Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 230


கீதையில் சில சொற்றொடர்கள் - 230


त्रिविधं नरकस्य द्वारं कामः क्रोधः तथा लोभः ..  (अध्याय १६ - श्लोक २१)
த்ரிவிதம் நரகஸ்ய த்வாரம் காமஹ் க்ரோதஹ் ததா லோபஹ் ..  (அத்யாயம் 16 - ஶ்லோகம் 21)
Trividham Narakasya Dwaaram Kaamah Krodhah Tathaa Lobhah  ..  (Chapter 16 - Shloka 21)

அர்தம் :  காமம் , க்ரோதம் மற்றும் லோபம் இவை மூன்றும் நரகத்தின் மூன்று வாஸல்கள் ..

நரகத்தைப் பார்த்ததில்லை ..  நரகத்தை அநுபவித்திருக்கிறோமா என்பது தெரியாது ..  ஆனால் நரகம் என்பது வேதனைகள் நிறைந்தது ..  து:கமயமானது ..

ஸ்ரீ க்ருஷ்ணன் காமம் , க்ரோதம் மற்றும் லோபம் இவற்றை நரகத்திற்கான வாஸல்கள் என்கிறார் ..  நரகம் எனும்போது ஒரு இடத்தைக் குறிப்பிடவில்லை ..  வேதனைகள் நிறைந்த , து:கமயமான விளைவுகளைக் குறிப்பிடுகிறார் ..  காமம் ஸுகம் என்பது போன்ற ப்ரமையை ஏற்படுத்துகிறது ..  ஸுகம் ஏற்படுகிறது என்பதும் ஓரளவிற்கு ஸத்யம் ..  ஆனால் , க்ஷண நேர ஸுகம் ..  காரணம் ??  காமம் கொள்வது , வேண்டும் என்று விரும்புவது தனி மநுஷ்ய வேலை ..  தனியாக ஒருவன் எதையும் விரும்பலாம் ..  ஆனால் , அதை பூர்தி செய்வதில் , இச்சையை த்ருப்தி செய்வதில் மற்றவர்களின் துணை வேண்டும் ..  அமைப்புகளின் துணை வேண்டும் ..  இயற்கையின் துணை வேண்டும் ..  இவை அனைத்தும் விரும்பும் நேரத்தில் , விரும்பும் வகையில் , விரும்பும் இடத்தில் கிடைத்திடும் என்பது நிஶ்சயம் இல்லை ..  தனி ஒருவன் விரும்பலாம் ..  மற்ற பல ஶக்திகளே அவனது விருப்பம் பூர்தி செய்து கொடுத்திடும் ..  மனஸின் வேதனைக்கு இது ஒரு முக்ய காரணம் ..

காம பூர்தி என்பது எப்பொழுதும் அடைய முடியாத ஒன்று ..  காம பூர்த்திக்கான முயற்சிகள் தத்க்ஷண ஸுகம் அளித்திடும் ஆனால் காமத்தை மேலும் தூண்டி விடும் ..  காம பூர்திக்கான முயற்சிகள் அக்னியின் விடப்படும் நெய்யைப் போன்றது ..  காமம் அடங்காது ..  மேலும் தீவ்ரம் ஆகும் ..  இதுவும் து:கத்திற்கான காரணம் ..

காமம் ஆன்மீகம் இல்லை ..  உலகாயதம் ..  காம பூர்தியில் ஶரீரம் மற்றும் இந்த்ரியங்களே கருவிகள் ..  ஶரீரம் மற்றும் இந்திரியங்களின் ஆற்றல் காலப்போக்கில் குறைந்து போவது இயற்கை ..  காம போகத்தின் , காமம் அநுபவித்திடும் ஆற்றலும் குறையும் என்பதும் இயற்கை ..  இதுவும் து:கத்திற்கு ஒரு காரணம் ..

எனவே , காமத்தின் விளைவுகள் து:கமயமானது என்பது தெளிவாகிறது ..

க்ரோதம் எவர் மீது வைக்கப் படுகிறதோ அவரை விட , க்ரோதத்தைத் மனஸில் போஷித்து வளர்ப்பவரையே அதிகம் பாதித்திடும் ..  தத்க்ஷண கோபம் வெடித்து , கொலை , அடி , வெட்டு போன்ற செயல்கள் நிகழ்ந்து விட்டால் , கோபம் தணிந்து விடும் வாய்ப்பு உண்டு ..  ஆனால் , க்ரோதம் பல வர்ஷங்கள் மனஸில் உயிருடன் இருந்திடும் ..  செயல்களாக வெடிக்காமலும் இருந்திட வாய்ப்பு உண்டு ..  உள்ளே தஹித்துக் கொண்டு இருக்கும் ..  க்ரோதம் கொண்டவனை பாதிக்கும் ..  ஆரோக்யம் பாதிக்கப் படும் ..  தூக்கம் இழந்து போகும் ..  மன: ஶாந்தி அழிந்து விடும் ..  விவேக ஸத் புத்தி அழிந்து விடும் ..  அவனை எல்லா வகையிலும் அழித்து விடும் ..

லோபம் வஸ்துக்களை , பொருட்களை ஶேகரிக்க வைக்கிறது ..  கைக்கெட்டிய தூரத்தில் அனைத்தும் இருந்தும் , அவற்றை அநுபவிக்க முடியாத அவல நிலை ..  வேதனை தரும் அவல நிலை ..  வஸ்துக்கள் அழிந்து விடும் என்ற பயம் , திருடப் பட்டு விடும் என்ற பயம் வேதனையை அதிகரிக்கிறது ..

இதையே ஸ்ரீ க்ருஷ்ணன் "நரகத்தின் த்வாரங்கள் / வாஸல்கள்" என்கிறார் ..  காமம் , க்ரோதம் மற்றும் லோபம் இவற்றின் பரிணாமங்கள் , விளைவுகள் வேதனை தர வல்லவை ..  து:கம் விளைவிக்க வல்லவை ..

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...