Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 226


கீதையில் சில சொற்றொடர்கள் - 226


प्रलयान्तामुपाश्रिताः ..  (अध्याय १६ - श्लोक ११)
ப்ரலயாந்தாம் உபாஶ்ரிதாஹ் ..  (அத்யாயம் 16 - ஶ்லோகம் 11)
Pralyaantaam Upaashritaah ..  (Chapter 16 - Shloka 11)

அர்தம் :  ப்ரலய காலம் வரைக்கும் அவஶ்யமான விஷயங்களை சேகரிப்பது ..

மநுஷ்யனுக்கு அவஶ்யங்கள் உண்டு ..  அவற்றைப் பூர்தி செய்திட , வஸ்துக்களின் அவஶ்யம் உண்டு ..  உதாஹரணமாக , பசியை த்ருப்தி செய்திட போஜனம் தேவை ..  அதற்கான பொருட்களை தினந்தினம் வாங்கிக் கொள்ளலாம் ..  ஏற்பாடு இருந்தால் ஒரு வாரத்திற்கோ மாஸத்திற்கோ சேகரித்து வைக்கலாம் ..  ஆனால் , வாழ்க்கையின் கடைசி மூச்சு வரை தேவையான ஸாமக்ரியை வாங்கி , சேகரித்து வைக்க விரும்பினால் ??  இதையே அஸுர மனப்பான்மை என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ..

சேகரித்தல் ஆன்மீக ஸாதனைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ..  அபரிக்ரஹம் தெய்வீக மனப்பான்மை ஆகும் ..  பதஞ்ஜலி யோக ஸூத்ரத்தில் அபரிக்ரஹம் ஐந்து அடிப்படை யமங்களில் ஒன்று ..  அபரிக்ரஹம் என்றால் சேகரிக்காமல் இருப்பது ..  குறைந்த பக்ஷத் தேவைகளுடன் வாழ்தல் ..

பொருளாதார ரீதியாகவும் , இயற்கைக்கும் சேகரித்தல் பாதகம் விளைவிப்பதே ..  இன்றைய பொருளாதாரம் அதிக , மிக அதிக வாங்குதலை ஊக்குவிக்கிறது ..  அவர்களது கருத்தில் எத்தனைக்கு எத்தனை அதிகமாக வாங்கப் படுகிறதோ , அத்தனைக்கு அத்தனை போஷாக்குப் பெறுகிறது பொருளாதாரம் ..  இதன் விளைவாக , நம் வீடுகள் ஸாமான்களின் கிடங்குகள் ஆகி விட்டன ..  எதைப் பார்த்தாலும் வாங்குதல் , கவர்ச்சியாக விற்கப் படும் அனைத்தையும் வாங்குதல் , டிஸ்கவுண்ட் கொடுக்கப் படும் எதையும் வாங்குதல் , "இலவஸம்" என்று அல்பமான எதை இணைத்தாலும் , வாங்கி விடுதல் , கடனில் வாங்குதல் , தேவையா இல்லையா என்று யோஜிக்காமல் வாங்குதல் , (பார் கோட் இருப்பதால்) விலையையும் பார்க்காமல் வாங்குதல் ..  பயன் படுத்துகிறோமோ இல்லையோ , அனைத்தையும் வீட்டில் போட்டு வைத்தல் ..  மநுஷ்யர்கள் உட்கார , நடக்க , கை கால் விரிக்க இடம் இல்லாத இடம் ஆகி விட்டன நம் வீடுகள் ..  நம் வீடுகளில் சப்பல்கள் , ஷூக்கள் , பிளாஸ்டிக் பாட்டில்கள் , மொபைல் ஃபோன்கள் , சார்ஜர்கள் மலை மலையாகக் குவிந்து இருக்கின்றன ..  வீடுகளில் இருந்து வெளியேறும் குப்பை தெருவோரத் தொட்டிகளில் நிரம்பி வழிகின்றன ..  நகரங்களில் இருந்து வெளியேறும் குப்பை க்ராமங்களில் பல ஏக்கர் பரப்புள்ள பூமியின் மேல் குவிக்கப் படுகிறது ..  வலிமை உள்ள தேஶங்களின் குப்பை ஏழை தேஶங்களில் குவிக்கப் படுகின்றன ..  இன்று நதிகள் , ஸமுத்ரங்கள் நகரக் குப்பையால் குழம்பி விட்டன ..

ப்லாஸ்டிக் விஷயத்தில் நடக்கும் கூத்து கேலிக்கூத்தாகி விட்டது ..  ப்லாஸ்டிக்கைக் கண்டு பிடித்தது அவர்கள் ..  ப்லாஸ்டிக்கின் உத்பத்தி அவர்கள் செய்தனர் ..  மார்கெட்டில் ப்லாஸ்டிக்கை நிரப்பினர் ..  எங்கும் ப்லாஸ்டிக் , எதிலும் ப்லாஸ்டிக் என்றாக்கினர் ..  ஜனங்களின் பழக்கத்தைக் கெடுத்தனர் ..  இன்று உரத்த குரலில் ப்லாஸ்டிக்கின் எதிராக ப்ரசாரம் செய்கின்றனர் ..  ப்லாஸ்டிக்கின் பெயரில் ஸாதாரண ஜனங்களை தண்டிக்கின்றனர் ..

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...