Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 252


கீதையில் சில சொற்றொடர்கள் - 252


काम्यानां कर्मणां न्यासं सन्न्यासम् ।  (अध्याय १८ - श्लोक २)
காம்யானாம் கர்மணாம் ந்யாஸம் ஸந்ந்யாஸம் - (அத்யாயம் 18 - ஶ்லோகம் 2)
Kaamyaanaam Karmanaam Nyaasam Sannyaasam ... (Chapter 18 - Shlokam 2)

அர்தம் :  காமத்துடன் கூடிய , விருப்பங்களுடன் இணைந்த கர்மங்களை துறப்பதே ஸந்ந்யாஸம் ...

ஹிந்து தர்மத்தின் அங்கமான ஆஶ்ரம அமைப்பின் ஒரு அம்ஶம் தான் ஸந்ந்யாஸம் ..  உலக வாழ்க்கையின் அந்திம காலத்தில் , முழுமையான வாழ்க்கையை வாழ்ந்து விட்ட பிறகு , உலகத்தில் இருந்து வெளியேறிட , இல்லை , வெளியேற்றத்திற்குத் தயார் செய்திட , ஒரு அழகான அமைப்பு ..  உலக வாழ்க்கை என்றாலே பலப்பலக் கார்யங்களின் தொகுப்பு ..  உலக வாழ்க்கையைத் துறந்து ஸந்ந்யாஸத்தில் புகுதல் என்றால் கார்யங்களைத் துறந்து விடுதல் என்று அர்தம் கொள்ளுதல் ஸஹஜம் ..  அனைத்துக் கார்யங்களையும் துறந்து ,  ஒன்றும் செய்யாமல் இருத்தல் என்பது இயலாத ஒன்று ..  ஶரீரத்தில் பலம் இருந்தால் , ஏதேனும் செயல் புரிவதற்கான தூண்டுதல் அதிகம் ஆகி விடும் ..  ஶரீரத்தில் பலம் இல்லா விட்டாலும் , அவரை மதிக்கிற மநுஷ்யர்கள் , தம்மை அவரது ஶிஷ்யர்கள் என்று சொல்லிக் கொள்ளும் நபர்கள் , அருகில் இருந்தால் , ஆலோசனை சொல்வது தொடரும் ..  செயல்களில் இருந்து விடுபடுதல் மிகக் கஷ்டமான ஒன்று ..  செயல்களைத் துறக்காமல் , அவற்றின் பின்னால் உள்ள விருப்பங்களை , 'ஸ்வந்த - அஜெண்டாவை (agenda)' துறந்து விடுதலே ஸந்ந்யாஸம் என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ..

இன்று ஸந்ந்யாஸிகள் தம்மை க்றிஸ்தவப் பாதிரிகளுடன் ஒப்பிட்டுக் கொண்டு , அவர்களைப் போல ஆஸ்பத்திரிகளும் வித்யாலயங்களும் ஹாஸ்டல்களும் இஞ்ஜினியரிங் கல்லூரிகளும் நடத்துவதில் முனைந்து விட்டனர் ..  அதனால் பேங்க் கணக்குகள் , ராஜாங்க அலுவலகங்கள் , அதிகாரிகள் , லஞ்ஜம் , வரி ஸம்பந்தமான சர்சைகள் , நீதிமன்ற வழக்குகள் , பத்ரிகைகளில் அவஶ்யமற்ற சர்சைகள் , அரசியல்வாதிகளின் குறுக்கீடுகள் என்ற அனைத்தாலும் சூழப்பட்டு வாழ்கின்றனர் ..  சொத்துச் சண்டைகள் , கோஷ்டிப் பூசல்கள் போன்றவையும் ஸந்ந்யாஸிகளை விட்டு வைக்கவில்லை ..

யோகம் , வேதம் , ஆயுர்வேதம் , வேதாந்தம் , பகவத் கீதை , தேவாரம் - திருவாசகம் - ப்ரபந்தம் , தர்ம ஶாஸ்த்ரம் , ஆகமம் , ஸங்கீதம் , ஜ்யோதிஷ ஶாஸ்தரம் ,  ஶில்ப ஶாஸ்த்ரம் , ஸம்ப்ரதாய பஜனை போன்றவை தர்மம் ஸம்பந்தமான  விஷயங்கள் ..  ஸந்ந்யாஸிகள் இவ்விஷயங்களில்  வித்யாலயங்களும் ஹாஸ்டல்களும் நடத்தினால் சிறப்பாக இருக்கும் அல்லவா !!  ஹிந்து தர்மத்தின் காவலாளர்கள் உருவாவார்கள் அல்லவா !!  ஆங்க்ல வழி வித்யாலயங்களும் கல்லூரிகளும் நடத்தி , அமெரிக்க யஜமானர்களுக்கும் , பன்னாட்டு நிறுவனங்களுக்கும் வேலை ஆட்களைத் தயார் செய்கிறோமே அன்றி , தர்மத்தின் மீது ஶ்ரத்தை உள்ள சேவகர்கள் உருவாவதில்லை ..  வ்யாபாரிகளும் அரஸாங்கமும் அதைச் செய்யட்டும் ..  அது ஸந்ந்யாஸிகளின் வேலை இல்லை ..  இன்று ஸ்ரீ ராமதேவ் பாபா யோகம் என்ற ஒரே விஷயத்திற்காக ஹ்ருஷீகேஶில் மிகப் பெரிய பயிற்சி அகம் நடத்துகிறார் ..  ஆயுர்வேத ஆராய்ச்சி கேந்த்ரமும் கல்லூரியும் நடத்துகிறார் ..  ஶங்கர மடம் வேத பாடஶாலைகள் நடத்துகிறது ..  காஞ்சி மடம் நம் தேஶம் முழுவதும் 250க்கும் மேற்பட்ட பாடஶாலைகள் நடத்துகிறது ..  ஸந்ந்யாஸிகள் செய்ய வேண்டியது இதுதான் ..  அதையும் க்ரஹஸ்தர்கள் நிர்வாஹம் செய்ய வேண்டும் ...

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...