Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 244


கீதையில் சில சொற்றொடர்கள் - 244


तपः मानसम्  ..  (अध्याय १७ - श्लोक १६)
தபஹ மானஸம்  ..  (அத்யாயம் 17 - ஶ்லோகம் 16)
Tapah Maanasam  ..  (Chapter 17 - Shlokam 16)

அர்தம் :  இந்த தபஸ் மனஸினால் ஆகும் தபஸ் ஆகும் ..

மனஸால் ஆற்றக்கூடிய தபஸை விளக்கும் போது , "(1)  மனஹ ப்ரஸாதஹ , (2) ஸௌம்யத்வம் , (3) மௌனம் , (4) ஆத்ம விநிக்ரஹ , (5) பாவ ஸம்ஶுத்திஹி
என்று ஐந்து விஷயங்களைக் குறிப்பிடுகிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ..

(1)  மனஹ ப்ரஸாதஹ  ..  ப்ரஸாதம் என்றால் மகிழ்ச்சி ..  ஸந்தோஷம்  ..  தோஷம் அதாவது  த்ருப்தி இருந்தால் தான் ஸந்தோஷம் அதாவது மகிழ்ச்சி இருக்கும் ..  மனஸில் குறை இருந்தால் மகிழ்ச்சி இருக்க முடியாது ..  து:கமே இருந்திடும் ..  த்ருப்தி இல்லாமல் உலக விஷயங்களின் பின்னால் அலைந்திடும் மனஸ் அமைதியை இழந்து விடும் ..  நிறைவான மனஸே அமைதியாக இருந்திடும் ..  ஆனந்தமாக இருந்திடும் ..  மனஸின் நிறைவு தான் , பூர்ண த்ருப்தியே மனஹ ப்ரஸாதஹ ..

(2)  ஸௌம்யத்வம் ..  அழகு ..  மனஸில் நிலைக்கும் ஸத் பாவனைகள் , நல்ல பாவனைகளே மனஸின் அழகு ..  ஹிம்ஸை (வன்முறை) , க்ரூரம் , வக்ரம் (கோணல்) , த்வேஷம் (வெறுப்பு) , பொறாமை அதாவது பொறுமை இன்மை ஆகிய பாவங்கள் மனஸின் அழகிற்கு பங்கம் ..  இவை இல்லாத நிலை மனஸின் ஸௌம்யத்வம் , அழகு ..  நேர்மாறாக , அஹிம்ஸை , தயை , அன்பு , நேர்மை , எளிமை , பொறுமை ஆகிய பாவனைகள் இருந்தால் மனஸின் ஸௌம்யத்வம் ... அழகு ..

(3)  மௌனம் ..  அலைகள் இல்லாத , சலனம் இல்லாத மனஸ் ..  அநுகூலம் - ப்ரதிகூலம் , உறவு - பிரிவு , விருப்பு - வெறுப்பு , ஸுகம் - து:கம் போன்ற இருமைகளால் , ரெட்டைகளால் பாதிக்கப் படாத நிலை மனஸின் மௌன நிலை ..  உயர்ந்த சிந்தனைகள் மனஸில் மௌனத்தை நிலைக்கச் செய்யும் ..

(4)  ஆத்ம விநிக்ரஹ (மன அடக்கம்) ..  தன் இஷ்டத்திற்கு அலைய விடாமல் , இந்த்ரிய விஷயங்களுக்குப் பின்னால் அலைய விடாமல் மனஸை நாம் நிஶ்சயித்த விஷயத்தில் லயிக்கச் செய்வதே ஆத்ம விநிக்ரஹம் ..

(5)  பாவ ஸம்ஶுத்தி அதாவது மனத்தூய்மை ..  தூய எண்ணமே பாவ ஸம்ஶுத்தி ..  ஸ்வயநலமும் தற்பெருமையும் இல்லை என்றால் மனஸ் ஶுத்தமாகும் ..

இவை அனைத்தும் மனஸால் ஆற்றப் படும் தபஸ் ஆகும் ..

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...