Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 238


கீதையில் சில சொற்றொடர்கள் - 238


भोजनम तामसप्रियम  ..  (अध्याय १७ - श्लोक 10)
போஜனம் தாமஸ ப்ரியம் ..  (அத்யாயம் 17 - ஶ்லோகம் 10)
Bhojanam Tamasapriyam  ..  (Chapter 17 - Shlokam 10)

அர்தம் :  தாமஸனுக்கு ப்ரியமான போஜனம் ..

தமோ குணீக்கு , தாமஸனுக்கு ப்ரிய போஜனம் எத்தகையது ??

யாதயாமம் . ஒரு ஜாமத்தைத் தாண்டி பழையது .  பழைய உணவு புளித்துப் போகும். Ferment ஆகும் ..  புளித்துப் போன உணவு புத்தியை மந்தம் ஆக்கும் ..  என் சிறு வயஸில் வீட்டில் இட்லீ , தோஸை அரிதாக , நான்கைந்து மாஸத்திற்கு ஒரு முறையே செய்வார்கள் ..  அடை உண்டு ..  பொங்கல் அடிக்கடி உண்டு ..  ஸேவை உண்டு ..  உப்புமா உண்டு ..  இவை எல்லாம் Fresh உணவு ..  இட்லீ , தோஸை கிடையாது ..  முதல் நாளே மாவை அரைத்து , புளிக்க வைக்க வேண்டும் என்பதுதான் காரணமாக இருந்திருக்க வேண்டும் ..  இன்று பல வீடுகளில் தினம் தினம் இட்லீ தோஸை தான் ..  க்ரைண்டர் , மிக்ஸி , ஃப்ரிட்ஜ் போன்ற கருவிகள் மூலம் வஸதி பெருகி  காரணமாக இருக்கலாம் ..  செய்வதற்கு ஸுலபமாக இருக்கிறது என்பதாலும் இருக்கலாம் ..  வட பாரதத்தில் ரொட்டி சாப்பிடும் வீடுகளில் ரொட்டி செய்யச் செய்ய சூடாக , Freshஆகத் தட்டில் பரிமாறுவார்கள் ..  நேரடியாக அடுப்பில் இருந்து தட்டிற்கு ..  செய்து வைக்கும் பழக்கம் கிடையாது ..  தென் ஆஃப்ரிக்காவில் வீடுகளில் ஒரு வாரத்திற்கு கறியும் , ஸாதமும் , ரொட்டியும் செய்து ஃப்ரீஜரில் வைத்து விடும் பழக்கத்தைப் பார்த்தேன் ..  (தாமஸ குணத்திற்கு மற்றொரு தன்மை உண்டு ..  சோம்பல் ..)

கதரஸம்  ..  ரஸம் அற்றுப் போன உணவு ..  காய்ந்து வறண்டு போன உணவு வகைகள் ..  ருசியை இழந்த உணவு ..

பூதி ..  அழுகி , நாற்றத்துடன் கூடிய உணவு ..

பர்யூஷிதம் ..  கலப்பட உணவு , கெட்டுப் போன உணவு ..

உச்சிஷ்டம்  ..  எச்சில் உணவு ..  சிறு குழந்தையின் எச்சில் தவிர மற்ற எச்சில் உணவுகள் அனைத்தும் தவிர்க்கப் பட வேண்டியவை ..  எச்சில் மிக அதிகமாகப் புழங்கும் இடம் சாராயக் கடை .. 

அமேத்யம் ..  தூய்மை அற்ற உணவு ..

சாராயம் , மாம்ஸ உணவு , தூய்மை அற்ற சூழ்நிலையில் தூய்மை அற்றுத் தயாராகும் உணவு ..  இவை தாமஸனுக்கு ப்ரியமானவை ..

தாமஸன் விளைவுகளைப் பற்றிக் கவலைப் படுவதில்லை ..  அதனால் ஸ்ரீ க்ருஷ்ணன் இத்தகைய உணவு வகைகளின் விளைவுகளைக் குறிப்பிடவில்லை ..

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...