Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 236


கீதையில் சில சொற்றொடர்கள் - 236


आहाराः सात्त्विकप्रियाः ..  (अध्याय १७ - श्लोक ८)
ஆஹாராஹ ஸாத்விக ப்ரியாஹ ..  (அத்யாயம் 17 - ஶ்லோகம் 8)
Aahaaraah Saatvika Priyaah ..  (Chapter 17 - Shlokam 8)

அர்தம் :  ஸாத்வீகன் இவ்வகை ஆஹாரங்களை விரும்புவான் ..

ஸாத்வீகன் இவ்வகை ஆஹாரங்களை விரும்புவான் என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ..  பசிக்கு உட்கொள்வதுதானே ஆஹாரம் ..  ஆனால் , வெறும் பசிக்கு என்று இல்லாமல் ருசிக்கும் உண்ணப் படுகிறது ..  ருசி மநுஷ்யனுக்கு மநுஷ்யன் மாறு படுகிறது ..  ஒருவனுடைய ருசி அவனது ஸ்வபாவத்தை , அவனிடம் மேலோங்கும் குணத்தை ஸார்ந்தது ..

ப்ரதானமாக ஸாத்வீக குணம் கொண்ட ஒருவன் எத்தகைய ஆஹாரத்தை விரும்பி நாடுவான் ??  ஸாத்வீகம் என்பது க்ஞானம் ..  எது சரியோ , எது செய்யத் தகுந்ததோ , அதைச் செய்திடும் தன்மை ..  உணர்ச்சிகளுக்கு இடம் இல்லை ..  பகுத்தறிந்து செய்யப்படும் செயல் ஸாத்வீகத்தின் வெளிப்பாடு ..  ஆஹார விஷயத்திலும் இத்தன்மை வெளிப்படும் ..  எவ்வகை உணவு ஶரீரத்திற்கு நன்மை செய்யுமோ , ஶரீரத்தின் ஆரோக்யம் பலத்தை வளர்க்குமோ ஸாத்வீகன் அவ்வகை ஆஹாரத்தை நாடுவான் ..  எவ்வகை உணவு ஶரீரத்தின் ஜீர்ண ஆற்றலுக்கு ஏற்றதாக உள்ளதோ , எவ்வகை உணவு ஶரீரத்திற்கு அவஶ்யமான ஸத்துக்களை , போஷாக்குகளை அளித்திடுமோ , அவ்வகை ஆஹாரங்களை ஸாத்வீகன் விரும்பி ஏற்பான் ..  ஸ்ரீ க்ருஷ்ணனும் இதையே சொல்கிறார் ..  உணவு வகைகளைச் சொல்லவில்லை ..  ருசிகளைக் குறிப்பிடவில்லை ..

எதைச் சாப்பிட வேண்டும் ??  எது ஶரீரத்திற்கு நன்மை பயக்கும் ??  எது ஶரீரத்திற்கு அவஶ்யமான ஸத்துக்களை , போஷாக்குகளை அளித்திடும் ??  உணவைத் தேர்ந்தெடுக்க வேண்டியது அவன் பொறுப்பு ..  இங்குதான் ருசியின் மஹத்வம் ..  அவன் இயல்பாக எதை விரும்புகிறானோ , அதுவே உகந்த உணவு ..  இயற்கை மருத்துவ மையத்தில் அளிக்கப் படும் உணவு , ஹ்ருதய அறுவைச் சிகித்ஸைக்குப் பரிந்து உரைக்கப் படும் உணவு ..  மருந்தாக அளிக்கப் படும் இந்த உணவு ஸாத்வீகனுக்கு இயல்பாகவே பிடித்தமானவை ..

ஸமுதாயத்தில் ஸாத்வீகத்தைப் போற்றுவதற்கான ஒரு ஏற்பாடு தான் ப்ராஹ்மண ஸமுதாயம் ..  ப்ராஹ்மண வீடுகளில் உண்ணப்படும் ஆஹாரத்தை கவனியுங்கள் ..  மிதமான ருசியுடன் ..  நீர் நிறைந்த , நெய் நிறைந்த உணவு ..  Fresh உணவு ..  அடுப்பில் இருந்து நேரே உணவுத் தட்டிற்கு வரும் உணவு ..  தினம் தினம் கீரையும் மோரும் உள்ள உணவு ..  பரபரப்பாக உண்ணும் நபர்களுக்கும் , மிகையான உறைப்பும் கரிப்பும் புளிப்பும் மிகுந்த ஆஹாரத்தைத் தின்பவர்களுக்கும் , எண்ணையில் பொரித்த உணவு வகைகளையும் வறுத்த வகை உணவுகளை ருசிப்பவர்களுக்கும் ப்ராஹ்மண குடும்பங்களில் உண்ணப்படும் போஜனம் ருசிக்காது ..  உப்பு சப்பில்லாத உணவு என்று கிண்டல் அடிக்கப் படும் ..  ஆனால் , இத்தகைய உணவே பெரும் நோய்க் கண்டவர்களுக்கு , உடல் ஆரோக்யத்திற்கு உகந்த உணவு என்று ஸிஃபாரிஷ் (இது ஒரு உருது வார்தை ..) சிபாரிசு செய்யப் படுகிறது ..

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...