Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 237


கீதையில் சில சொற்றொடர்கள் - 237


आहारा राजसस्येष्टा  ..  (अध्याय १७ - श्लोक ८)
ஆஹாரா ராஜஸஸ்யேஷ்டா ..  (அத்யாயம் 17 - ஶ்லோகம் 9)
Aahaaraa Raajasasyeshtaa ..  (Chapter 17 - Shlokam 9)

அர்தம் :  ராஜஸனுக்கு இவ்வகை ஆஹாரம் இஷ்டமானது ..

ராஜஸனுக்கு இஷ்டமான ஆஹாரம் பற்றி குறிப்பிடும் போது உணவு வகைகளைக் குறிப்பிடவில்லை ஸ்ரீ க்ருஷ்ணன் ..  ருசிகளைக் குறிப்பிடுகிறார் ..  இவ்வகை ஆஹாரங்களின் விளைவுகளையும் குறிப்பிடுகிறார் ..

(கட்வாம்ல) .. கசப்பான உணவு , புளிப்பான உணவு , (லவணாத்யுஷ்ண) உப்பு நிறைந்த கார வகை உணவுகள் , அதிக உஷ்ணமான உணவு வகைகள் , (தீக்ஷ்ண ருக்ஷ விதாஹினஹ) உறைப்பான உணவு வகைகள் , வறண்டு போன உணவு வகைகள் , எண்ணையில் பொரிக்கப்பட்டு தாஹத்தை ஏற்படுத்தும் உணவுகள் .. இவை எல்லாம் ராஜஸனுக்குப் பிடித்தமான உணவு வகைகள் என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ..

ராஜஸன் பரபரப்பானவன் ..  செயல்களில் ஈடுபட்டிருக்க விரும்புபவன் ..  மிக வலிமையான நான் - எனது உணர்வுகளைக் கொண்டவன் ..  ஆஹாரம் உட்கொள்வதும் அவனுக்கு ஒரு பரபரப்பான செயலே ..  மிதமான ருசிகள் அவனுள் பரபரப்பை ஏற்படுத்தாது ..  அதீத ருசிகளையே அவன் விரும்பிடுவான் ..  அதிகக் கசப்பு , மிகையான காரம் , மிகையான உறைப்பு , அதிகப் புளிப்பு நிறைந்த உணவுகளே அவன் நாடுபவை ..  மிகையான சூட்டுடன் அவன் உணவை அருந்திடுவான் ..  எண்ணையில் பொறித்த வகைகளை , வறுத்து வறண்டு போன வகைகளை அவன் விரும்பிடுவான் ..  ஒரு பக்ஷம் வியர்வைக் கொட்ட வேண்டும் ..  ஒரு பக்ஷம் 'ஸ் ஸ் ஸ்' என்று அலற வேண்டும் ..  ஒரு பக்ஷம் தொண்டை வறண்டு கடும் தாஹம் தூண்டப்பட்டு 'தண்ணீரைப் பருக வேண்டும் ..  மற்றொரு பக்ஷம் உணவையும் தொடர்ந்து அருந்த வேண்டும் ..  இதுதான் ராஜஸன் ..  உணவருந்தலே அவனுக்கு ஒரு பரபரப்பான செயல் ..

ருசிகளைக் குறிப்பிட்ட ஸ்ரீ க்ருஷ்ணன் இவ்வகை உணவுகளின் விளைவுகளையும் குறிப்பிடுகிறார் ..  து:க ஶோக ஆமய ப்ரதா என்கிறான் ..  து:க என்றால் கஷ்டம் அல்லது வேதனை ..  ஶோக என்றால் வருத்தம் ..  ஆமய என்றால் நோய் ..  ஶரீரத்திற்கு நோய் .. அதனால் மனஸிற்கு வருத்தம் மற்றும் ஶரீரத்திற்கும் மனஸிற்கும் கஷ்டம் ..  இன்று பெரும்பாலான நோய்களுக்கு , சிகித்ஸைக்குப் பிறகு பெரும் நோயில் இருந்து ஸஹஜ ஆரோக்யத்திற்குத் திரும்பும் போது , இவ்வகை உணவுகள் தவிர்க்கப் படுகின்றன ..  அல்ஸர் , ஹ்ருதய விகாரங்கள் , டயாபிடீஸ் , கிட்னீ செயலிழப்பு , உறக்கமின்மை போன்ற நோய்கள் பீடித்த நோயாளிகளுக்கு , அதீத ருசி இல்லாமல் மிதமான ருசி கொண்ட உணவும் , எண்ணையில் பொறிக்கப் படாமல் வேக வைத்த உணவுகளும் ,  மிதமானச் சூட்டுடன் கூடிய உணவுகளும் ஆரோக்யத்திற்குச் சிறந்தவையாகப் பரிந்து அளிக்கப் படுகின்றன ..

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...