Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 227


கீதையில் சில சொற்றொடர்கள் - 227


आशा पाश शतैर्बद्धाः ..  (अध्याय १६ - श्लोक १२)
ஆஶா பாஶ ஶதைர்பத்தாஹ ..  (அத்யாயம் 16 - ஶ்லோகம் 12)
Aashaa Paash ShatairBaddhaah  .. (Chapter 16 - Shloka 12)

அர்தம் :  நூற்றுக்கணக்கான ஆஶை என்னும் கயிறுகளால் கட்டப் பட்டவன் ..

நம்பிக்கை தான் ஒரு மநுஷ்யனை வாழ வைக்கிறது என்கிறார்கள் ..  நம்பிக்கை இல்லை என்றால் செயலில் இறங்க மாட்டோம் ..ஆனால் , இங்கு ஸ்ரீ க்ருஷ்ணன் நம்பிக்கைகளால் பிணைக்கப் பட்டவன் அஸுரன் என்கிறார் ..  ம்ருகங்கள் ராத்ரீயில் தம் உணவைத் தேடிக் கிளம்பும் போது , அவற்றுக்கு நம்பிக்கை என்ற ஒரு விஷயம் கிடையாது ..  அது நித்ய க்ரமம் ..  அன்றாடக் கடமை ..  கிளம்புகின்றன ..  பறவைகள் ஸூர்ய உதய நேரத்தில் தம் கூட்டை விட்டு வெளியே கிளம்பும் போது , நம்பிக்கை ஏதும் ஏந்திச் செல்வதில்லை ..  பறந்து செல்கின்றன ..  அதே திஶையில் செல்கின்றன ..  ஸாயங்காலம் திரும்பும் போது , குஞ்ஜுகளுக்கு உணவுடன் திரும்புகின்றன ..  நம்பிக்கை என்ற ஒரு விஷயம் இருந்தால் , "இன்று வேறு திஶையில் பறந்து பார்க்கலாம்" என்றோ , "இன்று அதிக அல்லது பெரிய வேட்டைக் கிடைக்க வேண்டும்" என்றோ , "இன்று புதிதாக வேறு ஏதேனும் கிடைக்க வேண்டும்" என்றோ ஆஶைகளும் உடன் பிறக்கும் ..  இவை எல்லாம் பிராணி உலகத்தில் கிடையாது ..

சிலர் கேட்பர் ..  "நம்பிக்கை இல்லை என்றால் , அவநம்பிக்கை உள்ளது என்று அர்தமா ??  அவநம்பிக்கையுடன் , நிராஶையுடன் ஒரு கார்யத்தில் எப்படி இறங்க முடியும் ??  இவர்களின் புரிதலில் ஒரு தவறு உள்ளது ..  நம்பிக்கை இருந்தால் அங்கு அவநம்பிக்கையும் இருந்திடும் ..  இன்று நம் கார்யத்தை வேறு வழியில் செய்து பார்க்கலாம் என்று யோஜித்தால் , அந்த வழியில் அவநம்பிக்கையும் இந்த வழியில் நம்பிக்கையும் கை கோர்த்து நிற்கின்றன என்று அர்தம் ..  ஸத்ய நிலை என்னவென்றால் நம்பிக்கைக்கு எவ்வித ஆதாரமும் கிடையாது ..  நம்முடைய ஆஶைகளின் மற்றொரு ரூபமே நம்பிக்கை ..  நம் ஆஶைகள் அனைத்தும் பூர்தி ஆகாது , அவை பூர்தி ஆக , மற்ற பல ஶக்திகள் ஒத்து வர வேண்டும் , நம் ஒருவர் கைகளில் இல்லை  என்பதையும் உணர்ந்திருப்பதால் என்பதால் அவநம்பிக்கையும் தொற்றிக் கொள்கிறது ..   நம்பிக்கை இல்லை என்றால் அவநம்பிக்கையும் கிடையாது ..  நம்பிக்கையும் அவநம்பிக்கையும் இல்லாத ஒரு நிலையில் , கடமை மாத்ரமே இருந்திடும் ..  இதைச் செய்ய வேண்டும் என்ற உணர்வு மாத்ரமே இருந்திடும் ..  செய்வதில் ஶ்ரத்தை இருந்திடும் ..

நூற்றுக்கணக்கான நம்பிக்கைகளால் கட்டப் பட்டிருக்கிறான் அஸுரன் என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ..  உண்மையில் நம்பிக்கைதான் நம்மை மீண்டும் மீண்டும் அதே தவறைச் செய்ய வைக்கிறது ..  அதே சகதியில் உழல வைக்கிறது ..  நம்பிக்கைதான் நம்மை இழுத்துச் செல்கிறது ..  அலைக்கழிக்கிறது ..  நம்பிக்கை மறைந்து ஶ்ரத்தை மலர்ந்து விட்டால் , கர்மம் மாத்ரமே நடந்திடும் ..  செய்யப் பட வேண்டும் என்பவை செய்யப் படும் ..போட்டி , பொறாமை , ஓட்டம் , நிம்மதியின்மை எல்லாம் தகர்ந்து விடும் ..  அமைதி நிறைந்திடும் ..  ஆனந்தம் நிறைந்திடும் ..

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...