே சொல்லலாம் ..  த்ராவிட நாட்டை அடைய முடியவில்லை ..  கிடைத்த தமிழகத்தை சுடுகாட்டாக மாற்றிக் கொண்டிருக்கின்றனரோ ..)

2001'ல் பாரதம் வந்த போப் அறிவித்த ஸங்கல்பம் நாம் அறிந்ததே ..  "முதல் மில்லினியத்தில் ஐரோப்பாவை க்றிஸ்தவமாக மாற்றினோம் ..  ரெண்டாம் மில்லினியத்தில் ஆஃப்ரிகாவை மாற்றினோம் ..  மூன்றாவது மிலினியம் ஆஸியக் கண்டத்தில் அறுவடை செய்வோம்" என்றார் போப் .. மதம் மாற்றம் , மாற மறுப்பவர்களின் கொலை , இயற்கை வளத்தின் அழிவு , ஒழுக்கக் கேடு , போக வாதம் என்று க்றிஸ்தவம் மற்ற பகுதிகளில் செயல்படுத்தியதே அவர் செய்ய விரும்பும் அறுவடை ..

இஸ்லாமும் உலகம் முழுவதும் தம் மதத்தை நிலை நாட்டும் ஸங்கல்பம் எடுத்து , கையில் வாள் ஏந்திக் கிளம்பினர் ..  சென்ற இடங்களில் எல்லாம் ரக்த வெள்ளம் ஓடியது ..  கொள்ளையும் கற்பழிப்பும் பெருகியது ..

"Government of the Proletariat" என்பது கம்யூனிஸ ஸங்கல்பம் ..  நூறு வர்ஷங்கள் முன் எடுக்கப் பட்டது ..  மிகக் குறுகிய காலத்தில் உலகில் மிக அதிக நாஶம் ஏற்படுத்திய பெருமை கம்யூனிஸத்திற்கே உண்டு ..  நம் பாரத தேஶத்தில் வங்கம் , கேரளம் என்ற ரெண்டு கம்யூனிஸ்ட் மாநிலங்களும் வன்முறை மிகுந்த மாநிலங்கள் ..

உயிர்களுக்கு நாஶம் , இயற்கை வளத்திற்கு நாஶம் , ஒழுக்கத்திற்கு நாஶம் , இவையே அஸுர ஸங்கல்பத்தின் விளைவு.  அதையே ஸ்ரீ க்ருஷ்ணன் அஶுசி வ்ரதம் என்கிறார் ..

இங்கு ஒரு கேள்வி எழுகிறது ..  நம் ர்ஷிகளும் "க்ருண்வந்தோ விஶ்வமார்யம்" என்ற ஸங்கல்பம் செய்தனரே ..  உலகத்தை ஆர்ய மயமாக்குவோம் என்று ஸங்கல்பம் செய்தனரே ..  அதுவும் அஸுர ஸங்கல்பமோ ??  நம் ர்ஷிகள் தனியாகச் சென்றனர் ..  நம் தேஶ ராஜாக்களோ ஜனங்களோ அவர்களுக்குப் பண பலமோ , பக்க பலமோ அருளவில்லை ..  ர்ஷிகளும் அந்தந்த ப்ரதேஶ ஜனங்களுக்கு வன்முறை போதிக்கவில்லை ..  ஆயுதங்கள் அளித்து அந்த ஜனங்களை ஸ்வதேஶ ராஜாங்கத்திற்கு எதிராகத் தூண்டி விடவில்லை ..  அவர்களைப் பண்படுத்தினர் ..  உயர்ந்த வாழ்க்கை தத்வங்களை கல்பித்தனர் ..  அவர்களை மேம்படுத்தினர் ..  ஆர்ய என்றால் ஒழுக்கத்தில் ஶ்ரேஷ்டமானவன் என்று அர்தம் ..  அந்த ஜனங்களை ஆர்யனாக மாற்றினர் ..

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...