Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 262


கீதையில் சில சொற்றொடர்கள் - 262


पृथक्त्वेन नानाभावान्पृथग्विधान वेत्ति सर्वेषु भूतेषु तज्ज्ञानं राजसम् ...  (अध्याय १८ - श्लोक २१)
ப்ருதக்த்வேன நாநா பாவான்ப்ருதக்விதான் வேத்தி ஸர்வேஷு பூதேஷு தஜ்ஞானம் ராஜஸம் ..  (அத்யாயம் 18 - ஶ்லோகம் 21)
Pruthaktvena NaanaaBhaavaan Pruthagvidhaan Vetti Sarveshu Bhooteshu Tajgyaanam Raajasam ..  (Chapter 18 - Shlokam 21)

அர்தம் :  எந்த க்ஞானம் உயிர்களை வெவ்வேறாக , பரஸ்பர ஸம்பந்தம் இல்லாதவையாகக் காண்கிறதோ , அது ராஜஸ க்ஞானம் ..

மேலெழுந்த பார்வை மற்றும் உள்ளார்ந்த பார்வை ...  இதுதான் ரஜோ குணம் மற்றும் ஸத்வ குணத்தின் இடையில் உள்ள முக்ய வித்யாஸம் ..  எது தெரிகிறதோ , எவ்வாறு தெரிகிறதோ அதை அப்படியே பார்ப்பது ராஜஸம் ..  எது தெரிகிறதோ அதை அவ்வாறே பார்த்தாலும் , பின்னால் ஒளிந்து இருப்பதை , புதைந்து இருப்பதை , புறக் காக்ஷியில் புலப்படாததைக் காண்பது ஸாத்வீகம் ..  ராஜஸம் இவ்வுலகத்தை தனித்தனியாக , ஒன்றுக்கொன்று ஸம்பந்தம் இல்லாதகாகக் காண்பதில் ஆஶ்சர்யம் எதுவும் இல்லை ..  புறக் காக்ஷிக்கு படைப்பு வெவ்வேறாக , பரஸ்பர ஸம்பந்தம் இல்லாததாகவே தெரிகிறது ..  பலப்பல வர்ணங்கள் , பலவித ரூபங்கள் , பல ஆற்றல்கள் என்று உலகம் பன்மை நிறைந்ததாகத் தெரிகிறது என்பதில் ஸந்தேஹம் இல்லை ..  தெரிவதே ஸத்யமா ??  ஸ்ருஷ்டியின் பலப்பல ஜீவன்கள் இடையில் பரஸ்பர ஸம்பந்தம் ஏதும் இல்லையா ??  பன்மையின் பின்னணியில் இவற்றை ஒருங்கிணைக்கும் "ஒன்று" ஏதும் கிடையாதா ??  இத்தகைய கேள்விகளை எழுப்பி , அவற்றுக்கு விடை காணும் முயற்சியின் மூலம் நம் பார்வை ஆழத்தை ஊடுருவும் ..  வெளிப்படையான காக்ஷியைத் தாண்டிச் செல்லும் ..  இதற்கான பொறுமையும் மனப்பான்மையும் ராஜஸ குணத்திற்குக் கிடையாது ..  அதனால் ராஜஸ குணத்தை ப்ரதானமாக் கொண்ட மநுஷ்யன் தெரிவதையே பார்க்கிறான் ..  தெரிந்தபடியே பார்க்கிறான் ..

ரஜோ குணீ பல மொழிகளைப் பார்க்கிறான் ..  ஸத்வ குணீ அம்மொழிகளின் மூலம் வெளிப்படும் ஒரே பாவனையைப் பார்க்கிறான் ..  செப்பும் மொழி பதினெட்டுடையாள் ..  எனில் சிந்தனை ஒன்றுடையாள் என்ற பாரதியின் வார்தைகள் ஸாத்வீகத்திற்கு உதாஹரணம் ..

ஸமுதாயத்தில் நிலவும் உணவு , உடை , பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைப் பார்த்துப் பிரித்திடும் ராஜஸம் ..  ஸாத்வீகம் உணவு , உடை , பழக்க வழக்கங்கள் இவற்றில் தெரியும் பன்மைக்குப் பின்னணியில் இழைந்து ஓடும் ஒரே வாழ்க்கைக் கண்ணோட்டத்தைப் பார்த்து , இணைத்திடும் ..

ராஜஸம் பலவித உருவங்கள் , பலவித ஆற்றல்கள் , பலவித பயன்பாடுகள் கொண்ட ஶரீர அங்கங்களை வெவ்வேறாகப் பார்க்கிறது ..  ஶரீரத்தைக் கூறு போட்டு அங்கங்களை ஆராய்ந்து அறிகிறது ..  நோய்க் காலத்தில் அங்கங்களுக்கு வெவ்வேறு உபசாரங்களைச் செய்கிறது ..  ஸாத்வீகம் அங்கங்களை இணைத்திடும் ஒரே ப்ராண ஶக்தியைப் பார்க்கிறது ..  நோய்க்காலத்தில் ப்ராண ஶக்தியை வலுப்படுத்தி நோயைத் தீர்க்க முயல்கிறது ..

ராஜஸம் ஸம்ஸாரத்தை பன்மை நிறைந்த ஸ்ருஷ்டியாகப் பார்க்கிறது ..  ஸாத்வீகம் பன்மையாகத் தெரிந்திடும் அனைத்திலும் உறைந்திடும் ஒரே  பரமாத்மனைப் பார்க்கிறது ..  ஒரே ஸூத்ரத்தில் கோர்த்திடும் படைத்தவனைக் காண்கிறது ..

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...