Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 251


கீதையில் சில சொற்றொடர்கள் - 251


ॐ तत् सत्  ...  (अध्याय १७ - श्लोक २३)
ஓம் தத் ஸத் ...  (அத்யாயம் 17 - ஶ்லோகம் 23)
Om Tat Sat ...  (Chapter 17 - Shloka 23)

அர்தம் :  ஓம் தத் ஸத் ... ஸ்ரீ பரப்ரஹ்ம பரமாத்மாவின் ஶப்த ஸ்வரூபம் ...

ஓம் என்பது ப்ரணவ மந்த்ரம் ..  ஏகாக்ஷர மந்த்ரம் (ஒரு அக்ஷரம்) ...  ஸ்ரீ க்ருஷ்ணன் பத்தாவது அத்யாயமான விபூதி யோகத்தில் , "கிராமஸ்மி ஏகமக்ஷரம்" என்கிறார் ..  "ஏகாக்ஷர மந்த்ரத்தில் என்னைப் பார்க்கலாம்" என்கிறார் ..  ஸ்ரீ பரமாத்மனின் ஶப்த ரூப வெளிப்பாடு ப்ரணவ மந்த்ரம் ..  நிர்குண நிராகார பரம்பொருள் ஓம் என்னும் மந்த்ரம் மூலம் வெளிப்படுகிறார் ..  த்யானம் செய்திட ஓம் ஒரு ஸுலபமானக் கருவி ..

மற்றொரு ஸந்தர்பத்தில் , "அந்திம க்ஷணத்தில் , ஶரீரத்தில் இருந்து உயிர்ப் பிரியும் அந்த க்ஷணத்தில் ஓம் என்ற மந்த்ரத்தில் த்யானம் செய்பவன் என்னை அடைகிறான்" என்று கூறுகிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ..  ஓம் என்ற மந்த்ர உச்சரிப்பு மூலையில் பல்வேறு ஸூக்ஷ்மமான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர் ..  ப்ரணவ மந்த்ர உச்சரிப்பு ஶ்வாஸ ப்ரஶ்னைகள் போன்ற சில ஶரீர உபாதைகளையும் சீர் செய்கிறது ..  மனஸை அமைதி அடையச் செய்கிறது ..

அ , உ , ம் என்ற மூன்று ஶப்தங்களின் தொகுப்பே ஓம் ..  'அ' வின் உச்சரிப்பு அடி வயிற்றில் இருந்தும் , 'உ'வின் உச்சரிப்பு தொண்டையில் இருந்தும் , 'ம்'ன் உச்சரிப்பு உதட்டில் இருந்தும் வருகின்றன ..  இவ்வாறு ஓம் என்ற மந்த்ரம் நம் குரல் அமைப்பு முழுவதையும் உபயோகப் படுத்தி உச்சரிக்கப் படுகிறது ..

ஓம் என்ற மந்த்ரத்தை உச்சரித்து தெய்வீகக் கார்யங்களை , வைதீகக் கர்மங்களை ஆரம்பித்திடும் வழக்கம் உள்ளது ..  வேதத்தின் ஸாரம் ஓம் ..

ஸபைகளில் வைக்கப் படும் தீர்மானங்களுக்கு நம் பாரம்பர்யத்தில் ஓம் என்ற உச்சரிப்புடன் ஒப்புதல் அளிக்கப் படுகிறது ..  பாராட்டுதலை தெரிவிப்பதற்கும் ஓம் என்ற மந்த்ரம் சொல்லப் படுகிறது ..

ஸீக்கியர்கள் 'ஏக் ஓம்காரம்' என்கின்றனர் ..  ஜைனர்கள் தம் ஐந்து மஹாவாக்யங்களில் ஓம் உண்டு ..  புத்த மதத்திலும் ஓம் உண்டு ..  இவ்வாறு , ஓம் என்ற மந்த்ரம் ஒரு விஶ்வ மந்த்ரம் ..

தத் என்பது அது ..  இந்த உலகம் இதம் ..  அவன் தத் ..  அவனை நினைப்பதற்கு தத் என்ற ஶப்தம் உபயோகப் படுகிறது ..  செயல்களை அவனுக்காகச் செய்வது மற்றும் தன்னை அவனுடன் ஐக்யப் படுத்துதல் என்ற நோக்கத்தில் தத் உச்சரிக்கப் படுகிறது ..  படைப்பில் அனைத்தும் அவனுடையவை ..  இந்த ஶரீரம் , இந்த்ரியங்கள் , மனஸ் , புத்தி , எல்லாம் அவனுடையவை ..  யக்ஞம் , தானம் , தபஸ் , ஜபம் , த்யானம் போன்ற கர்மங்களை அவனுக்காகச் செய்தலே உசிதம் ..  தத் உச்சரிப்பு , அவனது நினைவு ..  கார்யங்களை அவனுக்காகச் செய்தல் ..

ஸத் என்பது ஸத்யம் ..  ஒரே ஸத்யம் ..  மற்ற அனைத்தும் மாயை ..  இருப்பது போல தோற்றம் அளிக்கும் ..  ஆனால் இருக்காது ..  நித்யம் அழிந்து கொண்டிருக்கும் ..  அவன் மாத்ரமே , ஸ்ரீ பரமன் மாத்ரமே இருக்கிறார் ..  நித்யம் ஆனவர் ..  யக்ஞம் , தானம் , தபஸ் , ஜபம் , போன்ற கர்மங்கள் அவனே ..  இக்கர்மங்களின் நோக்கமும் அவனே ..  அவனை அடைவதே ..  இந்த கர்மங்கள் ஸத் - கர்மங்கள் ஆகும் ..  அவனை நோக்கி அழைத்துச் செல்லும் கர்மங்கள் ..  அதே போல , ஸத் - புருஷன் , ஸத் - ஸங்கம் , ஸத் - விசாரம் , ஸத் - நிஷ்டை , ஸத் - பாவனை .. என்று பல ஸந்தர்பங்களிலும் ஸத் உபயோகம் ஆகிறது ..  இவை அனைத்தும் ஸ்ரீ பரமனை நினைவு படுத்தக் கூடியவை ..  அவனை நோக்கி ப்ரயாணம் செய்ய நம்மைத் தூண்டுபவை ..  ஸத் மேலோங்கிய புருஷன் ஸத் - புருஷன் ..  நல்லோரின் கூட்டம் ஸத் - ஸங்கம் ..  தூய்மையான எண்ணங்கள் ஸத் விசாரம் ..  கருணை , அன்பு போன்ற பாவனைகள் ஸத் - பாவனை ..  கங்கை , தீர்தம் போன்று உயர்த்தும் விஷயங்களில் நிஷ்டை ஸத் - நிஷ்டை ..

'ஓம் தத் ஸத்' ஒரு மந்த்ரம் ஆகும் ..  ஸ்ரீ தோதாபுரி மஹராஜ் ஸ்ரீ ராமக்ருஷ்ண பரமஹம்ஸருக்கு நிர்விகல்ப ஸமாதியின் தீக்ஷை அளித்த போது , அவர் காதுகளில் இதே மந்த்ரத்தை ஓதினார் ..

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...