Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 241


கீதையில் சில சொற்றொடர்கள் - 241


तं यज्ञं तामसम्  ..  (अध्याय १७ - श्लोक १३)
தம் யக்ஞம் தாமஸம்  ..  (அத்யாயம் 17 - ஶ்லோகம் 13)
Tham Yagyam Taamasam ..  (Chapter 17 - Shlokam 13)

அர்தம் :  இந்த யக்ஞம் தாமஸம் ஆகும் ..

தாமஸம் அல்லது தமோ குணம் முக்யமாக அறியாமையால் அடையாளம் காணப் படுகிறது ..  தாமஸி அல்லது ப்ரதானமாக தமோ குணம் கொண்டவன் வெளிப்படுத்தும் முதல் தன்மை அறியாமையே ..

தாமஸி அல்லது தமோ குணீயின் கர்மங்கள் அனைத்திலும் பொதுவாக சில தன்மைகள் காணப்படும் ..  அவன் நடத்தும் யக்ஞங்களிலும் இதே தன்மைகள் காணப்படும் ..  ஸ்ரீ க்ருஷ்ணன் இங்கு சிலவற்றைக் குறிப்பிடுகிறான் ..

விதி - ஹீனம் ..  நியமங்கள் இல்லாமல் , விதிகளுக்கு உட்படாமல் யக்ஞங்களைச் செய்தல் ..  அறியாமை தாமஸியின் ப்ரதானத் தன்மை ஆதலால் , அவன் யக்ஞங்களுக்கான விதிகளை அறிவதில்லை ..  அறிந்தவர் எவரேனும் சொன்னாலும் , நியமங்களுக்கு உட்பட்டு யக்ஞங்களை செய்வதன் மஹத்வம் அறியாதலால் , தாமஸி அவற்றைப் புறக்கணிக்கிறான் ..  தான் நடத்தும் யக்ஞங்களை ஶாஸ்த்ரங்களின் வழிகாட்டுதலிலோ , அவற்றில் விதிக்கப் பட்ட விதிகளுக்கு உட்பட்டோ  நடத்தாமல் ஸ்வய இஷ்டப் படி நடத்திடுவான் தாமஸி ..

அஸ்ருஷ்டான்னம் ..  அன்ன தானம் இல்லாமல் ..  குறைந்த பக்ஷம் ப்ரஸாத விநியோகம் கூட இல்லாமல் தாமஸி யக்ஞங்களை நடத்திடுவான் .. ஸோம்பல் தாமோ குணீயின் மற்றொரு தன்மை ஆகும் ..  அதனால் , ப்ரஸாதம் தயார் செய்வதற்கும் விநியோகம் செய்வதற்கும் ஸோம்பல் கொண்டு , அன்னதானமோ ப்ரஸாதமோ இல்லாமல் யக்ஞத்தை நடத்தி விடுவான் தாமஸி ..

மந்த்ர - ஹீனம் ..  உரிய மந்த்ரம் இல்லாமல் ..  தமோ குணீ உரிய மந்த்ரங்கள் இல்லாமல் யக்ஞங்களை நடத்துவான் ..  அறியாமை மற்றும் ஸோம்பல் காரணமாக , அந்த யக்ஞத்தை உரிய முறையில் ஸ்வயமாக நடத்த இயலாதவன் தகுதி உள்ளோரை அக்காரியத்தில் ஈடுபடுத்தவும் மாட்டான் ..

அதக்ஷிணம் ..  உரிய நபர்களுக்கு உகந்த தக்ஷிணை கொடுக்க மறுப்பான் தாமஸி ..  வறட்டுப் பிடிவாதமும் தாமஸியின் ஒரு தன்மை ..  அந்யரின் பங்களிப்பை ஸரியாக மதிப்பிடுவதைத் தடுத்திடும் அவனது வறட்டுப் பிடிவாதம் ..  அதனால் , உரிய தக்ஷிணை இல்லாமலே யக்ஞத்தை நடத்தி முடிப்பான் ..  மந்த்ரங்களை ஸரியாக ஓதிடும் தகுந்த நபர்களை ஈடுபடுத்தாமல் , தக்ஷிணையை மிச்சப்படுத்தும் நோக்கத்துடன் , பேரம் பேசி அரைகுறையாக அறிந்தவரை தாமஸி ஈடுபடுத்துவதற்கு அவனது இந்தத் தன்மையே காரணம் ..

ஶ்ரத்தா விரஹிதம் ..  முழு யக்ஞமும் ஶ்ரத்தை இல்லாமலே நடத்தப் படும் ..  தமோ குணியின் மனஸில் லவலேஶமும் ஶ்ரத்தை கிடையாது ..  அவன் ஶ்ரத்தை இல்லாமல் , எவ்வித நோக்கமும் இல்லாமல் , ஈடுபாடும் இல்லாமல் யக்ஞத்தை நடத்தி முடிப்பான் .. 

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...