Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 234


கீதையில் சில சொற்றொடர்கள் - 234


यक्ष रक्षांसि (यजन्ते) राजसाः  ..  (अध्याय १७ - श्लोक ४)
யக்ஷ ரக்ஷாம்ஸி (யஜந்தே) ராஜஸா ..  (அத்யாயம் 17 - ஶ்லோகம் 4)
Yaksha Rakshaamsi (Yajante) Raajasaa ..  (Chapter 17 - Shlokam 4)

அர்தம் :  ராஜஸம் ஓங்கிய நபர் யக்ஷர்கள் , ராக்ஷஸர்களை பூஜிப்பான் ..

ராஜஸம் அல்லது ரஜோ குணம் வெளிப்படுத்தும் ப்ரதானத் தன்மை "செயல் புரிவதில் தீவ்ர ஆர்வம்" ..  "ஸுகம் மற்றும் ஸுக போகத்தில் நாட்டம்" ராஜஸத்தின்  மற்றொரு தன்மை ..  மிகையாக ஊதி வளர்ந்த 'நான்'  என்ற உணர்வும் ராஜஸத்தின் தன்மை ..

ஒருவனுடைய ஆர்வங்கள்  உபாஸனைகள் , மற்ற செயல்கள் எல்லாம் அவனது ஸ்வபாவத்திற்கு ஏற்பவே அமைகின்றன ..  ரஜோ குணம் ஓங்கிய ஒருவன் யக்ஷர்களையும் ராக்ஷஸர்களையும் உபாஸனை செய்வான் என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ..  குபேரன் ஒரு யக்ஷன் ..  பெரும் செல்வத்தை பாதுகாப்பவன் ..  யக்ஷர்கள் ஸுக போகத்திற்கான ஸாதனங்கள் மீது அதிகாரம் செலுத்துபவர்கள் ..  ராக்ஷஸர்கள் பெரும் அளவில் ஊதி வளர்ந்த 'நான்' உணர்வு கொண்டவர்கள் ..  ரஜோ குணி இத்தகைய தன்மைகளை உபாஸிக்கிறான் என்பதில் என்ன ஆஶ்சர்யம் ??

நம்மைச் சுற்றி உள்ள உலகத்தில் பெரும் செல்வந்தர்கள் , விளையாட்டுகளில் பெரும் புகழையும் செல்வத்தையும் ஸம்பாதித்தவர்கள் , ஜுடோ , கராதே , Body - Building (உடல் வளர்ச்சி) , குத்துச் சண்டை (Boxing) , மல்ல யுத்தம் , மலை ஏற்றம் , போன்ற வீர ஸாஹஸ விளையாட்டுக்களில் ஸாதனை புரிந்தவர்கள் , வன்முறை , கொலை , கொள்ளை , கடத்தல் போன்ற குற்றங்கள் புரிந்து ராஜ்யத்தின் சட்டத்திற்கு எதிராகச் செயல் படுபவர்கள் , செய்திப் பத்ரிக்கைகளால் , செய்தி சேனல்களால் ஹீரோக்களாக , பெரும் ஸாதனையாளர்களாக ப்ரபலப் படுத்தப் படும் சந்தனக் கடத்தல் , செம்மரக் கடத்தல் , மணல் கொள்ளை , கற்பழிப்பு , சீட் ஃபண்ட் , ஈமு கோழி ஏமாற்றுக் காரர்கள் ஆகியோரை வழிபடுவான் ரஜோ குணி ..  இத்தகையோரைப் பற்றிய செய்திகளை , கதைகளை , வதந்திகளை ஆர்வத்துடன் படிப்பான் ரஜோ குணி ..  அவற்றைப் பற்றிப் பேசுவான் ..ரஜோ குணிகளை நம்பித்தான் இன்றைய செய்திப் பத்திரிகைகளும் , செய்தி சேனல்களும் தழைத்துச் செழித்துக் கோடிகளில் புழல்கின்றன ..

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...