Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 242


கீதையில் சில சொற்றொடர்கள் - 242


शारीरं तप  ..  (अध्याय १७ - श्लोक १४)
ஶாரீரம் தப  ..  (அத்யாயம் 17 - ஶ்லோகம் 14)
Shareeram Tapa  ..  (Chapter 17 - Shlokam 14)

அர்தம் :  இந்த தபஸ் ஶரீரத்தால் ஆகும் தபஸ் ஆகும் ..

தபஸ் நம் மூன்று வித கருவிகளால் செய்யலாம் ..

இங்கு ஶரீரத்தால் செய்யக் கூடிய தபஸை வர்ணிக்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ..தபஸ் நம் மூன்று வித கருவிகளால் செய்யலாம் ..  இங்கு ஶரீரத்தால் செய்யக் கூடிய தபஸை வர்ணிக்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ..  இந்த ஸந்தர்பத்தில் ஐந்து விஷயங்களைக் குறிப்பிடுகிறார் ..  1)  பூஜனம் ..  2)  ஶௌசம் ..  3)  ஆர்ஜவம் ..  4)  ப்ரஹ்மசர்யம் ..  5)  அஹிம்ஸா ..  இவை ஶரீரத்தால் ஆற்றக் கூடிய தபஸ் ..

அ) .. பூஜனம் ..  தெய்வம் , த்விஜன் , குரு மற்றும் ப்ராக்ஞன் இவர்களின் பூஜை ஶரீரத்தின் தபஸ் ..  தெய்வ பூஜை ..  ஷோடஶ உபசாரங்களுடன் தெய்வ பூஜை ..  தினம் தினம் ஶரீரத்தை ஒரு நிலையில் அமர்த்தி , செய்யப் படும் தெய்வ பூஜை ஶரீரத்தின் தபஸ் ..

ஆ) ..  த்விஜ பூஜை ..  த்விஜனை , ப்ராஹ்மணனை ஸாஷ்டாங்கமாக பூமியில்  விழுந்து நமஸ்கரிக்க வேண்டும் ..  இது ஶீரீரத்தின் தபஸ் ..

இ) ...  குரு பூஜை ..  குருவிற்கு செய்திடும் ஸேவை ஶரீரத்தின் தபஸ் ..   

ஈ) ..  ப்ராக்ஞன் என்பவன் எல்லாம் உணர்ந்தவன் ..  க்ஞானீ  ..  ப்ராக்ஞனை  நமஸ்காரம் செய்ய வேண்டும் ..  ப்ராக்ஞனுக்கு ஸேவை செய்திட வேண்டும் .  மநுஷ்யப் பிறவியில் கிடைத்த இந்த ஶரீரம் பூஜனம் என்ற தபஸ் மூலம் ஶுத்தம் ஆக வேண்டும் ..

(2) ..  ஶௌசம் ..  தூய்மை ..  ஶரீரத்தைத் தூய்மையாக வைத்திட செய்திடும் முயற்சிகளை ஶரீரத்தின் தபஸ் என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ..  தினம் ரெண்டு வேளைகளும் குளிர்ந்த நீரில் ஸ்நானம் மூலம் ஶரீரம் , ப்ராணாயாம் மூலம் ஶ்வாஸ அமைப்பு , முறையான உணவுப் பழக்கம் மூலம் ஜீர்ண அமைப்பு இவை தபஸ் போல அன்றாடம் செய்யப் பட வேண்டியவை ..

(3) ..  ஆர்ஜவம் ..  எளிமை ..  தோற்றத்தில் எளிமை , உடையில் எளிமை , வாக்கில் எளிமை , சிந்தனையில் எளிமை , ஸுலபமாக அணுகி விட முடியும் என்ற நிலை , நேர்மையான நட்புணர்வு இவை அனைத்தும் சேர்ந்து ஆர்ஜவம் ஆகும் ..  இது ஶரீரத்தினால் ஆற்றப் படும் தபஸ் ஆகும் ..

(4) ..  ப்ரஹ்மசர்யம் ..  வஶமான இந்த்ரியங்கள் , காமமற்ற மனஸ் , ப்ரஹ்ம சிந்தனை ..  திருமணம் ஆகாத நிலை அல்ல ..  கட்டுப்பாடுகளுடன் கூடிய விவாஹ வாழ்க்கையும் ப்ரஹ்மசர்யம் ஆக முடியும் ..

(5)  அஹிம்ஸா ..  ஹிம்ஸைக்கு ஶரீரமே ப்ரதான கருவி ..  அடிக்கு பதிலடி .. பழிக்குப் பழி வாங்குதல் , தன் ஸுகத்திற்காக மற்ற உயிர்களையும் அன்ய மநுஷ்யர்களையும் வாட்டுதல் ஆகியவை ஹிம்ஸை எனலாம் ..  பொறுத்துக் கொள்ளுதல் , மன்னித்தல் போன்ற தன்மைகள் அஹிம்ஸையின் வெளிப்பாடு ..  அஹிம்ஸை ஶரீர தபஸ் ஆகும் ..

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...